மேலும் அறிய

கத்தாரில் கைதான ஹைதராபாத் நபர் வைத்திருந்தது போதைப் பொருளா? பாண்ட்ஸ் பவுடரா?

ஹைதராபாத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி வேலை தேடி கத்தார் சென்ற நிலையில் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி வேலை தேடி கத்தார் சென்ற நிலையில் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைதாகி இரண்டு மாதங்களாகிவிட்ட நிலையில் அவரது குடும்பத்தாரோ முகமது நவாஸ் என்ற அந்த இளைஞர் டிஸ்யூ பேப்பரில் டால்கம் பவுடரைத் தான் மடித்துவைத்திருந்தார் என்று கூறுகின்றனர்.

ஹைதராபாத் மாநிலத்தின் உப்புகுடா பகுதியைச் சேர்ந்தவர் முகமது நவாஸ். 28 வயதான எம்பிஏ பட்டதாரியான இவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளிடம் சிக்கினார். அவருடைய லேப்டாப் பையில் போதை மருந்தை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டார். 

இது குறித்து பத்திரிகையில் வெளியான செய்தியில் நவாஸ், தான் டிஸ்யூ பேப்பரில் வெறும் டால்கம் பவுடரையே வைத்திருந்ததாகக் கூறினார். அந்தப் படவுரை பரிசோதனைக்கு அனுப்பியதாகக் கூறும் அதிகாரிகள் முடிவை வெளியிட மட்டும் தாமதப்படுத்துகின்றனர் என்று குற்றம்சாட்டுகிறார். 2021ல் தான் முகமது நவாஸ் முதன்முதலாக தோஹா சென்றுள்ளார். ஆனால் அங்கு பல மாதம் அலைந்து திரிந்தும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் அங்கிருந்து கத்தார் செல்ல திட்டமிட்டார். ஆனால் டிசம்பர் 11ல் அவரை சுங்கத்துறையின் தோஹாவில் கைது செய்தனர். அதிலிருந்தே நவாஸ் சிறையில் தான் இருக்கிறார். 

தெலங்கானா டுடே செய்தித் தாளில் இது தொடர்பான செய்திகள் வெளியாகின. நவாஸின் குடும்பத்தினர் திட்டவட்டமாக அவர் மீதான குற்றச்சாட்டை மறுக்கின்றனர். அவர் பாண்ட்ஸ் பவுடரை ஒரு பொட்டலத்தில் வைத்திருந்தனர் என்றே கூறுகின்றனர்.

இது குறித்து கத்தார் அரசு தரப்பில், கொரோனா தொற்று அதிகரித்ததால் ஆய்வுக்கூடங்கள் அனைத்துமே அதில் பரபரப்பாக இருப்பதால் நவாஸ் வைத்திருந்த சாம்பிளை சோதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையில் அடுத்த வாரம் கத்தாரில் உள்ள தெலுங்கான நல வாரிய வழக்கறிஞர்கள் கத்தார் தூதரக அதிகாரிகளை சந்தித்து இது குறித்துப் பேசவுள்ளனர்.

கத்தாரில் போதைப் பொருள் கடத்தலுக்கு என்ன தண்டனை?
கத்தார் நாட்டில் போதைப் பொருளை வைத்திருந்தாலோ, பயன்பட்டுத்தினாலோ கடத்தினாலோ கடுமையான தண்டனைகள் உண்டு. சில நேரங்களில் நாடுகடத்தப்படுவார்கள். சில நேரங்களில் மிக நீண்ட சிறைத் தண்டனை விதிக்கப்படும். மிகவும் அதிகமான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அபராதத் தொகையாக QR200,000 (கத்தாரி ரியால்) வரை அனுப்பப்படும். அதேபோல் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களின் குற்றத்தின் வீரியத்தைப் பொறுத்து மரண தண்டனை வரை விதிக்கப்படலாம். 

வளைகுடா நாடுகளில் போதைப் பொருள் கடத்தல் கொடுங் குற்றமாகக் கருதப்படுவதால் அங்கு தண்டனைகளும் மிகக் கடுமையாக இருக்கின்றன?

இந்நிலையில் தவறு செய்யவில்லை என்று கூறும் இந்திய இளைஞர் முகமது நவாஸுக்கு நீதி கிடைக்குமா? அடுத்த வாரம் தூதரக அதிகாரிகளுடன் தெலுங்கானா நல வாரிய வழக்கறிஞர்கள் மேற்கொள்ளவிருக்கும் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்: அன்பு வேண்டுகோள் மூலம் செக் வைத்த பிரேமலதா!
திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்: அன்பு வேண்டுகோள் மூலம் செக் வைத்த பிரேமலதா!
Breaking News LIVE, June 5: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
Breaking News LIVE, June 5: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
Rishi Sunak:
Rishi Sunak: "தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது... மன்னிக்கவும்" - தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்: அன்பு வேண்டுகோள் மூலம் செக் வைத்த பிரேமலதா!
திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்: அன்பு வேண்டுகோள் மூலம் செக் வைத்த பிரேமலதா!
Breaking News LIVE, June 5: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
Breaking News LIVE, June 5: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
Rishi Sunak:
Rishi Sunak: "தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது... மன்னிக்கவும்" - தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக் 
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
Embed widget