மேலும் அறிய

Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்

மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, நிகிதாவிடம் நடத்திய விசாரணையில், அவர் கொடுத்த புகார் பொய் என்பதை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மடப்புரம் அஜித்குமார் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட விவாகரத்தில், சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையின் மூலம், அவர் பொய் புகார் கொடுத்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரியவருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொய் புகார் என சிபிஐ அதிகாரிகள் முடிவு

மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட அஜித்குமாரின் தாய், சகோதரர், நண்பர்கள் என பலரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையின்படி, ஜூன் 27-ம் தேதி கோவிலுக்கு வந்த நிகிதா, கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அஜித்குமாரிடம் தனது காரை பார்க் செய்து தருமாறு கூறி, சாவியை கொடுத்துள்ளார். அவரும் அந்த சாவியை வாங்கி, அருகில் இருந்த ஆட்டோ ட்ரைவர் அருணிடம் கொடுத்து, காரை கோவில் எதிரில் உள்ள பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, 2 நிமிடங்களில் சாவியை மீண்டும் நிகிதாவிடம் அஜித்குமார் கொடுத்துள்ளார்.

ஆனால், நிகிதா கொடுதத புகாரில், கார் சாவியை நீண்ட நேரம் கழித்தே அஜித்குமார் கொடுத்ததாக தெரிவித்திருந்தார். அதோடு, காரை, அஜித்குமாரும் அவரது நண்பரான ஆட்டோ ஓட்டுநர் அருணும் சேர்ந்து, வடகரை வரை ஓட்டிச் சென்றதாக கூறப்பட்டது. அதனால், சிபிஐ அதிகாரிகள், தங்களது முதல் நாள் விசாரணையை வடகரையில் இருந்தே தொடங்கினர்.

அப்போது, வடகரைக்கு வரும் வழியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தபோது, கார் வந்துபோனதாக தெரியவில்லை. இதில் மற்றொரு திருப்பமாக, காரை நிகிதாவே ஓட்டிச் சென்று, மீண்டும் அவரே ஓட்டி வருவது சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

அதேபோல், நிகிதாவின் காரை, மடப்புரம் கோவில் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, இரண்டு நிமிடங்களில் சாவியை மீண்டும் ஒப்படைத்துள்ளனர். அதன்பின்னர், பார்க்கிங்கிலிருந்து 8 நிமிடங்களில் மீண்டும் காரை எடுதது வந்து கொடுத்துள்னர். அதனால், கோவிலுக்கு நிகிதா காரில் வந்த பின்பு, அங்கிருந்து கார் வெளியே எங்கும் செல்லவில்லை என தெளிவானது.

இப்படி முரண்பட்ட தகவல்களை, விசாரணையின்போது சிபிஐ அதிகாரிகளிடம் நிகிதா தெரிவித்ததையடுத்து, அஜித்குமார் மீது அவர் பொய் புகாரையே அளித்துள்ளதாக, சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியான அஜித்குமார், நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக, சிறப்பு தனிப்படையைச் சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிகிதாவிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணைக்கு பின்பு வெளியான தகவலால், இப்படி, ஒரு பொய்ப் புகாருக்காகவா ஒரு அப்பாவி இளைஞனை காவலர்கள் அடித்துக் கொன்றார்கள் என்று பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Schools Colleges Leave: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Schools Colleges Leave: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Embed widget