மேலும் அறிய

தஞ்சையில் கொண்டாட்டமாக 52 விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம்

பல்வேறு பகுதிகளிலிருந்து ஸ்ரீ விஸ்வரூப விநாயகர் விழாக் குழு சார்பில் 35 விநாயகர் சிலைகள் ரயிலடிக்குக் கொண்டு வரப்பட்டன.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் 52 சிலைகள் எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன.

விநாயக சதுர்த்தி விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்படும். பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்துவிடுவர்.

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூரில் பாஜக, இந்து முன்னணி, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 74 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. இவற்றில் 20-க்கும் அதிகமான சிலைகள் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் கரைக்கப்பட்டன.

இந்நிலையில், மூன்றாம் நாளான நேற்று மாலை விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஸ்ரீ விஸ்வரூப விநாயகர் விழாக் குழு சார்பில் 35 விநாயகர் சிலைகள் ரயிலடிக்குக் கொண்டு வரப்பட்டன.

பின்னர், இந்த அமைப்பு சார்பில் நடைபெற்ற ஊர்வலத்துக்குக் குழு ஒருங்கிணைப்பாளர் வி. விநாயகம் தலைமை வகித்தார். இந்த ஊர்வலத்தை பாஜக தேசியப் பொதுக் குழு உறுப்பினர் எம்.எஸ். ராமலிங்கம் தொடங்கி வைத்தார். தெற்கு மாவட்டத் தலைவர் பி. ஜெய்சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தஞ்சையில் கொண்டாட்டமாக 52 விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம்

தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஊர்வலத்துக்கு மாவட்டச் செயலர் குபேந்திரன் தலைமை வகித்தார். இதில், 17 விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. இச்சிலைகள் காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கொடிமரத்து மூலை, கரந்தை வழியாகச் சென்று வடவாற்றில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி, போலீசார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஆங்காங்கே உள்ள ஆறுகளிலும், கடலிலும் கரைக்கப்பட்டன.
இதேபோல் வல்லம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 13 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் சென்று புது ஆற்றில் கரைக்கப்பட்டது.

இதற்காக தஞ்சை அருகே வல்லம் வட்டாரத்தில் 13 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த வகையில் திருக்கானூர்பட்டி, குருங்குளம், வல்லம் நகர் பகுதிகள் என்று விநாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மூன்றாம் நாளான நேற்று அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ரெட்டிப்பாளையம் கல்லணைக்கால்வாயில் (புதுஆறு) விசர்ஜனம் செய்யப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget