மேலும் அறிய

Crime: சாலையில் குத்திக்கொன்று எரிக்கப்பட்ட நர்ஸ் - நெல்லையில் கணவன் வெறிச்செயல்

கணவன் மனைவி தகராறில் ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள  சாலையிலேயே செவிலியர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சங்கரலிங்கபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தற்போது வேறு மதத்திற்கு மாறியதாக தெரிகிறது. இவரது மனைவி அய்யம்மாள்(45).  இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. இச்சூழலில் மூன்று மகன்களில் இரண்டு மகன்கள் அய்யம்மாளுடனும் ஒரு மகன் பாலசுப்பிரமணியனுடனும் வசித்து வந்துள்ளனர்.

மேலும் அய்யம்மாள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனால் பணி நிமித்தமாக மருத்துவமனை அருகே அண்ணாநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் பணி முடித்து இரவு வீடு திரும்பிய அவர் அண்ணா நகரில் முக்கிய  சாலையில் கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும்  நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார்.

முதற்கட்ட விசாரணையில், அய்யம்மாள் வீடு திரும்பிய நிலையில் கணவர் பாலசுப்பிரமணியன் அங்கு வந்து தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது சாலையிலேயே கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின் சாலையில் இருவரும் சண்டையிட்டு சென்றதை சுற்றி இருந்த அக்கம் பக்கத்தினர் பார்த்ததாகவும் தெரியவந்தது. இந்த நிலையில் தான் தகராறு முற்றவே கணவன் பாலசுப்பிரமணியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்தி உள்ளார். மேலும் ஆத்திரம் தீராமல் அவர் வைத்திருந்த பெட்ரோலை அய்யம்மாள் மீது  ஊற்றி  தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் என தெரியவந்துள்ளது.  இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாலசுப்பிரமணியனை தேடி வந்தனர். மேலும் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக  அவர் பணிபுரியும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தற்போது பாலசுப்பிரமணியம் கோவில்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். கணவன் மனைவி தகராறில் ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள  சாலையிலேயே செவிலியர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget