மேலும் அறிய

’முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான எப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது என்ன?’ - முழு விவரம்..!

அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 28.78 கோடி சொத்து சேர்த்தாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா தலைமையிலான 2011 முதல் 2016ம் ஆண்டு மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஆகியவற்றில் தமிழ்நாட்டின் அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கே.சி.வீரமணி. கடந்த 10 ஆண்டு காலமாக அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த கே.சி.வீரமணி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது எழுந்த புகாரை அடுத்து இன்று காலை 6.30 மணி முதல் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வேலூர், அரக்கோணம், பெங்களூர் என்று 28 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், இந்த புகாரின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், 2016-21 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்தாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அவர் ரூபாய் 28.78 கோடிக்கு சொத்துக்களை அதிகமாக சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது’முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான எப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது என்ன?’ - முழு விவரம்..!

கே.சி.வீரமணி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவர் பெயரிலும், அவரது தாயார் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளார் என்றும் அந்த FIR-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம், தனி நபர்கள் சார்பில் கே.சி.வீரமணி மீது இந்த சொத்துக்குவிப்பு புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வழக்குப்பதிவு செய்து 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீத அளவு சொத்துக்களை குவித்துள்ளார் என்பது இந்த முதல் தகவல் அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.


’முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான எப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது என்ன?’ - முழு விவரம்..!

வேலூர் மாவட்டத்தில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான பாலாறு என்ற விவசாய கல்லூரியில் 10க்கும் மேற்பட்ட லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த கல்லூரியில் முக்கிய ஆவணங்கள் உள்ள அறைகளில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தங்களது சோதனையைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, கே.சி.வீரமணிக்கு மிகவும் நெருக்கமான வேலூர் சத்துவாச்சேரியில் உள்ள கர்னல் என்பவரது வீடு மற்றும் அவரது நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, கே.சி.வீரமணிக்கு நெருக்கமான மற்றொரு நபராகிய ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


’முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான எப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது என்ன?’ - முழு விவரம்..!

மேலும், இன்று அதிகாலை முதலே ஜோலார்பேட்டையில் உள்ள வீரமணிக்கு சொந்தமான வீடு, திருமண மண்டபம் மற்றும் ஏலகிரியில் உள்ள சொகுசு ஹோட்டலிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது வரை வேலூர் மற்றும் திருப்பத்தூரில் ரொக்கமாக எதுவும் கைப்பற்றப்படாவிட்டாலும், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பெங்களூர் மற்றும் சென்னையில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025): வருகிறாள் தனலட்சுமி! லாட்டரியில் இன்று யாருக்கு என்ன பரிசுகள்?
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025): வருகிறாள் தனலட்சுமி! லாட்டரியில் இன்று யாருக்கு என்ன பரிசுகள்?
Embed widget