மேலும் அறிய

MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?

MGNREGS Wages: நூறு நாள் வேலை திட்டத்தில் 2025-26 நிதியாண்டில், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

MGNREGS Wages: நூறு நாள் வேலை திட்டத்தில் 2025-26 நிதியாண்டில், தமிழக பணியாளர்களுக்கு ரூ.17 ஊதிய உயர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு அறிவிப்பு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (MGNREGS) கீழ், 2025-26 நிதியாண்டிற்கான ஊதியத்தை 2-7% வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கிராமப்புற வேலை உறுதித் திட்டங்களை நடத்துவதற்கான முதன்மை அமைச்சகமான ஊரக மேம்பாட்டு அமைச்சகம் (MoRD), 2025-26 நிதியாண்டுக்கான NREGS ஊதியத்தை திருத்தி அறிவித்துள்ளது. அதன்படி, 2025-26 ஆம் ஆண்டிற்கான NREGS ஊதிய விகிதங்கள் 2.33-7.48% வரை உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது ரூ.7 முதல் ரூ.26 வரை ஊதியம் உயர்ந்துள்ளது. 

எந்த மாநிலத்திற்கு அதிக ஊதிய உயர்வு?

மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் ஊதியங்கள் ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளன. ஹரியானாவில் அதிகபட்சமாக ரூ.26  ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது அங்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் ரூ.374 என்ற ஊதியமானது ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. எந்தவொரு மாநிலத்திலும் நூறு நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.400 ஐத் தொடுவது இதுவே முதல் முறை ஆகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம், 2005 இன் பிரிவு 6 இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊதிய விகிதங்கள் நிதியாண்டின் முதல் நாள் (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகின்றன.

தமிழ்நாட்டிற்கு எவ்வளவு?

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தற்போது 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. அதிலிருந்து 5.33 சதவிகிதம் அதாவது 17 ரூபாயை உயர்த்தி, இனி நாளொன்றிற்கு ரூ.336 ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கான 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை, மத்திய அரசு விடுவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவும் சூழலில் இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டு ஊழியர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எதனடிப்படையில் ஊதிய உயர்வு?

கிராமப்புறங்களில்  பணவீக்க அதிகரிப்பைப் பிரதிபலிக்கும் CPI-AL ( விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு) மாற்றங்களின்படி நூறு நாள் வேலை திட்டத்தின் ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் (2024-25), கோவா அதன் முந்தைய ஆண்டை (2022-23) விட அதிகபட்சமாக 10.56% ஊதிய உயர்வைக் கண்டது. உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மிகக் குறைந்த அளவில் 3.04% ஊதிய உயர்வை பதிவு செய்தன. நடப்பு நிதியாண்டில் (2024-25), மார்ச் 19 வரை 5.66 கோடி குடும்பங்கள் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தைப் பெற்றுள்ளன.

100 நாள் வேலை திட்டம் யாருக்கானது?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ், உடலுழைப்பு வேலைகளைச் செய்யும் வயது வந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு கிராமப்புற குடும்பமும், ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்கள் கூலி வேலைவாய்ப்பைப் பெற உரிமை உண்டு.

சில சதர்ப்பங்களில் அரசாங்கம் கூடுதலாக 50 நாட்கள் கூலி வேலைவாய்ப்பை (நிர்ணயிக்கப்பட்ட 100 நாட்களுக்கு மேல்) அனுமதிக்கிறது. உதாரணமாக, வனப்பகுதியில் உள்ள ஒவ்வொரு பட்டியல் பழங்குடி குடும்பமும் NREGS இன் கீழ் 150 நாட்கள் வேலை பெற உரிமை உண்டு, அத்தகைய குடும்பங்களுக்கு வன உரிமைச் சட்டம், 2016 இன் கீழ் வழங்கப்பட்ட நில உரிமைகளைத் தவிர வேறு எந்த தனியார் சொத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், MGNREGA சட்டத்தின் பிரிவு 3(4) இன் கீழ், வறட்சி அல்லது இயற்கை பேரிடர் (உள்துறை அமைச்சகத்தின்படி) அறிவிக்கப்பட்ட கிராமப்புறங்களில், ஒரு நிதியாண்டில் கூடுதலாக 50 நாட்கள் ஒதுக்கப்படும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget