மேலும் அறிய

"ஒவ்வொரு குடிமகனுக்கும் வழிகாட்டி" பகவத் கீதை குறித்து குடியரசுத் துணைத் தலைவர் கருத்து!

கருத்து வேறுபாடுகள் சர்ச்சையாக மாறக்கூடாது என்பதை ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல் நமக்குக் கற்பிக்கிறது என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

வளர்ந்த இந்தியா என்பது இனி கனவு அல்ல எனவும் அது உறுதியான இலக்கு என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். வரும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை அடைவதை உறுதி செய்ய நாம் உறுதியுடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

ஹரியானாவின் குருஷேத்ராவில் நடைபெற்ற சர்வதேச கீதா மஹோத்சவ் 2024 நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளதுடன், அபாரமான கட்டமைப்புகளை உருவாக்கி இருப்பதாக கூறினார்.

"ஒவ்வொரு குடிமகனுக்கும் வழிகாட்டி"

இந்தியாவின் குரல் உலக அரங்கில் இப்போது வலுவாக எதிரொலிக்கிறது என அவர் குறிப்பிட்டார். "பஞ்சாமிர்த மாதிரி" எனப்படும் ஐந்து அம்ச ஆட்சி முறையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஆக்கபூர்வமான உரையாடல், நேர்மை, தன்னலமற்ற அர்ப்பணிப்பு, இரக்கம், பரஸ்பர மரியாதை ஆகிய ஐந்தும் அவசியம் என்றார்.

நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சில சக்திகள் இந்தியாவின் பொருளாதாரத்தையும் நிறுவனங்களையும் பலவீனப்படுத்த திட்டமிட்டு முயற்சிக்கின்றன் என அவர் கூறினார். அவர்களின் நோக்கம் நமது அரசியலமைப்பு நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதும், முன்னேற்றத்திற்கான நமது பாதையை சீர்குலைப்பதுமே ஆகும் என அவர் கூறினார்.

குடியரசுத் துணைத் தலைவர் என்ன பேசினார்?

இத்தகைய சக்திகளை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் செயல்பட்டு அவர்களின் திட்டங்களை முறியடிக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.

"கருத்து வேறுபாடுகள் சர்ச்சையாக மாறக்கூடாது என்பதை ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல் நமக்குக் கற்பிக்கிறது. மக்கள் வித்தியாசமாக சிந்திப்பதால் வேறுபாடுகள் இயற்கையானது. நமது அரசியலமைப்புச் சபை கூட வேறுபாடுகளை எதிர்கொண்டது. ஆனால், அவை விவாதத்தின் மூலம் அவற்றைத் தீர்த்தன.

கீதையின் சாரத்தை ஏற்றுக்கொண்டு, நேர்மறையான எண்ணத்துடன் தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்குமாறு அனைவரையும் வலியுறுத்துகிறேன்" என ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். 

ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, ஹரியானா முதலமைச்சர் நயப் சிங் சைனி, சுவாமி ஞானானந்த் மகராஜ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget