பறந்து செல்லவா.. பறந்து செல்லவா... வாகமன்னில் சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்திய பாரசூட் நிகழ்ச்சி..!
இந்த ஆண்டுக்கான பாராசூட் நிகழ்ச்சி வாகமன் நகரில் உள்ள சாகச பூங்காவில் தொடங்கியது. இதில் 11 நாடுகளை சேர்ந்த 49 பேர் பாராசூட்டில் பறப்பதற்காக பதிவு செய்திருந்தனர்.
வானை முட்டும் நீல மலைகள், வளைந்து நெளிந்து ஓடும் ஆறுகள், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள், அடர்ந்த பைன் மரக்காடுகள் என இயற்கையின் செல்லக்குழந்தையாக திகழ்ந்துவரும் வாகமன் மலைவாசஸ்தலம், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், கோட்டயம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 50 அழகு பிரதேசங்களில் வாகமண் ஸ்தலத்தையும் சேர்த்து பட்டியலிட்டுள்ளது ‘நேஷனல் ஜியாகிரபிக் டிராவலர்' பத்திரிகை. அதுமட்டுமல்லாமல் ‘ஆசியாவின் ஸ்காட்லாந்து' என்றும் புகழப்படும் வாகமன் மலைவாசஸ்தலம் கேரளாவின் முதன்மை சுற்றுலாத் தலங்களில் ஒன்று.
குறிப்பாக தமிழக, கேரள எல்லையான குமுளி அருகே உள்ள இடுக்கி மாவட்டம் வாகமன்னில் புதிதாக அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக வாகமன் உள்ளது. வாகமன்னில் சிறிய சாரலோடு மேகங்கள் தழுவ பச்சை பசேல் என்று இருக்கும் மலைத் தொடர்களை காண்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவது வழக்கம்.
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பாராகிளைடிங், அட்வென்சர் ஜோன், பர்மா பிரிட்ஜ், ரோஸ்பார்க் என பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் 120 அடி நீளத்தில் கண்ணாடி பாலம் கேரள சுற்றுலாத்துறை மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட்டு இருப்பது மேலும் சுற்றுலாப் பயணிகளிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. மிக நீளமான கண்ணாடி பாலத்தை பார்வையிட கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. துவக்கத்தில் நுழைவு கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்த நிலையில் ரூ.250 ஆக குறைக்கப்பட்டது. கண்ணாடி பாலத்தில் பத்து நிமிடங்கள் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நுழைவுக் கட்டணம் ரூ.250 அதிகமாக உள்ளதாகவும் அதை 100 ஆக குறைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சர்வதேச சுற்றுலாதலமான வாகமன்னிற்கு தினமும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் மாநில சுற்றுலா வளர்ச்சித்துறை, மாநில சாகச மேம்பாட்டுத்துறை சார்பில் ஆண்டுதோறும் பாராசூட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பாராசூட் நிகழ்ச்சி வாகமன் நகரில் உள்ள சாகச பூங்காவில் தொடங்கியது. இதில் 11 நாடுகளை சேர்ந்த 49 பேர் பாராசூட்டில் பறப்பதற்காக பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரக்காலமாக வாகமண்ணில நடைபெற்ற பாராசூட் நிகழ்ச்சியில் உள்நாடு, மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
இதனிடையே ஒரு வாரகாலமாக நடைபெற்ற பாராசூட் நிகழ்ச்சிக்கான நிறைவு விழா நிகழ்ச்சியில் கேரள மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் அவர்கள் கலந்துக்கொண்டு பாராசூட் சாகச பயணத்தை மேற்க்கொண்டு மகிழ்ந்தார். இதற்கிடையே இறுதி நாளில் சுற்றுலாபயணி பலர் பாராசூட் பயணத்தை மேற்க்கொண்டனர். தொடர்ந்து பாராசூட் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் போன்றவையும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் மேலும் இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

