மேலும் அறிய

மாட்டு வண்டி ஓட்டி மாஸ் காட்டிய கோவை காவல் ஆணையர்! களைகட்டிய காவல்துறை பொங்கல்விழா!

கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினர் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.

கோவையில் மாநகர காவல் துறையினர் சார்பில் நடந்த பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

காவல்துறை சார்பில் பொங்கல் திருவிழா:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பண்டிகையாக இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெகு விமர்சையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அவிநாசி சாலையில் உள்ள கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினர் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். பின்னர் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் காவல் அலுவலர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

மாட்டு வண்டி ஓட்டிய கமிஷனர்:

அதன் பிறகு கோவை மாநகர் காவல் துறை சார்பில் பொங்கல் வைத்தல், பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்குப்போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் ஆகிய போட்டி நடைபெற்றது. பொங்கல் விழாவில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பொங்கல் வைத்து மாட்டு வண்டி ஓட்டினார். நிகழ்ச்சியை தொடர்ந்து ஓட்டி சைக்கிள் ஓட்டி, ஒயிலாட்டம் மயிலாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற காவல் துறையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


மாட்டு வண்டி ஓட்டி மாஸ் காட்டிய கோவை காவல் ஆணையர்! களைகட்டிய காவல்துறை பொங்கல்விழா!

இதேபோல கோவை மாவட்ட காவல் துறை சார்பில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் அலுவலகத்தில்   சமத்துவ பொங்கல் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் காவல் துறையினர், காவல் துறையினரின் குடும்பங்கள் மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது காவல் துறையினரின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர்.

பின்னர் குழந்தைகள் மற்றும் காவல் துறையினரின் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிசுகளை அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் நிறைமாத கர்ப்பிணியான பெண் காவலருக்கு அனைவரும் இணைந்து வளைகாப்பு விழாவும் நடத்தினர். இவ்விழாவில் கலந்து கொண்ட காவல் துறையினர், காவல் துறையினரின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்  மகிழ்ச்சி அடைந்தனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Embed widget