மேலும் அறிய

Iran Blames Israel: “அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?

இஸ்ரேல்-ஈரான் இடையே தாக்குதல்கள் வலுக்கும் நிலையில், பெரும் போரை நோக்கி இந்த தாக்குதல்கள் சென்று கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில், போர் நிறுத்தம் குறித்து ஈரான் கூறியுள்ளது என்ன தெரியுமா.?

அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள், நாங்கள் நிறுத்துகிறோம் என்பது போல், இஸ்ரேல் தங்கள் மீதான தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே, தங்களது பதில் தாக்குதல்களை நிறுத்த முடியும் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ள என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

போர் நிறுத்தம் குறித்து ஈரான் கூறியுள்ளது என்ன.?

நேற்று நள்ளிரவில், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. அதில், குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 200 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.

இந்த நிலையில், இந்த தாக்குதல்கள் குறித்து பேசியுள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் ஆரக்சி, தங்கள் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார். மேலும், தற்போது தாங்கள் நடத்திவரும் தாக்குதல்கள் வெறும் தற்காப்புக்காக மட்டுமே என தெரிவித்துள்ளார்.

அதோடு, இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளுடன் பிரச்னைகளை வளர்க்க ஈரான் விரும்பவில்லை என்றும், நிர்பந்தத்தாலேயே அவ்வாறு நடப்பதாக ஆரக்சி கூறியுள்ளார்.

“போரை விரிவுபடுத்த முயல்கிறது இஸ்ரேல்“

மேலும், தெற்கு பார்ஸ் எரிவாயு வயலில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது மிகவும் ஆபத்தான செயல் என்றும், போரை விரிவுபடுத்தும் முயற்சியாகவே இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆரக்சி.

இந்த மோதலை, பாரசீக வளைகுடாவிற்கு இழுப்பது ஒரு மூலோபாய தவறு என்றும், இஸ்ரேலின் நோக்கம், ஈரானியை எல்லைக்கு அப்பால் போரை இழுப்பதுதான் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைப்பதன் மூலம், அவர்கள் சர்வதேச சட்டத்தில் ஒரு புதிய சிகப்புக் கோட்டை தாண்டிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

“ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையை நிறுத்த முயற்சி“

அதோடு, தற்போது ஈரான் - அமெரிக்கா இடையே நடைபெற்றுவரும் அணுசக்தி குறித்த பேச்சுவாத்தையை நாசமாக்கவே இஸ்ரேல் இவ்வாறு செய்வதாகவும் ஆரக்சி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவுடன் இன்று நடைபெற இருந்த 6-வது கட்ட பேச்சுவார்த்தையின்போது, ஈரான் ஒரு முன்மொழிவை வழங்க இருந்ததாகவும், இஸ்ரேலின் தாக்குதலால், அந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாகவும் ஆரக்சி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ஈரான் - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்படுவதை இஸ்ரேல் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதை விரும்பாததாலேயே, வெள்ளிக் கிழமையன்று இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதாக ஆரக்சி குறிப்பிட்டுள்ளார்.

“இஸ்ரேலுக்கு உதவுகிறது அமெரிக்கா“

மேலும், இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலுக்கு அமெரிக்க படைகள் உதவியதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளதாக தெரிவித்துள்ள ஆரக்சி, வாஷிங்டன் பச்சைக் கொடி காட்டாமல் இந்த தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேலின் தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என்று அமெரிக்கா கூறுவதை தாங்கள் நம்பவில்லை என்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் ஆரக்சி தெரிவித்துள்ளார்.

ஈரான் இவ்வாறு கூறியுள்ள நிலையில், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துமா.? அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதற்கான விடை, வரும் நாட்களில் தான் தெரியவரும்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Vs Starmer: “போருக்குள்ள எங்கள இழுக்க முடியாது“ ஒரே போடாய் போட்ட ஸ்டார்மர்; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில்
“போருக்குள்ள எங்கள இழுக்க முடியாது“ ஒரே போடாய் போட்ட ஸ்டார்மர்; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில்
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Trump Iran War: ”அடிச்சு காலி பண்ணுங்க, 2-3 வாரம் தான் டைம்” - ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஆர்டர் - ஹெல்ப்புக்கு வாங்க
Trump Iran War: ”அடிச்சு காலி பண்ணுங்க, 2-3 வாரம் தான் டைம்” - ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஆர்டர் - ஹெல்ப்புக்கு வாங்க
Iran Pezeshkian Vs Trump: எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஈரான் அதிபர்; அமெரிக்க மக்களுக்கு கடிதம்; பழிக்குப் பழி.!
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஈரான் அதிபர்; அமெரிக்க மக்களுக்கு கடிதம்; பழிக்குப் பழி.!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget