மேலும் அறிய

Rafale Jets: ஆப்ரேஷன் சிந்தூரின் தாக்கம் - கூடுதல் ரஃபேல் விமானங்கள் வாங்க இந்தியா திட்டம், அதுவும் நேரடியாக..

Rafale Jets: ஆப்ரேஷன் சிந்தூரை தொடர்ந்து கூடுதல் ரஃபேல் போர் விமானங்களை வாங்க, இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rafale Jets: ஆப்ரேஷன் சிந்தூரின் போது நீண்ட தூர எல்லை தாண்டிய தாக்குதலில் ரஃபேல் போர் விமானம் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் ரஃபேல் விமானங்கள் வாங்க திட்டம்:

இந்திய விமானப்படை கூடுதலாக புதிய ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அரசுகளுக்கு இடையேயான நேரடி ஒப்பந்தம் மூலம் ஃப்ரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யவும் விரும்புகிறதாம். அந்நாட்டுடனான  114 மல்டி-ரோல் ஃபைட்டர் ஏர்கிராஃப்ட் (MRFA) வாங்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் ரஃபேல் போர் விமானங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சிலின் (DAC) தேவையை (AoN) ஒப்புக்கொள்ளும் முடிவுக்காக காத்திருக்கும் இந்த திட்டம், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆப்ரேஷன் சிந்தூரின் தாக்கம்

கூடுதல் ரஃபேல் விமானங்களுக்கான அழுத்தம் ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு அதிகரித்துள்ளதாம். அந்த ராணுவ நடவடிக்கையின் போது, நீண்ட தூர எல்லை தாண்டிய தாக்குதலில் ரஃபேல் போர் விமானங்கள் முக்கிய பங்காற்றின. அதேநேரம், சீனாவில் தயாரிக்கப்பட்ட j-10 போர் விமானங்களை PL-15 ஏவுகணைகளுடன் சேர்த்து பாகிஸ்தான் பயன்படுத்தியது. அதன் மூலமாக இந்தியாவின் 3 ரஃபேல் விமானங்கள் உட்பட 6 போர் விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறினாலும், மத்திய அரசு அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

குறையும் விமானப்படையின் வலிமை:

இந்திய விமானப்படையில் உள்ள ஸ்குவாட்ரன்களின் எண்ணிக்கை ஏற்கனவே 31 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில், கடைசியாக பயன்பாட்டில் உள்ள MiG-21 ஸ்குவாட்ரன்களும் அடுத்த மாதம் ஓய்வு பெற்றால், விமானப்படையில் உள்ள ஸ்குவாட்ரன்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவில் 29 ஆக குறைய உள்ளது.  சீனா மற்றும் பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தேவையான அங்கீகரிக்கப்பட்ட 42.5 படைப்பிரிவுகளை விட இந்திய விமானப்படை மிகவும் குறைவான போர் விமானங்களையே கொண்டுள்ளது.  பாகிஸ்தானுக்கு குறைந்தபட்சம் 40 J-35A ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்க சீனா தயாராகி வருவதால், கூடுதல் ரஃபேல் போர் விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

விமானப்படையை வலுப்படுத்த கோரிக்கை

ரஃபேல் போர் விமானக் குழுவை விரிவுபடுத்துவது புதிய உலகளாவிய டெண்டரை வெளியிடுவதை காட்டிலும் வேகமாகவும் செலவு குறைந்ததாகவும் இருக்கும் என்று இந்திய விமானப்படை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்தியா ஏற்கனவே அம்பாலா மற்றும் ஹசிமராவில் 36 ரஃபேல் விமானங்களை பயன்படுத்துகிறது. இரண்டும் தலா ஒரு கூடுதல் ஸ்குவாட்ரனை சேர்க்கும் திறன் கொண்டவை. கடற்படைக்கும் இதேபோன்ற தளம் தயாராகி வருகிறது. ஏப்ரல் மாதம் கையெழுத்தான ரூ.63,887 கோடி ஒப்பந்தத்தின் கீழ் 2028 ஆம் ஆண்டு முதல் 26 ரஃபேல்-எம் ஜெட் விமானங்கள் விமானக் கப்பல் INS விக்ராந்தில் சேர உள்ளன.

2035 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு AMCA தயாராகும் வரை, ரஷ்யாவின் சுகோய்-57 அல்லது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-35 போன்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் இரண்டு முதல் மூன்று படைப்பிரிவுகளை குறிவைத்துள்ள நிலையில், IAF இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவில்லை. இருப்பினும் வெகு விரைவிலேயே இந்த கொள்முதலுக்கான நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
TTV JOIN ADMK : அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
Embed widget