மேலும் அறிய

Accident: கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மரணம் - இ.சி.ஆரில் பெரும் சோகம்

ECR Accident: செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே நடைபெற்ற கொடூர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்குக் கடற்கரை சாலையில் கொடூர விபத்து, ஆறு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ( Chennai ECR ROAD ) 
 
செங்கல்பட்டு ( Chengalpattu news ) : சென்னை கிழக்கு கடற்கரை சாலை எப்பொழுதுமே பரபரப்பாக இயங்கக்கூடிய சாலைகளில் ஒன்று. குறிப்பாக சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்பவர்கள் அதிக அளவு சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்துகின்றனர். அதிகளவு வாகனங்கள் இதில் செல்வதால் அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
 
சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் கோவளம், மகாபலிபுரம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்பொழுது விபத்து ஏற்படுகிறது. இந்தநிலையில் இன்று கோவளம் அருகே ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே நடைபெற்ற கொடூர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே நடைபெற்ற கொடூர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்
 
பின்னால் வந்த கார் மோதி
 
செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கரணை அடுத்துள்ள நெரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவரது மகன் தனசேகரன் ( 35). இவருக்கு திருமணம் ஆகி 30 வயதில் மனைவியும் 6 வயதில் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் இன்று தனது குடும்பத்துடன் இரு சக்கர வாகனத்தில் கோவளம் வந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் தனது மனைவி மற்றும் குழந்தை ஆகியவர்களை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளத்திலிருந்து மகாபலிபுரம் மார்க்கமாக சென்று கொண்டிருந்த பொழுது, பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
 
தூக்கி வீசப்பட்ட குடும்பத்தினர்
 
இந்தக் கொடூர விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தனசேகரன் மற்றும் அவரது மனைவி மற்றும் ஆறு வயது குழந்தை தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே தனசேகரன் மற்றும் அவரது மனைவி துடிதுடித்து உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய 6 வயது குழந்தையை மீட்ட அக்கம்பக்கத்தினர், அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு 6 குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் உயிரிழந்ததாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற கேளம்பாக்கம் போலீசார் போக்குவரத்தை சரி செய்து, கார் ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் உயிரிழந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
 
 
கிழக்குக் கடற்கரை சாலையில் கொடூர விபத்து
கிழக்குக் கடற்கரை சாலையில் கொடூர விபத்து
 
வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை
 
இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்ததாவது : இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பின்னால் வந்த கார் மோதியதால் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் கார் ஓட்டுநர் பாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உடனடியாக போக்குவரத்து சரி செய்யப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, என போலீசார் தெரிவித்தனர். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ:  சர்பராஸ், ரிஷப் அபார ஆட்டம்! நியூசி.க்கு 107 ரன்கள் டார்கெட்! பந்துவீச்சில் அதிசயம் நிகழ்த்துமா இந்தியா?
IND vs NZ: சர்பராஸ், ரிஷப் அபார ஆட்டம்! நியூசி.க்கு 107 ரன்கள் டார்கெட்! பந்துவீச்சில் அதிசயம் நிகழ்த்துமா இந்தியா?
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
"புகார்கள் மீது உடனடி நடவடிக்கை.. நாமதான் முன்னுதாரணம்" தமிழக காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ:  சர்பராஸ், ரிஷப் அபார ஆட்டம்! நியூசி.க்கு 107 ரன்கள் டார்கெட்! பந்துவீச்சில் அதிசயம் நிகழ்த்துமா இந்தியா?
IND vs NZ: சர்பராஸ், ரிஷப் அபார ஆட்டம்! நியூசி.க்கு 107 ரன்கள் டார்கெட்! பந்துவீச்சில் அதிசயம் நிகழ்த்துமா இந்தியா?
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
"புகார்கள் மீது உடனடி நடவடிக்கை.. நாமதான் முன்னுதாரணம்" தமிழக காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
IGNOU: தொலைதூரப் படிப்புகளில் சேர அக்.31 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு
IGNOU: தொலைதூரப் படிப்புகளில் சேர அக்.31 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு
IND vs NZ Test: அடக்கடவுளே! 99 ரன்னில் அவுட்டான ரிஷப் பண்ட்! சோகத்தில் மூழ்கிய இந்திய ரசிகர்கள்!
IND vs NZ Test: அடக்கடவுளே! 99 ரன்னில் அவுட்டான ரிஷப் பண்ட்! சோகத்தில் மூழ்கிய இந்திய ரசிகர்கள்!
இது தான் என்ன குளோஸ் பண்ண முழு காரணம் - அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு
இது தான் என்ன குளோஸ் பண்ண முழு காரணம் - அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு
அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது... காட்டமான அறிக்கை வெளியிட்ட அன்புமணி
அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது... காட்டமான அறிக்கை வெளியிட்ட அன்புமணி
Embed widget