மேலும் அறிய

பாஜக மூலம்தான் தமிழ்நாட்டிற்கு போதை பொருள் வருகிறது - செல்வப்பெருந்தகை

இந்தியா முழுவதும் போதை பொருளை கள்ளத்தனமாக விற்பவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என்றும் கூறினார்.

சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "காங்கிரஸ் பேரியக்கத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சுவதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மோடி அவர்கள் மிகப்பெரிய பல்டி அடித்துள்ளார். பாகிஸ்தான் நாடு இந்தியா கூட்டணியை விரும்புகிறது என கூறியிருந்தார். பின்னர் ஜாதி அரசியலை பேசினார். முழுக்க முழுக்க அவர் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை பிரதமரும், அமித்ஷாவும் பேசி வருகிறார்கள். இப்போது அப்படி நான் பேசவில்லை எப்போது பேசினேன் என கூறியிருக்கிறார். குஜராத்தில் இஸ்லாமியர்களை படுகொலை செய்த போது முதலமைச்சராக இருந்தது மோடி தானே. சிறுபான்மையின மக்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பாரா?. தேர்தலுக்காக தற்போது உளறிக் கொண்டிருக்கிறார்.

பாஜக மூலம்தான் தமிழ்நாட்டிற்கு போதை பொருள் வருகிறது - செல்வப்பெருந்தகை

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய தோல்வி அடையப் போகிறது. தற்போது நான்காவது கட்ட தேர்தலில் தான் அவருக்கு புரிதல் வந்திருக்கிறது. யாரும் அவருக்கு வாக்களிக்கப் போவதில்லை. இதனால் அவர் வித்தியாசமான அணுகு முறையில் ஈடுபட்டுள்ளார். பிரிவினை வாத அரசியலை பேசுகிறார். இது பற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளோம். அவர் என்னென்ன பேசியிருக்கிறார் என கொடுத்து இருக்கிறோம். மோடி பேசுவதை மக்கள் ஏற்க போகவில்லை. நாடும் ஏற்கப் போவது இல்லை. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என கூறுபவர் எதற்கு பாகிஸ்தான் அரசியல் பேசுகிறார். பிரதமர் மோடி அவர்கள் தோல்வி பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறார். பிரதமர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் தேர்தல் ஆணையம் செய்கிறது. பிரதமர் மோடியின் மீது புகார் செய்தால் அதன் மீது நோட்டீஸ் தராமல் இருந்து வருகிறார்கள். மோடியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் உள்ளது" என்றார்.

பாஜக மூலம்தான் தமிழ்நாட்டிற்கு போதை பொருள் வருகிறது - செல்வப்பெருந்தகை

போதை பொருள் நடமாட்டம் குறித்த கேள்விக்கு, பதிலளித்த செல்வப்பெருந்ததை, போதை பொருள் எங்கிருந்து உருவாகிறது என்றால் அதிகமாக ஆப்கானிஸ்தானில் இருந்து உருவாகிறது. குஜராத் துறைமுகம் வழியாக எடுத்து வரப்படுகிறது. குறிப்பாக அதானி துறைமுகத்திலிருந்து கடத்தப்படுகிறது. கொரோனா காலத்தில் இலட்சக்கணக்கான போதை பொருட்கள் கைப்பற்றி வைத்திருந்தனர். இவற்றில் அஞ்சரை லட்சம் போதை பொருள் மாயமாகி உள்ளது என தெரிவித்துள்ளனர். மத்திய உளவுத்துறை யாரிடம் உள்ளது? மத்திய அரசிடம் தான் உள்ளது. சிபிஐ, ஆர்பி, ராணுவம் யாரிடம் உள்ளது. இவற்றையெல்லாம் மீறி போதை பொருள் இந்தியாவுக்குள் எப்படி வருகிறது. பாஜக மூலம்தான் தமிழ்நாட்டிற்கு போதைப்பொருள் வருகிறது. இது பற்றி அண்ணாமலை கவலைப்பட மாட்டார். மோடி கவலைப்பட மாட்டார். இந்தியா முழுவதும் போதை பொருளை கள்ளத்தனமாக விற்பவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என்றார்.

திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கொலையா? தற்கொலையா? என இதுவரை உறுதி செய்யாமல் இருப்பது குறித்த கேள்விக்கு, இன்னும் இறுதியான பிரேத பரிசோதனை அறிக்கை வரவில்லை. தனிப்படை வைத்து விசாரணை நடக்கிறது. காவல்துறையினர் கொலையா? தற்கொலையா என இன்னும் தெரிவிக்கவில்லை. உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget