மேலும் அறிய

Tokyo Olympics: டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் டென்னிஸ் : சானியா-அன்கிதா ஜோடி போராடி தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா-அன்கிதா ரெய்னா ஜோடி முதல் சுற்று போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறினர்.

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளில் நேற்று ஆடவர் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியாவின் சுமித் நகல் முதல் சுற்று போட்டியில், உஸ்பெக்கிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்டோமினை எதிர்கொண்டார். இந்த போட்டியில், 6-4, 6-7, 6-4  என்ற செட் கணக்கில் சுமித் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

இந்நிலையில் மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் அன்கிதா ரெய்னா ஜோடி பங்கேற்றது. இவர்கள் இருவரும் உக்ரைன் நாட்டின் கிச்னோக் சகோதரிகளை எதிர்கொண்டனர். அதில் சிறப்பாக விளையாடிய இந்திய இணை முதல் செட்டை வெறும் 21 நிமிடங்களில் 6-0 என்ற கணக்கில் வென்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் உக்ரைன் ஜோடி சற்று சுதாரித்து கொண்டு விளையாடியது. அதில் முதலில் இரண்டு கேம்களை வென்றது. அதன்பின்னர் சானியா-அன்கிதா ஜோடி மீண்டும் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடங்கியது. எனினும் இறுதியில்  இரண்டாவது செட்டை 6-7என்ற கணக்கில் உக்ரைன் ஜோடி கைப்பற்றியது. அதன்பின்பு நடைபெற்ற மூன்றாவது டை பிரேக்கர் செட்டை கிச்னோக் சகோதரிகள் 10-8 என்ற கணக்கில் வென்றனர். 



Tokyo Olympics: டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் டென்னிஸ் : சானியா-அன்கிதா ஜோடி போராடி தோல்வி..!

இதன்மூலம் சானியா மிர்சா-அன்கிதா ரெய்னா ஜோடி ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றிலேயே மீண்டும் இந்திய ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. ஏனென்றால் இதற்கு முன்பாக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சுனிதா ராவ் உடன் மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்று முதல் சுற்றுடன் வெளியேறினார். 2012 லண்டன் ஒலிம்பிக் ருஷ்மி சக்ரவர்த்தியுடன் இணைந்து சானியா மிர்சா மீண்டும் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் சானியா மிர்சா-பிரார்தனா ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்தச் சூழலில் இம்முறை சானியா-அன்கிதா ஜோடி மகளிர் இரட்டையர் பிரிவில் இம்முறையும் சானியா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. 

இந்தியா சார்பில் நான்காவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை சானியா மிர்சா படைத்துள்ளார். இதற்கு முன்பாக தடகள வீராங்கனை பி.டி.உஷா (1980,1984,1988,1996) ஆகிய நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதேபோல் இம்முறை சானியா மிர்சாவை போல் வட்டு எறிதல் வீராங்கனை சீமா புனியா தன்னுடைய 4ஆவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார். சீமா புனியா (2004,2012,2016) ஆகிய மூன்று ஒலிம்பிக் தொடரில் பங்கேற்று உள்ளார். 

கடைசியாக 1996ஆம் ஆண்டு அட்லான்டா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதன்பின்னர் இந்திய ஒலிம்பிக் டென்னிஸ்   வரலாற்றில் இதுவரை பதக்கம் வெல்லவில்லை. எனவே 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் சானியா மிர்சா 25 ஆண்டு கால பதக்க கனவை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இம்முறையும் சானியா மிர்சா ஏமாற்றம் அளித்தார். 

மேலும் படிக்க:டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் : வெற்றியுடன் தொடங்கினார் பி.வி.சிந்து..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget