மேலும் அறிய

பதவியை ராஜினாமா செய்ய நெல்லிக்குப்பம் சேர்மேன் மறுப்பு - துணைத்தலைவர் பதவி விலகினார்

தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பதவி விலக மறுப்பு தெரிவித்ததால் துணைத் தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவின் ஜெயபிரபாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை பதவி விலக கோரினர்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி விசிகவிற்கு ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில் நகராட்சி தலைவர் தேர்தலின் போது  விசிக சார்பில் கிரிஜா என்பவரும், அவரை எதிர்த்து கூட்டணி கட்சியான திமுகவை சேர்த்த ஜெயந்தி என்பவரும் போட்டியிட்டதில், அதிக வாக்குகளை பெற்று திமுகவை சேர்ந்த ஜெயந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில் துணைத் தலைவர் பதவிக்கும் விசிக சார்பில் கிரிஜா மீண்டும் போட்டியிட்டார்.
 
பதவியை ராஜினாமா செய்ய நெல்லிக்குப்பம் சேர்மேன் மறுப்பு - துணைத்தலைவர் பதவி விலகினார்
விசிக வேட்பாளர் கிரிஜா

 

இதனை எதிர்த்து மீண்டும் திமுக சார்பில் ஜெயபிரபா என்பவர் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் இதில் விசிக வேட்பாளர் கிரிஜாவை தோற்கடித்து திமுக வேட்பாளர் ஜெயபிரபா வெற்றி பெற்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி மதியம், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடத்தில் வெற்றி பெற்ற இடங்களில் திமுகவினரை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என திருமாவளவன் ட்விட்டரில் திமுக தலைவருக்கு கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் நெல்லிக்குப்பம் தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவியை விசிகவினருக்கு ஒதுக்க கோரி நெல்லிக்குப்பத்தில் விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
பின்னர் நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்திற்கு வெற்றிபெற்ற திமுக வேட்பாளருடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் முன்னிலையில் ராஜினாமா செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த ஜெயபிரபா என்பவரிடம் திமுகவை சேர்ந்த எம்எல்ஏ பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெயபிரபா பேச்சுவார்த்தையின் பொழுது திடீரென மயக்கம் ஏற்பட்டு சுயநினைவு இன்றி போனார்.
பதவியை ராஜினாமா செய்ய நெல்லிக்குப்பம் சேர்மேன் மறுப்பு - துணைத்தலைவர் பதவி விலகினார்
மயங்கி விழுந்த நகராட்சி துணைத்தலைவர் ஜெயப்பிரபா

 

பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது ஆனால் நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த மியூசிக் ஆடினர் உள்ளே விடாது தான் வெகு நேரம் காத்திருந்த நிலையை திமுகவை சேர்ந்த துணைத்தலைவர் ஜெயப்பிரபாவை மற்ற வார்டு கவுன்சிலர்கள் தூக்கிக்கொண்டு வந்து ஆம்புலன்சில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் காரில் ஏறி செல்ல முயன்ற போது காரை மறித்து விசிகவினர் காரை தட்ட ஆரம்பித்தனர்.
 
பதவியை ராஜினாமா செய்ய நெல்லிக்குப்பம் சேர்மேன் மறுப்பு - துணைத்தலைவர் பதவி விலகினார்
 
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த காவல் துறையினர் சட்டமன்ற உறுப்பினரை மறித்த விசிகவினர் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைய செய்தனர்.  பின்னர் கடந்த இரண்டு நாட்களாக நகராட்சி தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மற்றும் துணைத்தலைவர் ஜெயபிரபா மணிவண்ணன் ஆகியோரிடம் கட்சி முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் ஜெயபிரபா மணிவண்ணன் ஆகியோர் வீடுகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
 
ஆனால் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பதவி விலக மறுப்பு தெரிவித்ததால் துணைத் தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக ஜெயபிரபாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை பதவி விலக கோரினர். அதன் அடிப்படையில் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜெயபிரபா பதவி விலகி உள்ளார். விசிகவிற்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது ஆனால் அதனை ராஜினாமா செய்யாமல் திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட துணைத் தலைவர் பதவியை திமுகவினரை ராஜினாமா செய்ய வைத்திருப்பது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்Eknath Shinde | ”ஏக்நாத் ஷிண்டே துரோகியா?”காமெடியனை மிரட்டும் சிவசேனா சூறையாடப்பட்ட STUDIO...!Vignesh Puthur Profile | CSK-வை கதறவிட்ட விக்னேஷ் புதூர் யார்? AUTO DRIVER மகன் To IPL நாயகன்! | MI | Chennai Super Kings | IPL 2025 | Dhoni

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
11th 12th Exam: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கடைசி நாளில் இதைக் கட்டாயம் செய்ங்க- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
11th 12th Exam: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கடைசி நாளில் இதைக் கட்டாயம் செய்ங்க- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய  போலீஸ்
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய போலீஸ்
Embed widget