மேலும் அறிய

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1,07,873 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன..!

தமிழ்நாடு முழுவதும் இதுவரை கர்ப்பிணி பெண்களுக்கு- 1,07,873 பேர்களுக்கும், மத்திய மண்டலத்தில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் 368 கொரானா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

திருச்சி மத்திய மண்டலத்தில் மட்டும் 19,890 பேர் கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தமிழகத்தில் கொரானா  பெரும்தொற்று  பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றில்  இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள்  தடுப்பூசியை அறிமுகம் செய்து மக்களுக்கு செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக முதல்கட்டமாக 40  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு  செலுத்தப்பட்டது. பின்பு  முன் களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது.  கொரோனா இரண்டாவது  அலை  மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து  தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1,07,873  கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன..!

இந்நிலையில் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என அரசு அறிவித்த உடன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது .திருச்சி மத்திய மண்டலத்தை பொறுத்தவரை அரியலூர் மாவட்டத்தில் 4ஆயிரம் 368  கர்ப்பிணிகளுக்கு கொரானா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் மட்டும் 19,890  பேர் செலுத்தி கொண்டுள்ளனர்.தமிழகத்தில் கொரானா தொற்று பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தினசரி கொரோனா தொற்று 2000க்கு கீழ் குறைந்து வருகிறது. இதற்கிடையில் பொதுமக்களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழ்நாடு அரசு தீவிரமாக செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக அதிகம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருகின்றனர். தற்போது வரை தமிழ்நாட்டில் 1.90 லட்சம் பேருக்கு கொரானா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போட அரசு அனுமதி அளித்தது.


தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1,07,873  கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன..!

மேலும் இது தொடர்பாக வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டது. இதன்படி கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடும்போது சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி மற்றும் கவுன்சிலிங் வழங்க வேண்டும். தடுப்பூசி போடுவதன் பயன் மற்றும் அதனால் ஏற்படும் நன்மை உள்ளிட்டவை தடுப்பூசி தொடர்பான அனைத்து தகவல்களையும் கர்ப்பிணிகளுக்கு கவுன்சிலிங் மூலம் தெரிவிக்க வேண்டும். இதன்பிறகு அவர்கள் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே தடுப்பூசி செலுத்தவேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களை சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திய தகவலை உடனடியாக கோவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்திய பிறகு பக்கவிளைவு இருந்தால் மருத்துவ அலுவலர் அல்லது மாவட்ட தடுப்பூசி அலுவலரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை  அரசு வழங்கி இருந்தது. இதன்படி தமிழ்நாடு அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது.

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1,07,873  கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன..!

இந்நிலையில் தற்போது   அதிகபட்சமாக  அரியலூரில் 4,368 பேருக்கும், மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சியில் 3,315 பேருக்கும், கரூரில் 1,513 பேருக்கும், புதுக்கோட்டையில் 2,688 பேருக்கும், பெரம்பலூரில் 2,437 பேருக்கும்,  நாகையில் 231பேருக்கும், தஞ்சாவூரில் 2,334 பேருக்கும், திருவாரூரில் 2,617 பேருக்கும், மயிலாடுதுறையில் 387 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி  மத்திய மண்டலத்தில் 19,890 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக அரசு கூறும் விதி முறைகளை பின்பற்றவேண்டும். மேலும் தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் ,குறிப்பாக கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவருமே தடுப்பு செலுத்திக்கொள்ள வேண்டும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை கர்ப்பிணி பெண்களுக்கு- 1,07,873 பேர்களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Gold Rate New Peak: அடித்து துவைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.? இன்று புதிய உச்சம்...
அடித்து துவைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.? இன்று புதிய உச்சம்...
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Gold Rate New Peak: அடித்து துவைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.? இன்று புதிய உச்சம்...
அடித்து துவைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.? இன்று புதிய உச்சம்...
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
America Vs Canada: எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
CSK vsRCB: தோனியின் சிக்ஸால் வென்ற ஆர்சிபி, பழிவாங்க துடிக்கும் சிஎஸ்கே - இன்று பலப்பரீட்சை, 16 வருட ஏக்கம்..
CSK vsRCB: தோனியின் சிக்ஸால் வென்ற ஆர்சிபி, பழிவாங்க துடிக்கும் சிஎஸ்கே - இன்று பலப்பரீட்சை, 16 வருட ஏக்கம்..
BCCI: கடுப்பான பிசிசிஐ..! ஆள் சேக்குறீங்களா? கம்பீரின் சப்போர்ட்டர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு..! யார் யார் தெரியுமா?
BCCI: கடுப்பான பிசிசிஐ..! ஆள் சேக்குறீங்களா? கம்பீரின் சப்போர்ட்டர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு..! யார் யார் தெரியுமா?
Embed widget