மேலும் அறிய
Tamilnadu Roundup: ராக்கெட்டை விட கூடுதல் வேகத்தில் தங்கம் விலை, 3,274 அரசு பணியிடங்கள்- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
- மும்மொழிக்கொள்கையில் ஒரு மொழியைக் கூட நிறைவேற்றாமல் தோல்வி அடைந்தவர்கள் இருமொழிக்கொள்கையில் வெற்றி அடைந்த தமிழ்நாட்டை பற்றி பேசலாமா? - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- “நாங்கள் ஒன்றும் பாஜகவுக்கு அடிமையில்லை” - அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி
- தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 3,274 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து இதுவரை இல்லாத புதிய உச்சமாக 66 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சாலைகளில் மக்கள் நடமாடமுடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது - ஓபிஎஸ்
- கன்னியாகுமரி: இரணியல் அருகே ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் அடுக்கப்பட்டிருப்பதை கண்டு ரயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
- சேலம் ரவுடி ஈரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது
- கடலூரில் போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் மீது துப்பாக்கிச்சூடு - காலில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதி
- கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த கலால் ஆய்வாளர்கள் கவிதா மற்றும் பாண்டி செல்விக்கு மீண்டும் பணி
- பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து! பிற்பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது!
- கிண்டி பேருந்து நிலையத்தில் கபிலன் என்பவரிடம் செல்போனை பறித்துச் சென்ற நந்தனம் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது! சூர்யா என்ற மாணவன் சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும், 17 வயதுடைய மற்றொரு மாணவன் கெல்லிஸ் அரசு கூர்நோக்கு இல்லத்திலும் அடைப்பு
- கோவையில் 15 ஆண்டுகளாக பாம்பு பிடித்து வந்த சந்தோஷ் என்பவர், எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
- தமிழ்நாடு அரசுக்கு எதிராக பதாகைகளுடன் காரில் வந்த திருவள்ளூர் மாவட்ட பாஜகவினர் 5 பேர் கைது
- இலங்கை கடற்படை கைது செய்த நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்களை நீதிமன்றம் விடுதலை செய்ததை அடுத்து, விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
க்ரைம்
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion