மேலும் அறிய

'சில்லரை கொடுப்பதில் தகராறு' : அரசுப்பேருந்து நடத்துனரை ஆட்டோவில் கடத்திய பெண்.. என்ன நடந்தது?

விருத்தாசலத்தில் சில்லரை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த பெண், அரசு பஸ் கண்டக்டரை ஆட்டோவில் கடத்தி சென்றார்.

விருத்தாசலத்தில் சில்லரை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த பெண், தனது ஆதரவாளர்களுடன் வந்து அரசு பஸ் கண்டக்டரை ஆட்டோவில் கடத்தி சென்றார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து நேற்று மாலை அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கதிர்வேல் என்பவர் பேருந்தை ஓட்டினார். மணிகண்ணன் என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார். இந்த பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் பயணிக்கும், நடத்துனருக்கும் இடையே சில்லரை கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் விருத்தாசலம் பாலக்கரையில் இறங்கிய அந்த பெண், நடந்த சம்பவம் குறித்து தனது ஆதரவாளர்களிடம் செல்போன் மூலம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அரசு பஸ் விருத்தாசலம் பேருந்து நிலையத்துக்கு சென்றதும், அங்கு பயணிகள் ஏறியும், இறங்கியும் கொண்டிருந்தனர்.


சில்லரை கொடுப்பதில் தகராறு' : அரசுப்பேருந்து நடத்துனரை ஆட்டோவில் கடத்திய பெண்.. என்ன நடந்தது?

அப்போது அந்த பெண், ஆட்டோவில் தனது ஆதரவாளர்களுடன் வந்து பேருந்தில் ஏறி கண்டக்டர் மணிகண்டனை திட்டி, தாக்கி அவரை அதே ஆட்டோவில் கடத்திச் சென்றனர். இதைப்பார்த்து பஸ் டிரைவரும், பயணிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஒன்று திரண்டு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் ஜங்ஷன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே கண்டக்டரை ஆட்டோவில் கடத்தி சென்றவர்கள், மீண்டும் பஸ் நிலையத்துக்கு வந்து அவரை விட்டுவிட்டு சென்றனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் டிரைவர் கதிர்வேல், கண்டக்டர் மணிகண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


சில்லரை கொடுப்பதில் தகராறு' : அரசுப்பேருந்து நடத்துனரை ஆட்டோவில் கடத்திய பெண்.. என்ன நடந்தது?

அப்போது அவர்கள், கண்டக்டர் மணிகண்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஒருவருக்கொருவர் நெட்டி தள்ளிக் கொண்டனர். இதுகுறித்து அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.


சில்லரை கொடுப்பதில் தகராறு' : அரசுப்பேருந்து நடத்துனரை ஆட்டோவில் கடத்திய பெண்.. என்ன நடந்தது?

அப்போது திடீரென பலத்த மழை பெய்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்பட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மணிகண்ணனை தாக்கியவா்கள் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அரசு பஸ்களை ஊழியர்கள் விருத்தாசலம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு கொண்டு சென்று விட்டனர். தொடர்ந்து அவர்கள் மேற்கொண்டு பஸ்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Embed widget