Crime: சாலையில் குத்திக்கொன்று எரிக்கப்பட்ட நர்ஸ் - நெல்லையில் கணவன் வெறிச்செயல்
கணவன் மனைவி தகராறில் ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையிலேயே செவிலியர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
![Crime: சாலையில் குத்திக்கொன்று எரிக்கப்பட்ட நர்ஸ் - நெல்லையில் கணவன் வெறிச்செயல் Crime: Nellai Govt Medical College nurse stabbed to death and burnt on the road TNN Crime: சாலையில் குத்திக்கொன்று எரிக்கப்பட்ட நர்ஸ் - நெல்லையில் கணவன் வெறிச்செயல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/aa228ad6de9c14714e7c2e7083c892b01683219807101109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சங்கரலிங்கபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தற்போது வேறு மதத்திற்கு மாறியதாக தெரிகிறது. இவரது மனைவி அய்யம்மாள்(45). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. இச்சூழலில் மூன்று மகன்களில் இரண்டு மகன்கள் அய்யம்மாளுடனும் ஒரு மகன் பாலசுப்பிரமணியனுடனும் வசித்து வந்துள்ளனர்.
மேலும் அய்யம்மாள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனால் பணி நிமித்தமாக மருத்துவமனை அருகே அண்ணாநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் பணி முடித்து இரவு வீடு திரும்பிய அவர் அண்ணா நகரில் முக்கிய சாலையில் கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார்.
முதற்கட்ட விசாரணையில், அய்யம்மாள் வீடு திரும்பிய நிலையில் கணவர் பாலசுப்பிரமணியன் அங்கு வந்து தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது சாலையிலேயே கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின் சாலையில் இருவரும் சண்டையிட்டு சென்றதை சுற்றி இருந்த அக்கம் பக்கத்தினர் பார்த்ததாகவும் தெரியவந்தது. இந்த நிலையில் தான் தகராறு முற்றவே கணவன் பாலசுப்பிரமணியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்தி உள்ளார். மேலும் ஆத்திரம் தீராமல் அவர் வைத்திருந்த பெட்ரோலை அய்யம்மாள் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் என தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாலசுப்பிரமணியனை தேடி வந்தனர். மேலும் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அவர் பணிபுரியும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தற்போது பாலசுப்பிரமணியம் கோவில்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். கணவன் மனைவி தகராறில் ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையிலேயே செவிலியர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)