மேலும் அறிய

உயிரிழப்பு இல்லாமல் கொரோனா நோயாளிகளை குணமாக்கி வரும் அரசு சித்த மருத்துவமனை!

விழுப்புரம் அரசு சித்த மருத்துவனையில், ஆக்சிஜன் அளவு குறைந்தாலும் சிகிச்சை அளித்து நோயாளிகளை குணமாக்கி சாதனை படைத்து வருகின்றனர்.

விழுப்புரம் அரசு சித்த மருத்துவனையில் இதுவரை 493 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட தற்போது வரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

உயிரிழப்பு இல்லாமல் கொரோனா நோயாளிகளை குணமாக்கி வரும் அரசு சித்த மருத்துவமனை!

விழுப்புரம் அருகே கொரோனா சிகிச்சைக்காக சித்த மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது. சென்னை, சாலிகிராமம் பகுதியில் சித்த மருத்துவர் வீரபாபு தலைமையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆங்கில மருத்துவ சிகிச்சையோடு, சித்த மருத்துவர்களை சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்திருந்தது. இதையடுத்து சித்தா, ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் சிறப்பு சித்தமருத்துவ மனையில் இதுவரை கொரோனா பாதித்த 493 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை. அது மட்டுமல்ல ஆக்சிஜன் மட்டம் குறைந்து மூச்சு விட சிரமப் பட்டவர்கள்கூட குணமாகி சென்றுள்ளனர்.கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆங்கில மருத்துவத்தை அனைவரும் நாடுகின்றனர். சிலர் மட்டுமே சித்த மருத்துவத்தை தேடி வருகின்றனர். அப்படி தேடி வருகிறவர்களை தேற்றி அனுப்புகிறது இந்த சிறப்பு மருத்துவமனை. நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்கள். அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று நாட்களில் குணப்படுத்தப் பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு அனுப்புவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

உயிரிழப்பு இல்லாமல் கொரோனா நோயாளிகளை குணமாக்கி வரும் அரசு சித்த மருத்துவமனை!

சித்த மருத்துவ ரீதியில் இங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர் பிரபு கூறும்போது, முதலில் அனுமதிக்கப்படும் அனைவருக்கும் வேப்ப இலை மாத்திரை, தாளிசாதி சூரணம் போன்ற சித்த மருத்துவ சூரணம், உரிய மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு கிராம்பு குடிநீர், ஆடாதோடை சிரப் போன்றவை வழங்கப்பட்டு 10 நிமிடத்திலிருந்து 30 நிமிடத்திற்குள் அவர்களுக்கான ஆக்சிஜன் அளவை சீராக்குகிறோம். தினமும் கபசுரக் குடிநீர் நிலவேம்பு குடிநீர் மற்றும் ஐந்து மூலிகை கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தினமும் கபசுரக் குடிநீர்,நிலவேம்பு குடிநீர் மற்றும் ஐந்து மூலிகை கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் அந்த சிறப்பு மருத்துவமனையில் தயார் செய்யப்படுகிறது. அத்துடன் திருமூலர் பிராண பயிற்சி மற்றும் யோகாசனங்களும் கற்பிக்கப் படுகின்றன.மேலும் சிகிச்சை முடித்து வீடு திரும்புகிறார்களுக்கு ஆரோக்கிய மருத்துவ மருந்துகள் அடங்கிய மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

உயிரிழப்பு இல்லாமல் கொரோனா நோயாளிகளை குணமாக்கி வரும் அரசு சித்த மருத்துவமனை!

இந்த மருத்துவ மனையில் பிரபு,சுபாஷினி, பொன்மொழி ஆகிய மூன்று மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவதாகவும், ஒவ்வொரு மருத்துவருக்கும் இரண்டு உதவியாளர்கள் ஒரு செவிலியர் உடன் இருப்பதாகவும் தெரிவிக்கிறார் மாவட்ட சித்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் மாலா. 150 படுக்கைகள் தற்போது தயார் நிலையில் இருந்து வருவதாகவும் இன்றுவரை 94 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்வதாகவும் தெரிவிக்கின்றனர் . 

உயிரிழப்பு இல்லாமல் கொரோனா நோயாளிகளை குணமாக்கி வரும் அரசு சித்த மருத்துவமனை!

அந்த மருத்துவ குழுவினர். மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் சித்த மருத்துவத்தை நாடி வருவது இல்லை என்றும் வேதனைப்படுகின்றனர். அரசு சித்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினால் அதிக அளவில் நோயாளிகள் குணமாகி செல்லுவதற்கு வாய்ப்பு இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய  போலீஸ்
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய போலீஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்Eknath Shinde | ”ஏக்நாத் ஷிண்டே துரோகியா?”காமெடியனை மிரட்டும் சிவசேனா சூறையாடப்பட்ட STUDIO...!Vignesh Puthur Profile | CSK-வை கதறவிட்ட விக்னேஷ் புதூர் யார்? AUTO DRIVER மகன் To IPL நாயகன்! | MI | Chennai Super Kings | IPL 2025 | Dhoni

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய  போலீஸ்
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய போலீஸ்
Savukku Shankar: சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Pawan Kalyan's Politics: இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
Embed widget