விநாயகர் சதுர்த்தி 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 14, திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி
இந்து மதத்தில் தடைகளை நீக்குபவர், ஞானம் மற்றும் வெற்றியை அருள்பவர் என அனைவராலும் வழிபடப்படும் கடவுளாக விநாயகர் உள்ளார். இவர் அவதரித்த தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் இந்த பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. 2026ம் ஆண்டு இப்பண்டிகை வரும் அக்டோபர் 14ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த சிறப்பு நாளில் வீதியெங்கும் வண்ணமயமான, வித்தியாசமான தோற்றத்தில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பின் ஒரு நாளில் நீர் நிலைகளில் பிரதிஷ்டை செய்யப்படும். விநாயகருக்கு உகந்த அருகம்புல், கொழுக்கட்டை, கரும்பு, சுண்டல், அவல், பொரி மற்றும் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு நைவேத்தியங்கள் வைத்து வழிபாடு நடைபெறும். இந்நாளில் விநாயகரை வழிபட்டால் கல்வி, அறிவு, செல்வம் மற்றும் வெற்றியை ஆகியவை நம் வாழ்வில் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்."













