லட்சுமி கணபதி, மகா கணபதி, விஜய கணபதி
விஜய கணபதி :பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் விஜய கணபதி, அங்குசம், பாசம், ஒடிந்த தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களில் ஏந்தியவராக நமக்கு காட்சியளிக்கிறார்...

லட்சுமி கணபதி, மகா கணபதி, விஜய கணபதி... ! கணபதியின் கண்கொள்ளா காட்சி
1. லட்சுமி கணபதி :
கற்பகக் கொடி, கலசம், அங்குசம், பாசம், கட்சம், கிளி, வரதம், மாதுளம் பழம் ஆகியவற்றை தனது 8 திருக்கரங்களில் ஏந்தியவர், நீல நிற தாமரைப் பூவை தனது கையில் வைத்திருப்பவர். மேலும் இரு தேவிகளுடன் காட்சியளிக்கும் லட்சுமி கணபதி வெண்மை நிறமுடையவர்...
2. மகா கணபதி :
பத்து கைகளையும், 3 கண்களையும், முடியில் பிறைச்சந்திரனை உடையவர் நம் மகா கணபதி...
தாமரை மலரை ஏந்திய தேவியை தனது இடது தொடையில் அமரவைத்து அருள் பாலிக்கும் கணபதி. கரங்களில் கரும்பு, வில், கதை, பாச, சக்கரம், தந்தம், ரத்ன கலசம்,மாதுளை நெற்கதி, நீலோத்பலம், ஆகியவற்றை ஏந்தி இருப்பாவராக நமக்கு காட்சி அளிக்கிறார். சிவப்பு நிற திருமேனியை உடையவர்...
3. விஜய கணபதி :
பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் விஜய கணபதி, அங்குசம், பாசம், ஒடிந்த தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களில் ஏந்தியவராக நமக்கு காட்சியளிக்கிறார்...
4. நிருத்த கணபதி :
கற்பக விருட்சத்தின் கீழ் அமர்ந்திருக்கும் நிருத்த கணபதி... பொன் நிற திருமேனியை உடையவர். , அங்குசம், பாசம். அபூபம், கோடாரி, தந்தம் ஆகியவற்றைத் தன் 6 திருக்கரங்களில் ஏந்தியவராக நமக்கு காட்சியளிக்கிறார். இவரை நாம் கூத்தாடும் பிள்ளையார் என்றும் அழைப்பதுண்டு.
5. ஊர்த்துவ கணபதி :
தாமரை மலர்களை தன் கரங்களில் தாங்கியவராக விளங்கும் ஊர்த்துவ கணபதி தங்கம் போல் ஜொலிக்கும் திருமேனியை உடையவர். மேலும் பச்சை நிறமுடைய தேவையை அணைத்தவாறு, பணாம், தந்தம், கரும்பு, தாமரை, வில், நீல புஷ்பம் ஆகியவற்றை ஏந்தியவராக காட்சி அளிக்கிறார்...
6. ஏகாட்சர கணபதி :
பெருச்சாளி வாகனத்தின் மீது பத்மாசனத்தில் அமர்ந்து நமக்கு காட்சி அளிக்கும் ஏகாட்சர கணபதி, செம்மலர் மாலையை அணிந்து , முடியில் பிறைச்சந்திரனை சூடி, மூன்று கண்களும், செந்நிற திருமேனியுடன் நமக்கு அருள் பாலிக்கிறார்...
7. வர கணபதி:
பிறை சூடிய இவருக்கு மூன்று நேத்திரங்கள் உண்டு... அதேபோல செந்நிற திருமேனியை உடைய வரகணபதி, தனது 4 கரங்களில் அங்குசம், பாசம், அமுதக்கிண்ணம், கொடியை தாங்கி இருப்பவராக நமக்கு காட்சி அளிக்கிறார்...
8. திரயாக்ஷர கணபதி :
பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தனது நான்கு கரங்களிலும், மோதகத்தை தும்பிக்கையிலும் தாங்கியிருக்கும் இவர் பொன்னிற திருமேனியை உடையவராக நமக்கு காட்சி அளிக்கிறார்...
9. க்ஷிப்ரபிரசாத கணபதி :
தனது 6 திருக்கரங்களில் தர்ப்பை, பாசம், தாமரை, அங்குசம் ஆகியவற்றை ஏந்தியதோடு, ஒரு கரத்தில் ஹஸ்த முத்திரையையும் கொண்ட இவர் பெரிய வயிற்றினை கொண்டவர். அதேபோல துதிக்கையில் மாதுளம் பழத்தையும், திருமேனி முழுவதும் ஆபரணங்களையும் சூடி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்...
10. ஹரித்ரா கணபதி :
மங்களகரமாக மஞ்சள் வண்ணத்தில் காட்சியளிக்கும் ஹரித்ரா கணபதி, அங்குசம், பாசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை தன்னுடைய நான்கு திருக்கரங்களில் ஏந்தியவராக அருள்பாலிக்கிறார்...





















