மேலும் அறிய

Sadhguru: “இந்தியா ஐம்பது கோடி இளைஞர்களைக் கொண்டது.. அது ஒரு அதிசயமாக உருவெடுக்க முடியும்” - சத்குரு

நம்மிடம் இருக்கும் வாய்ப்பினைக் கைநழுவவிடுவதில் நமக்கு நீண்ட வரலாறு உள்ளது என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

ஒரு ஜனநாயகத்தில் வாழ்வதன் அர்த்தம் குறித்து சத்குரு சொல்கிறார்...

சத்குரு: இந்திய மக்கள் தொகையில் அறுபது சதவிகிதத்துக்கும் அதிகமானோர் முப்பது வயதுக்குக் குறைவானவர்கள். ஐம்பது கோடி இளைஞர்கள் இருக்கும்போது, அவர்கள் மட்டும் ஆரோக்கியமாக, பயிற்சி பெற்றவர்களாக, முனைப்பானவர்களாக இருந்துவிட்டால், அது ஒரு பிரம்மாண்டமான வாய்ப்பு. அது ஒரு அதிசயமாக உருவெடுக்கமுடியும். பூமியில் வேறெந்த தேசத்தாலும் செய்ய முடியாததை இந்த தேசத்தால் செய்யமுடியும், ஏனென்றால் தற்போது அது அப்படிப்பட்ட ஒரு மாபெரும் சாத்தியத்தின் வாசலில் நிலைகொண்டுள்ளது.

வழக்கமாகவே மூத்த தலைமுறையானது, எப்போதும் இளைய சமுதாயத்தை கையாளும்போது, அது சரிசெய்யப்படவேண்டிய அல்லது சிகிச்சை தேவைப்படுகின்ற ஒருவித நோய் என்பதுபோல கையாள முயற்சிக்கிறது. இளைஞர்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. வாழ்க்கையிலிருந்து விலகிச்சென்றுள்ள மூத்த மக்களுக்குத்தான் சிகிச்சை தேவை. எனவே எப்போதும் கையாளத்தேவைப்படுகின்ற ஒருவித நோயைப் போல இளைய சமுதாயத்தை நடத்துவதற்குப் பதிலாக, மனித குலத்தின் ஏனைய பகுதிகளை விட இங்கு இளைய சமுதாயம் அதிக உயிரோட்டத்துடன் இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஒரே பிரச்சனை என்னவென்றால், அவர்கள் உத்வேகமில்லாத சக்தியாக இருக்கும் காரணத்தால், ஊக்கம் இல்லையென்றால், முறையான வழிகாட்டல் இல்லையென்றால், அது மிக எளிதில் எதிர்மறையாக மாறிவிடுகிறது.

நாம் கவனித்து சரிசெய்யவேண்டிய மிக முக்கியமான அம்சம், இளைஞர்களிடையே சுத்தமாக ஊக்கமின்றி இருப்பதைத்தான்.

கல்வியின் ஊக்கமூட்டும் பரிமாணம் முற்றிலுமாக செயலிழந்துவிட்ட நிதர்சனத்திலிருந்தே இந்த நிலைமை எழுகிறது. ஊக்கம் இல்லையென்றால், எந்த மனிதரும் அவர் தற்போது வாழ்ந்திருக்கும் உடலளவிலான, மனதளவிலான அல்லது சமூக அளவிலான எல்லைகளைக் கடந்து உயர்வதில்லை. ஒரு மனிதர் ஊக்கம் பெற்றவராக இருக்கும்பொழுதுதான், அவர் தற்போது இருக்கும் எல்லைகளைக் கடந்து செல்வதற்கு விரும்புகிறார். ஆகவே நமது இளைஞர்களுக்கு தகவலறிவைப் பரிமாறுவதில் நமது நேரம், வளங்கள் மற்றும் சக்திகளை நாம் முதலீடு செய்வதைப்போல, மக்களை ஊக்கப்படுத்துவதற்கும்கூட, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நேரம், சக்தி மற்றும் வளங்களை முதலீடு செய்யவேண்டும். இந்த நாட்டில் நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக, மக்கள் ஒரே நிலைமையில்தான் வாழ்ந்து வந்துள்ளனர். ஆமாம், மகாராஜா தங்கக் காலணிகள், வைரக் கிரீடங்கள், என்று என்னவெல்லாமோ வைத்திருந்தார், ஆனால் எப்போதும் இந்த நாட்டில் மக்கள் தலைமுறை தலைமுறையாக மிக மோசமான, அடிப்படை வசதிகளே மறுக்கப்பட்ட சூழல்களில்தான் வாழ்ந்துள்ளனர், இப்போதும் அது நீடிக்கிறது. இது குறித்து நான் ஆழந்த கவலை கொள்கிறேன், ஏனென்றால் நான் எங்கு சென்றாலும், மக்கள் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையுடன் இருப்பதைக் காண்கிறேன், “ஓ, இந்தியா ஒரு வல்லரசாக மாறப்போகிறது”.

நம்மிடம் இருக்கும் வாய்ப்பினைக் கைநழுவவிடுவதில் நமக்கு நீண்ட வரலாறு உள்ளது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். நாம் அதில் மிகவும் தேர்ந்தவர்கள்! நம்மால் ஏறக்குறைய எந்த விஷயத்தையும் முட்டாள்தனமாக தவறவிட முடியும், இல்லையா? நாம் அப்படி செய்யக்கூடியவர்கள்தான், ஒரு கிரிக்கெட் மேட்சில் தொடங்கி எந்த ஒரு விஷயதை எடுத்துகொண்டாலும் – நம் கையில் இருப்பதைக்கூட நாம் கைநழுவ விட்டுவிடுகிறோம். ஆகவே, இந்த ஒரு விஷயத்தை நாம் முட்டாள்தனமாக தவறவிடாமல் இருப்பது மிக முக்கியமானது.

ஏனென்றால் சூழ்நிலையை நாம் சரியாகக் கையாண்டால், ஐம்பது கோடி மக்களின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றம் ஏற்படமுடியும். இந்த முறை, செழுமையை நோக்கிய பயணத்தில் நாம் நம் இலக்கினை அடைய விரும்பினால், ஒரு சில விஷயங்களில் நாம் புத்திசாலித்தனத்துடன் செயல்படவேண்டும். அவற்றுள் ஒன்று, நம்மிடம் இருக்கும் பெரும் இளைய சமுதாயத்தினரை ஒருங்கிணைத்து, பேணி வளர்த்து, வழிநடத்தி, ஊக்கப்படுத்தி, பயிற்சி கொடுத்து, அவர்களை உத்வேகமானவர்களாக மாற்றவேண்டும். மேலும், இது தானாக நிகழ்ந்துவிடப் போவதில்லை" என்கிறார்

இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் சத்குருவுடையது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Asian Relay Championships: 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய ரிலே அணி தங்கம்.. புதிய தேசிய சாதனையும் படைப்பு!
4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய ரிலே அணி தங்கம்.. புதிய தேசிய சாதனையும் படைப்பு!
Lok Sabha Election Phase 6: 6ம் கட்ட வாக்குப்பதிவு - 58 மக்களவை தொகுதிகள், 889 வேட்பாளர்கள் - தலைநகர் டெல்லி யாருக்கு?
Lok Sabha Election Phase 6: 6ம் கட்ட வாக்குப்பதிவு - 58 மக்களவை தொகுதிகள், 889 வேட்பாளர்கள் - தலைநகர் டெல்லி யாருக்கு?
Breaking News LIVE: நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை - 6 தனிப்படைகள் அமைப்பு
Breaking News LIVE: நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை - 6 தனிப்படைகள் அமைப்பு
ICC Israeli PM: ஐசிசி கோரிக்கை - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கைதாகிறாரா? போர் குற்றம், கொதித்த ஜோ பைடன்
ICC Israeli PM: ஐசிசி கோரிக்கை - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கைதாகிறாரா? போர் குற்றம், கொதித்த ஜோ பைடன்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

BJP cadre false complaint : பொய் சொன்ன பாஜக பிரமுகர்! உண்மையை உடைத்த கொள்ளையன்! ஆத்திரத்தில் POLICEVeeralakshmi on Vijay Dhanush : ”விஜய், தனுஷ், த்ரிஷா..உடனே டெஸ்ட் எடுங்க”வீரலட்சுமி பரபரப்பு புகார்Akshay kumar first vote : 56 வயதான அக்‌ஷய் குமார்! முதல்முறையாக வாக்களித்தார் காரணம் என்ன?Salem differently abled : மூன்று சக்கர வாகனத்தில் உணவு டெலிவரி! அசத்தும் மாற்றுத்திறனாளி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Asian Relay Championships: 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய ரிலே அணி தங்கம்.. புதிய தேசிய சாதனையும் படைப்பு!
4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய ரிலே அணி தங்கம்.. புதிய தேசிய சாதனையும் படைப்பு!
Lok Sabha Election Phase 6: 6ம் கட்ட வாக்குப்பதிவு - 58 மக்களவை தொகுதிகள், 889 வேட்பாளர்கள் - தலைநகர் டெல்லி யாருக்கு?
Lok Sabha Election Phase 6: 6ம் கட்ட வாக்குப்பதிவு - 58 மக்களவை தொகுதிகள், 889 வேட்பாளர்கள் - தலைநகர் டெல்லி யாருக்கு?
Breaking News LIVE: நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை - 6 தனிப்படைகள் அமைப்பு
Breaking News LIVE: நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை - 6 தனிப்படைகள் அமைப்பு
ICC Israeli PM: ஐசிசி கோரிக்கை - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கைதாகிறாரா? போர் குற்றம், கொதித்த ஜோ பைடன்
ICC Israeli PM: ஐசிசி கோரிக்கை - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கைதாகிறாரா? போர் குற்றம், கொதித்த ஜோ பைடன்
HBD Mohanlal: நாடு இழந்த மாவீரன்! நடிப்பிற்காக மோகன்லால் செய்த தியாகம் - என்ன தெரியுமா?
HBD Mohanlal: நாடு இழந்த மாவீரன்! நடிப்பிற்காக மோகன்லால் செய்த தியாகம் - என்ன தெரியுமா?
Lok Sabha Election 2024 Phase 5 Voting: 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகளில் 60% வாக்குப்பதிவு, மேற்குவங்கத்தில் உச்சம்
Lok Sabha Election 2024 Phase 5 Voting: 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகளில் 60% வாக்குப்பதிவு, மேற்குவங்கத்தில் உச்சம்
TN Rain: தமிழ்நாட்டில் கொட்டும் கோடை மழை.. மகிழ்ச்சியில் மக்கள்.. இன்றைய நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் கொட்டும் கோடை மழை.. மகிழ்ச்சியில் மக்கள்.. இன்றைய நிலவரம் என்ன?
20 Years Of Aayutha Ezhuthu: தீப்பந்தம் எடு தீமையைச் சுடு...20 ஆண்டுகளை கடந்துள்ள ஆய்த எழுத்து!
தீப்பந்தம் எடு தீமையைச் சுடு...20 ஆண்டுகளை கடந்துள்ள ஆய்த எழுத்து!
Embed widget