மேலும் அறிய

குழாயில் தண்ணீர் வர்ல.. தொட்டியில் அடைத்திருந்த குழந்தை சடலம்.. தஞ்சாவூரில் பரபரப்பு!

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறையில் பிறந்த பச்சிளம் குழந்தை சடலம் காணப்பட்டது. குழந்தையின் சடலத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வெளிமாவட்ட மற்றும் வெளியூரிலிருந்து 1000 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும், வெளிபுற நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். இதனால் இரவு பகல் முழுவதும் மருத்துவமனை வளாகம் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் 300 படுக்கை கொண்ட வார்டு அருகே அவசர சிகிச்சை பிரிவு செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள கழிவறை சுத்தம் செய்ய காலை துப்புரவு ஊழியர்கள் சென்றனர்.

அப்போது அங்கிருந்த ஒரு கழிவறையில் தண்ணீர் வரவில்லை. இதையடுத்து கழிவறைக்கு தண்ணீர் வரும் சிறிய பிளாஸ்டிக் தொட்டியை திறந்து பார்த்த போது அதில் ஒரு குழந்தையின் சடலம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் பிறந்த சில மணி நேரங்கள் ஆன பெண் குழந்தை பிணமாக கிடந்தது.



குழாயில் தண்ணீர் வர்ல.. தொட்டியில் அடைத்திருந்த குழந்தை சடலம்.. தஞ்சாவூரில் பரபரப்பு!

இது குறித்து துப்புரவு ஊழியர்கள் அங்கு பணியில் இருந்த மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவர்கள், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் மற்றும் மருத்துவக்கல்லூரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 அதன் பேரில் போலீஸ் டிஎஸ்பி கபிலன், மருத்துக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த குழந்தையின் உடல்  கழிவறை தொட்டிக்கு எப்படி வந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து மருத்துவமனையில் உள்ளவர்கள் கூறுகையில், மகப்பேறு மருத்துவமனை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது. அங்கு பிறந்த குழந்தைகள் முதல் குறிப்பிட்ட வயது வரை உள்ள குழந்தைகளுக்கு என்று அம்மருத்துவமனை இயங்கி வருகின்றது.  ஆனால் மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் மகப்பேறு பிரிவு கிடையாது. ஆனால் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை, கழிவறைக்கு செல்லும் சிறிய தண்ணீர் தொட்டியில் அமுக்கி வைத்திருப்பது கொடூரமான செயலாகும். தனக்கு பிறந்த குழந்தையை மறைக்க முடியாததால், பிறந்தவுடன், குழந்தையை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்திருக்கலாம். தற்போது அந்த வார்டுக்குள் இருக்கும் சிசிடிவி கேமராவை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதில் ஒரு பெண் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அவரை பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பிறந்த பெண் குழந்தையை தண்ணீர் முழ்கடித்து கொலை செய்த சம்பவம் மருத்துவமனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.