மேலும் அறிய

தெலங்கானாவிடம் தாய்மொழிப் பற்றை கத்துக்கோங்க; தமிழ் கட்டாயப்பாடம் எப்போது?- சீறிய அன்புமணி

தாய்மொழிக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை கேரளம், தெலங்கானம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற பிற திராவிட மாநில அரசுகளிடமிருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ்க் கட்டாயப்பாடம், பயிற்று மொழி எப்போது? தெலங்கானா ஆட்சியாளர்களிடம் தாய்மொழிப் பற்றைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தெலங்கானாவில் மாநிலப் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளாகியும் இன்று வரை அந்தச் சட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தெலங்கானாவில் தெலுங்கை கட்டாயப்பாடமாக்கும் சட்டம் 2018ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கடந்த 2022& 23ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முந்தைய சந்திரசேகரராவ் ஆட்சியில் அச்சட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.

தாய்மொழியை காக்கும் நோக்கம்

இந்த நிலையில், இப்போது தெலுங்கு கட்டாயப் பாடச் சட்டம் புதிய தீவிரத்துடன் செயல்படுத்தப்படும்; 2025& 26ஆம் ஆண்டில் ஒன்பதாம் வகுப்பிலும், 2026& 27ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பிலும் தெலுங்கு மொழிப் பாடத்திற்கு கட்டாயம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆணை பிறப்பித்திருக்கிறார். தாய்மொழியை காக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.

ஆனால், தமிழை வளர்க்கிறோம், வாழ வைக்கிறோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழகத்தில் தமிழை இன்னும் பயிற்று மொழியாகவோ, கட்டாயப் பாடமாகவோ கொண்டு வர முடியவில்லை. தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்குவதில் தமிழக ஆட்சியாளர்கள் செய்த துரோகங்கள் மிக நீண்டவை.  

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 2006ஆம் ஆண்டில் நிறைவேற்றப் பட்டது. அந்த சட்டத்தின்படி ஆண்டுக்கு ஓர் வகுப்பு வீதம் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டு 2015& 16ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப் பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 9 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில் தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கப்படவில்லை. அதற்காக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தனியார் பள்ளிகள் முறையீடு

தமிழ்க் கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிராக தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை தடை செய்ய முடியாது என்று கூறிவிட்ட உயர்நீதிமன்றம், 2022& 23ஆம் ஆண்டு முதல் தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டது. அதை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

2023ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘உள்ளூர் மொழியைக் கற்றுக் கொள்வது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளது. அதேநேரத்தில் உள்ளூர் மொழியை கற்பிக்க தனியார் பள்ளிகள் மறுப்பது தேச ஒற்றுமைக்கு நல்லதல்ல’‘ என்று கூறியது. எனினும், பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்க ஒரு மாதம் மட்டுமே இருந்த நிலையில், அதற்குள்ளாக வழக்கை விசாரித்து முடிக்க முடியாது என்பதால், தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை செயல்படுத்துவதிலிருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும், கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலை மாதத்தில் வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருந்தால், 2023& 24ஆம் ஆண்டிலேயே தமிழ்க் கட்டாயப்பாடமாகியிருந்திருக்கும். ஆனால், இன்று வரை அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வர திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தனியார் பள்ளிகளைக் காப்பாற்றும் நோக்கமா?

மேலும், 2015& 16ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ உள்ளிட்ட பிற கல்வி வாரியங்களுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக்கி, கடந்த 18.09.2014 அன்று அப்போதைய தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி நடப்பு 2024& 25ஆம் ஆண்டில் பிற பாடத்திட்டங்களை பின்பற்றும் தனியார் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் அதை செய்யாத திமுக அரசு, அந்தக் கடமையிலிருந்து தனியார் பள்ளிகளைக் காப்பாற்றும் நோக்குடன் 2023ஆம் ஆண்டு மே மாதம் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

அதன்படி, சிபிஎஸ்இ உள்ளிட்ட பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் தமிழைக் கட்டாயப் பாடமாக்கத் தேவையில்லை; அதற்கு பதிலாக தமிழைக் கூடுதல் கட்டாயப் பாடமாக்கினால் போதுமானது; தமிழ்ப் பாடத்திற்கு சிபிஎஸ்இ உள்ளிட்ட வாரியங்கள் தேர்வு நடத்தத் தேவையில்லை; தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையே நடத்தி அதற்கான சான்றிதழை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது மோசடியானது.

எவரும் தமிழ் படிக்க மாட்டார்கள்

தனியார் பள்ளிகள் எந்தப் பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றனவோ, அந்தப் பாடத்திட்டத்தின்படி தமிழ்ப் பாடத்திற்கு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப் பட்டால்தான் மாணவர்கள் தமிழைப் படிப்பார்கள். மாறாக, பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடம் கிடையாது; பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற தமிழ்க் கட்டாயம் கிடையாது; எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில், தமிழக அரசுத் தேர்வுத் துறை நடத்தும் தேர்வை பெயரளவில் எழுதினால் போதுமானது என்றால் எவரும் தமிழ் படிக்க மாட்டார்கள்.

இன்னொரு புறம், தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக்கும் அரசாணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து 2000ஆம் ஆண்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 25 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை விசாரணைக்கு கொண்டு வரவோ அல்லது தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்கி சட்டம் கொண்டு வரவோ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம், தமிழை வெறுக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தமிழக ஆட்சியாளர்கள் செலுத்தி வரும் பதில் மரியாதைதான். இது தமிழ்த் துரோகம்.


தாய்மொழிக்கு எவ்வாறு சேவை செய்வது?

தாய்மொழிக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை கேரளம், தெலங்கானம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற பிற திராவிட மாநில அரசுகளிடமிருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இனியும் அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்வதை விடுத்து, தமிழகத்தில் தமிழைக் கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’. 

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!
TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!
TNPSC Group 2, 2A: செப்.28-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- விவரம்!
TNPSC Group 2, 2A: செப்.28-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- விவரம்!
Stalin Condemns: “தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிப்பு“; உமர் அப்துல்லா விவகாரம்-ஸ்டாலின் கண்டனம்
“தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிப்பு“; உமர் அப்துல்லா விவகாரம்-ஸ்டாலின் கண்டனம்
Tesla Showroom: முதல் காருக்கு யானை விலையை நிர்ணயித்த டெஸ்லா - மும்பையில் ஷோரூம் திறந்தாச்சு - மாடல் Y எப்படி?
Tesla Showroom: முதல் காருக்கு யானை விலையை நிர்ணயித்த டெஸ்லா - மும்பையில் ஷோரூம் திறந்தாச்சு - மாடல் Y எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!
TNPSC Group 2: 645 இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு- வயது, தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிப்பது… விவரம் உள்ளே!
TNPSC Group 2, 2A: செப்.28-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- விவரம்!
TNPSC Group 2, 2A: செப்.28-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- விவரம்!
Stalin Condemns: “தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிப்பு“; உமர் அப்துல்லா விவகாரம்-ஸ்டாலின் கண்டனம்
“தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மாநில உரிமைகள் பறிப்பு“; உமர் அப்துல்லா விவகாரம்-ஸ்டாலின் கண்டனம்
Tesla Showroom: முதல் காருக்கு யானை விலையை நிர்ணயித்த டெஸ்லா - மும்பையில் ஷோரூம் திறந்தாச்சு - மாடல் Y எப்படி?
Tesla Showroom: முதல் காருக்கு யானை விலையை நிர்ணயித்த டெஸ்லா - மும்பையில் ஷோரூம் திறந்தாச்சு - மாடல் Y எப்படி?
Top 10 News Headlines: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம், சரோஜா தேவி உடல் இன்று நல்லடக்கம், ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கெடு - 11 மணி செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம், சரோஜா தேவி உடல் இன்று நல்லடக்கம், ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கெடு - 11 மணி செய்திகள்
Axiom 4: பூமிக்கு திரும்பும் சுபான்ஷு, ஆக்சியம் 4 குழு தரையிறங்குவது எங்கே? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி?
Axiom 4: பூமிக்கு திரும்பும் சுபான்ஷு, ஆக்சியம் 4 குழு தரையிறங்குவது எங்கே? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி?
Tamilnadu Roundup: ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால், மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம், அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை - 10 மணி செய்திகள்
ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால், மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம், அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை - 10 மணி செய்திகள்
Loksabha Attendance: மக்களவை எம்.பி-க்கள் இனிமே டிமிக்கி கொடுக்க முடியாது.! ஹை டெக் வருகைப்பதிவு; அசத்தும் நாடாளுமன்றம்
மக்களவை எம்.பி-க்கள் இனிமே டிமிக்கி கொடுக்க முடியாது.! ஹை டெக் வருகைப்பதிவு; அசத்தும் நாடாளுமன்றம்
Embed widget