மேலும் அறிய

ஊரே சேர்ந்து மயிலாடுதுறை எம்பிக்கு விருந்து - ஏன் தெரியுமா?

மயிலாடுதுறை எம்பி சுதாவிற்கு பூம்புகார் மீனவர் கிராம மக்கள் ஒன்றுகூடி விருந்து வைத்து நன்றி தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் விடுதலைக்காக அதிக முயற்சிகளை மேற்கொண்ட மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதாவிற்கு மீனவர்கள் ஊர்கூடி விருந்து வைத்து நன்றி தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, 4 பைபர் படகுகளில் கடந்த மாதம் செப்டம்பர் 20 -ம் தேதி 43 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் மறுநாள் கரை திரும்ப வேண்டிய நிலை அவர்கள் கரை திரும்பததால் மீனவர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது தெரியவந்தது.


ஊரே சேர்ந்து மயிலாடுதுறை எம்பிக்கு விருந்து - ஏன் தெரியுமா?

37 மீனவர்கள் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை பணி மேற்பார்வையாளர்கள் தீனதயாளன் மற்றும் வாசன் ஆகியோர், இதுகுறித்து பூம்புகார் துறைமுகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு பைபர் படகுகளில் இருந்த, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள், சின்னமேடு கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், சந்திரபாடி கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட 37 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்ததை உறுதிசெய்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.


ஊரே சேர்ந்து மயிலாடுதுறை எம்பிக்கு விருந்து - ஏன் தெரியுமா?

மயிலாடுதுறை எம்பியிடம் மீனவர்கள் கோரிக்கை 

இந்நிலையில், மீனவர்களின் உறவினர்கள் அனைத்து மீனவர்கள் மற்றும் படகுகளையும் பாதுகாப்பாக மீட்டுத்தருமாறு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதாவிடம் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி இலங்கையில் புதிதாக அதிபர் பதவியேற்றுள்ள அனுரா குமாரா திசநாயகவுக்கு மயிலாடுதுறை அவர் கடிதம் ஒன்றை எழுதினார்.


ஊரே சேர்ந்து மயிலாடுதுறை எம்பிக்கு விருந்து - ஏன் தெரியுமா?

இலங்கை அதிபருக்கு கடிதம் 

அந்த கடிதத்தில் இலங்கையின் புதிய அதிபருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்த எம்பி.சுதா மேலும் கடித்தில் கூறியதாவது: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பூம்புகார், சந்திராபாடி, வானகிரி, சின்னமேடு, மடத்துக்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். இவர்கள் படகு கவிழ்ந்ததில் துரதிர்ஷ்டவசமாக கடலில் மூழ்கிய இலங்கை மீனவ சகோதரரின் உடலை மீட்டெடுக்க இலங்கை கடற்படைக்கு உதவியவர்கள். இச்சூழலில் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் இருதரப்பு உடன்படிக்கைகளில் உள்ள ஷரத்துகளை மீறி, இலங்கை கடற்படை ஆபத்தில் உதவிய எங்கள் மீனவர்கள் மீது சொல்ல இயலாத அட்டூழியங்களை கட்டவிழ்த்துவிட்டு, சட்டவிரோதமாக கைது செய்துள்ளது.


ஊரே சேர்ந்து மயிலாடுதுறை எம்பிக்கு விருந்து - ஏன் தெரியுமா?

எனவே, அந்த மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இதேபோல், இலங்கை சிறையில் வாடும் மற்ற இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர்களின் அனைத்து படகுகளையும் கூடிய விரைவில் பயன்பாட்டு நிலையில் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்திருந்தார். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கும் கடிதம் எழுதியிருந்தார். 


ஊரே சேர்ந்து மயிலாடுதுறை எம்பிக்கு விருந்து - ஏன் தெரியுமா?

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 

இந்த நிலையில், அக்டோபர் கடந்த 4-ஆம் தேதி மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பல்வேறு நடைமுறைகளுக்குப் பின்னர் திங்கள்கிழமை நள்ளிரவு விமான மூலம் அவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். தொடர்ந்து அவர்களை விமான நிலையத்தில் ஆர். சுதா எம்.பி. சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார்.


ஊரே சேர்ந்து மயிலாடுதுறை எம்பிக்கு விருந்து - ஏன் தெரியுமா?

எம்பிக்கு தடபுடலாக விருந்து 

இந்த சூழலில் மீனவர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதாவிற்கு இலங்கையில் இருந்து ஊர் திரும்பிய மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் பூம்புகார் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் விருந்து வைத்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இதற்காக மீன், நண்டு, இரால், கணவாய் என தடபுடலாக கடல் உணவு வகைகளை சமைத்து அவர்கள் பரிமாற மீனவர்களுடன் தரையில் அமர்ந்து அவர் உணவருந்தினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

India Garment Export: நீ வரி போட்டுக்கோ, நாங்க ரூட்ட மாத்துறோம்; ஜவுளி ஏற்றுமதி; 40 முக்கிய சந்தைகளுக்கு இந்தியா குறி
நீ வரி போட்டுக்கோ, நாங்க ரூட்ட மாத்துறோம்; ஜவுளி ஏற்றுமதி; 40 முக்கிய சந்தைகளுக்கு இந்தியா குறி
Kharge Slams Modi: “இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு, நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள்“- மோடியை வெளுத்த கார்கே
“இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு, நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள்“- மோடியை வெளுத்த கார்கே
Russia Vs Ukraine: அய்யா, நிறுத்த மாட்டீங்களா.? உக்ரைனில் மேலும் ஒரு பிராந்தியத்திற்குள் நுழைந்த ரஷ்ய படைகள்
அய்யா, நிறுத்த மாட்டீங்களா.? உக்ரைனில் மேலும் ஒரு பிராந்தியத்திற்குள் நுழைந்த ரஷ்ய படைகள்
Ravi Mohan Studios: நடிகர் ரவி மோகனின் முதல் தயாரிப்பு; ‘BRO CODE' படத்தின் கலக்கலான ப்ரோமோ வீடியோ வெளியீடு
நடிகர் ரவி மோகனின் முதல் தயாரிப்பு; ‘BRO CODE' படத்தின் கலக்கலான ப்ரோமோ வீடியோ வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lakshmi Menon Issue | தலைக்கேறிய போதை IT ஊழியரை கடத்தி அட்டாக் தலைமறைவான லட்சுமி மேனன் | Kochi
EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Garment Export: நீ வரி போட்டுக்கோ, நாங்க ரூட்ட மாத்துறோம்; ஜவுளி ஏற்றுமதி; 40 முக்கிய சந்தைகளுக்கு இந்தியா குறி
நீ வரி போட்டுக்கோ, நாங்க ரூட்ட மாத்துறோம்; ஜவுளி ஏற்றுமதி; 40 முக்கிய சந்தைகளுக்கு இந்தியா குறி
Kharge Slams Modi: “இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு, நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள்“- மோடியை வெளுத்த கார்கே
“இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு, நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள்“- மோடியை வெளுத்த கார்கே
Russia Vs Ukraine: அய்யா, நிறுத்த மாட்டீங்களா.? உக்ரைனில் மேலும் ஒரு பிராந்தியத்திற்குள் நுழைந்த ரஷ்ய படைகள்
அய்யா, நிறுத்த மாட்டீங்களா.? உக்ரைனில் மேலும் ஒரு பிராந்தியத்திற்குள் நுழைந்த ரஷ்ய படைகள்
Ravi Mohan Studios: நடிகர் ரவி மோகனின் முதல் தயாரிப்பு; ‘BRO CODE' படத்தின் கலக்கலான ப்ரோமோ வீடியோ வெளியீடு
நடிகர் ரவி மோகனின் முதல் தயாரிப்பு; ‘BRO CODE' படத்தின் கலக்கலான ப்ரோமோ வீடியோ வெளியீடு
43 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் விவாகரத்து: நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு! கணவரின் வேதனை என்ன?
43 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் விவாகரத்து: நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு! கணவரின் வேதனை என்ன?
Trump Vs Modi: “உங்க தலை சுத்துற அளவுக்கு வரி போட்டுடுவேன்னு மோடி கிட்ட சொன்னேன்“- ட்ரம்ப் ஓபன் Talk
“உங்க தலை சுத்துற அளவுக்கு வரி போட்டுடுவேன்னு மோடி கிட்ட சொன்னேன்“- ட்ரம்ப் ஓபன் Talk
சமையலுக்காக உயிரையே விட்ட கணவர்: முட்டைக்குழம்பு வைக்கமறுத்த மனைவி- விபரீதம்!
சமையலுக்காக உயிரையே விட்ட கணவர்: முட்டைக்குழம்பு வைக்கமறுத்த மனைவி- விபரீதம்!
Modi VS Trump: போன் மேல் போன் போட்ட ட்ரம்ப்.. அட்டென் பண்ண மறுத்த மோடி! கோபத்தின் உச்சியில் ஜீ!
Modi VS Trump: போன் மேல் போன் போட்ட ட்ரம்ப்.. அட்டென் பண்ண மறுத்த மோடி! கோபத்தின் உச்சியில் ஜீ!
Embed widget