கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷ விழா
கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, அபிஷேக பொடி ,அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களா அபிஷேகம் நடைபெற்று வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,தேன், நெய், இளநீர் எலுமிச்சை சாறு திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி ,அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து வெள்ளி கவசம் சாத்தப்பட்ட பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நந்தி பகவானுக்கு நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத பிரதோஷ விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

