மேலும் அறிய

Kerala Bomb Blast : டிபன் பாக்சிஸ் கொண்டுவரப்பட்ட குண்டுகள்.. ஜெபக்கூட்டத்தில் நடந்தது என்ன?

குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை சேகரித்து, தேசிய பாதுகாப்பு படை விசாரிக்க உள்ளது.

கேரள மாநிலம் களமச்சேரியில் மாநாட்டு அரங்கின் ஒன்றில் ஜெபக்கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, குண்டுகள் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்ரா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் ஜெபக்கூட்டம் நடந்துள்ளது. யெகோவா சாட்சிகள் என்ற கிறிஸ்தவ மதப்பிரிவினர், ஜெபக்கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

கேரளாவை உலுக்கிய குண்டுவெடிப்பு:

இதில், மூன்று குண்டுகள் வெடித்ததில் ஒரு பெண் உயிரிழந்தார். 36 பேர் காயம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெபக்கூட்டத்தில் 2,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதால் உயிரிழப்பு அதிகரிக்கூடும் என அஞ்சப்படுகிறது. பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த போது, அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாகவும் டிபன் பாக்சிஸ் குண்டுகள் எடுத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய பாதுகாப்பு படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விரைந்துள்ளது. குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை சேகரித்து, தேசிய பாதுகாப்பு படை விசாரிக்க உள்ளது. இதுகுறித்து கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹேப் கூறுகையில், "சம்பவ இடத்துக்கு வந்த பிறகு இது தொடர்பாக விசாரிக்க இன்றே சிறப்புக் குழுவை அமைக்க உள்ளேன்" என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், குண்டுவெடிப்பு தொடர்பாக கூடுதல் தகவல்கள் ஏதேனும் இருக்கிறதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் இல்லை" என பதில் அளித்தார்.

நடந்தது என்ன?

தொடர்ந்து பேசிய அவர், "இன்று காலை 9:40 மணியளவில் ஜம்ரா சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் நடந்து குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எங்கள் மூத்த அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்தில் உள்ளனர். எங்கள் கூடுதல் டிஜிபியும், சம்பவ இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். 

நானும் விரைவில் சம்பவ இடத்தை அடைவேன். தீவிர விசாரணை நடத்தி, இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுப்போம். முதற்கட்ட விசாரணையில் IED குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. நாங்கள் அதை விசாரித்து வருகிறோம்" என்றார்.

கேரளா முழுவதும் தொடர் பதற்றம் நிலவி வரும் நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்க தேசிய புலனாய்வு முகமைக்கும் தேசிய பாதுகாப்பு படைக்கும் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கேரள அமைச்சர் வி.என். வாசவன் கூறுகையில், "பெண் ஒருவர் தீயில் சிக்கி இறந்தார், குண்டுவெடிப்பால் அல்ல. தொடர்ந்து இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்ததாக முதற்கட்ட ஆய்வு கூறுகிறது. ஒருவர் மருத்துவமனையில் உள்ளார். 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு அசாதாரண விபத்து. அனைத்து ஏஜென்சிகளும் முதற்கட்ட விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு வந்துள்ளன" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget