மேலும் அறிய

திருவண்ணாமலையில் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டு மற்றும் நடுகற்கள் கண்டெடுப்பு

’’திருவண்ணாமலை அடுத்த ஜவ்வாதுமலையில் 11 வது நூற்றாண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’’

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டம் கோவிலூர் பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன், மதன்மோகன், ஸ்ரீதர், பழனிச்சாமி, நந்தகுமார், ஆகியோர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மூன்று செக்கு கல்வெட்டுகளும் இரண்டு நடுகற்களும் கண்டெடுக்கபட்டன . 

இது குறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகனிடம் பேசுகையில்;

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் அமைந்துள்ள கோவிலூர் கிராமத்தில் உள்ள திருமூலநாதர் சிவன் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய பல கல்வெட்டுகள் உள்ளன. இக்கோவிலின்  அருகில் அண்மையில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 3 செக்கு கல்வெட்டுகளும் 3 நடுகற்களும் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. 

திருவண்ணாமலையில் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டு மற்றும் நடுகற்கள் கண்டெடுப்பு

இதில் உள்ள 2 செக்கு கல்வெட்டில் 10 ஆம் ஆண்டு எழுத்தமைதியில் கல்வெட்டு அமைந்துள்ளது. இக்கல்வெட்டு “ஸ்ரீ பரதன் கூரிதனநன் மகன் றிக்கு “ என்று வெட்டப்பட்டுள்ளனது. இதன் பொருள் ஸ்ரீபரதன் என்பவர் மகன் இச்செக்கை செய்தளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு செக்கில் ஸ்ரீறைபொ மகன்  என்று உள்ளது. இதன் பொருளும் செக்கு செய்து கொடுத்தவர்களின் பெயராக இருக்க வாய்ப்புள்ளது. இது அதிகமான பொறிந்து போய் உள்ளதால் படிக்க இயலவில்லை. அதே போல் இப்பகுதியில் கண்டெடுக்கபட்ட மூன்று நடுகற்கலில் ஒன்று உடைந்தும் மற்றொன்று சாய்ந்தும் உள்ளது. நல்ல நிலையில் உள்ள நடுகல்லில் கல்வெட்டு படிக்க முடியாத அளவிற்கு பொரிந்து போய் உள்ளதால் அவற்றையும் முழுமையாக படிக்க இயலவில்லை. இதன் காலமும் 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டு காலமாக இருக்கலாம் 

திருவண்ணாமலையில் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டு மற்றும் நடுகற்கள் கண்டெடுப்பு

இந்த செக்குகள் மூலம் அந்த காலத்தில் எண்ணெய் உற்பத்தி செய்து மக்கள் பயன்பாட்டிற்கும் கோயில் விளக்கு எரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இந்த செக்குகள் மூலம் இரண்டு புதிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. ஏற்க்கனவே கோவிலில் கிடைக்க பெற்ற  கல்வெட்டுகள் மூலம் இக்கோவிலின் காலம் இதுவரை 12 ஆம் நூற்றாண்டு என கணிக்கபட்டிருந்தது. இந்த கோயிலில் சிவனுக்கு விளக்கு ஏற்றவும் மக்களின்  பயன்பாட்டிற்கும் எண்ணெய் உற்பத்தி செய்ய 3 செக்குகள் ஏற்படுத்தப்பட்டன என்றும் அறியலாம்.

இதன் மூலம் கோயிலின் காலம் 2 நூற்றாண்டுகள் முன்னோக்கி செல்கின்றது. இரண்டாவதாக கோவிலூர் சிவன் கோயில் அருகே ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புலிகுத்திப் பட்டான் நடுகல்லிலும் மங்கல பரதன் மகன் வில்லி என்பவர் இறந்த செய்தி வருகிறது. இந்த பரதன் என்ற பெயர் இந்த செக்கு கல்வெட்டிலும் வருகிறது. எனவே இந்த பகுதியை பரதன் என்ற வம்சா வழியை சேர்ந்தவர்களின் ஆளுகைக்கு கீழ் இப்பகுதி இருந்தது என அறியலாம். இவையும் ஆய்வுக்குரியவைகளாகும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget