மேலும் அறிய

Palladam Crime: பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை: போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற நபருக்கு கால் முறிவு..

பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான செல்லமுத்து என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான செல்லமுத்து என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்

தமிழகத்தையே உலுக்கி உள்ளது திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடந்த படுகொலைகள் சம்பவம். அங்குள்ள கள்ளக்கிணறு கிராமத்தில்   ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள், 2 ஆண்கள் என 4 பேர் அரிவாளால் நேற்று முன்தினம் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவர் தவிடு, புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார்.இவரது வீட்டின் அருகேயுள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் சம்பவம் நடந்த தினத்தன்று 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது அருந்தியுள்ளனர். 

இதனை செந்தில் குமார் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செந்தில் குமாரை சரமாரியாக வெட்டியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த சித்தப்பா மகன் மோகன்ராஜ் அங்கு ஓடி வந்துள்ளார். செந்தில் குமாரை காப்பாற்ற முயன்ற நிலையில், மோகன்ராஜையும் அந்த கும்பல் வெட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சத்தம் கேட்டு, மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி, மற்றும் அவரின் அக்கா ரத்தினாம்பாள் இருவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

தங்கள் மகன்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினர். ஆனால் அந்த கும்பல் பெண்கள் என்றும் பாராமல் இவர்கள் இருவரையும் வெட்டி கொன்றது. இதனையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

கைது செய்யப்பட்டவருக்கு கால் முறிவு 

இதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாகவே இந்த கொலைகள் நடைபெற்றுள்ளதாக கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகினது. மேலும் கொலையாளிகளை கைது செய்யாதவரை உடல்களை வாங்க மாட்டோம் என இறந்தவர்களின் உறவினர்கள், ஊர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக பல்லடத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

இப்படியான நிலையில்  பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தொட்டம்பட்டி என்ற இடத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை காட்டுவதாக கூறி போலீசாரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற நிலையில் கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க: தாயின் காதலனை போட்டு தள்ளிய மகன்..! பலமுறை கண்டித்தும் கேட்காததால் ஆத்திரம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
Embed widget