மேலும் அறிய

Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்

மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, நிகிதாவிடம் நடத்திய விசாரணையில், அவர் கொடுத்த புகார் பொய் என்பதை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மடப்புரம் அஜித்குமார் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட விவாகரத்தில், சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையின் மூலம், அவர் பொய் புகார் கொடுத்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரியவருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொய் புகார் என சிபிஐ அதிகாரிகள் முடிவு

மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட அஜித்குமாரின் தாய், சகோதரர், நண்பர்கள் என பலரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையின்படி, ஜூன் 27-ம் தேதி கோவிலுக்கு வந்த நிகிதா, கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அஜித்குமாரிடம் தனது காரை பார்க் செய்து தருமாறு கூறி, சாவியை கொடுத்துள்ளார். அவரும் அந்த சாவியை வாங்கி, அருகில் இருந்த ஆட்டோ ட்ரைவர் அருணிடம் கொடுத்து, காரை கோவில் எதிரில் உள்ள பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, 2 நிமிடங்களில் சாவியை மீண்டும் நிகிதாவிடம் அஜித்குமார் கொடுத்துள்ளார்.

ஆனால், நிகிதா கொடுதத புகாரில், கார் சாவியை நீண்ட நேரம் கழித்தே அஜித்குமார் கொடுத்ததாக தெரிவித்திருந்தார். அதோடு, காரை, அஜித்குமாரும் அவரது நண்பரான ஆட்டோ ஓட்டுநர் அருணும் சேர்ந்து, வடகரை வரை ஓட்டிச் சென்றதாக கூறப்பட்டது. அதனால், சிபிஐ அதிகாரிகள், தங்களது முதல் நாள் விசாரணையை வடகரையில் இருந்தே தொடங்கினர்.

அப்போது, வடகரைக்கு வரும் வழியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தபோது, கார் வந்துபோனதாக தெரியவில்லை. இதில் மற்றொரு திருப்பமாக, காரை நிகிதாவே ஓட்டிச் சென்று, மீண்டும் அவரே ஓட்டி வருவது சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

அதேபோல், நிகிதாவின் காரை, மடப்புரம் கோவில் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, இரண்டு நிமிடங்களில் சாவியை மீண்டும் ஒப்படைத்துள்ளனர். அதன்பின்னர், பார்க்கிங்கிலிருந்து 8 நிமிடங்களில் மீண்டும் காரை எடுதது வந்து கொடுத்துள்னர். அதனால், கோவிலுக்கு நிகிதா காரில் வந்த பின்பு, அங்கிருந்து கார் வெளியே எங்கும் செல்லவில்லை என தெளிவானது.

இப்படி முரண்பட்ட தகவல்களை, விசாரணையின்போது சிபிஐ அதிகாரிகளிடம் நிகிதா தெரிவித்ததையடுத்து, அஜித்குமார் மீது அவர் பொய் புகாரையே அளித்துள்ளதாக, சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியான அஜித்குமார், நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக, சிறப்பு தனிப்படையைச் சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிகிதாவிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணைக்கு பின்பு வெளியான தகவலால், இப்படி, ஒரு பொய்ப் புகாருக்காகவா ஒரு அப்பாவி இளைஞனை காவலர்கள் அடித்துக் கொன்றார்கள் என்று பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal special train: நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
Gold Rate Reduced Jan.7th: ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal special train: நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
Gold Rate Reduced Jan.7th: ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
Honda Shine 100: குறைவான விலையில் 65 கி.மீ மைலேஜ்; ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் ஹோண்டா ஷைன் 100
குறைவான விலையில் 65 கி.மீ மைலேஜ்; ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் ஹோண்டா ஷைன் 100
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
Nissan Tekton Launch: க்ரெட்டாவிற்கு டஃப் கொடுக்க வரும் நிசான் டெக்டான் அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
க்ரெட்டாவிற்கு டஃப் கொடுக்க வரும் நிசான் டெக்டான் அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
Embed widget