மேலும் அறிய

Sathanur Dam: சாத்தனூர் அணை திறப்பால் பயன்பெறும் 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் - விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் சாத்தனூர் அணை இடது மற்றும் வலது புற கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.

திருவண்ணாமலை  மாவட்டம் மற்றும்  விழுப்புரம் மாவட்டம்  ஆகிய பகுதிகளில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் மற்றும் திருக்கோயிலூர் ஆயக்கட்டு பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் உள்ளிட்ட 55 ஆயிரம் ஏக்கர் விவசாய பாசன பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது சாத்தனூர் அணை.

சாத்தனூர் அணை:

தெண்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் முழு நீர் மட்ட உயரம் 119 அடியாகும். அணையின் முழு கொள்ளளவு 7321 மில்லியன் கன அடியாகும். தொடர் கன மழை மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சாத்தனூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

தற்போது சாத்தனூா் அணையின்  நீர்மட்டம் 118.55 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு இன்று காலை நிரவலப்படி 7220 மில்லியன் கன அடியாக உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் சாத்தனூா் அணையில் இருந்து மாா்ச் முதல் வாரத்தில் விவசாய பாசனத்திற்க்காக இடது மற்றும் வலது புற கால்வாய்களின் வழியே  தண்ணீா் திறந்து விடப்படும். 

 


Sathanur Dam: சாத்தனூர் அணை திறப்பால் பயன்பெறும் 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் - விவசாயிகள் மகிழ்ச்சி

 

45 ஆயிரம் ஏக்கர்:

அதன்படி விவசாய பாசனத்திற்கு சாத்தனூா் அணையில் இருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இடது மற்றும் வலது புற கால்வாய்களில் இருந்து 570 கன அடி வீதம் தண்ணீரை திறந்து வைத்தார். விவசாய பாசனத்திற்காக தொடந்து 90 நாட்கள் இடது புற கால்வாயில் 350 கன அடி தண்ணீரும் மற்றும் வலது புற கால்வாயில் 220 கன அடி தண்ணீரும்  திறந்து விடப்படும்.

இதனால் திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். திருவண்ணாமலை சாத்தனூர் அணையின் பிக்கப் அணைக்கட்டில் உள்ள இடது மற்றும் வலது புற கால்வாயில் இருந்து தண்ணீரை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திறந்து வைத்தார். இதில் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு பிச்சாண்டி .மாவட்ட ஆட்சியர் முருகேஷ். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை. மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் .சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி.பெ.சுதி. சரவணன். உதயசூரியன். உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றார். 

 

 


Sathanur Dam: சாத்தனூர் அணை திறப்பால் பயன்பெறும் 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் - விவசாயிகள் மகிழ்ச்சி

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு;

விவசாய பாசனத்திற்கு சாத்தனூர் அணை தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை முறையாக பயன்படுத்தி விவசாய பொருட்களை விவசாயிகள் அதிகளவு உற்பத்தி செய்ய வேண்டுமென பொதுப்பணித்துறை அமைச்சர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற வகையில் நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து தற்போது வரை விவசாயத்திற்காக தனி பட்ஜெட் போடப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் தயாராக உள்ளதாகவும், விவசாயத்திற்கு ஆதாரமாக இருப்பது தண்ணீர் அந்த தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாய பொருட்களை அதிகளவு உற்பத்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget