சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு
பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பதால் இந்த போட்டி ரசகிர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பதால் இந்த போட்டி ரசகிர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
மிரட்டுவாரா 'மக்களின் கேப்டன்' ஷ்ரேயாஸ்?
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் முடிவில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதன்படி, முதல் இரண்டு இடங்களை பிடித்த பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் போட்டியில் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ராஜத் பட்டிதார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். கடந்த இரண்டு போட்டிகளாக காயம் காரணமாக இம்பாக்ட் பிளேயராக களமிறங்கி வந்த பட்டிதார், இந்த போட்டியில் மீண்டும் கேப்டனாக களமிறங்கியுள்ளார்.
பெங்களூரு அணி விவரம்: விராட் கோலி, பிலிப் சால்ட், பட்டிதார், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா
பஞ்சாப் அணி விவரம்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன்
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பஞ்சாப் அணி ஒரே முறையும், பெங்களூரு அணி 3 முறையும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. ஆனால், இரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு?
இன்றைய போட்டி நடைபெறும் முல்லன்பூர் மைதானத்தில் நடப்பாண்டில் இதுவரை 4 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதன்படி முதல் இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 183 ஆக உள்ளது. முதலில் பேட்டிங் செய்தவர்களே 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் தொடக்க வீரர்கள் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஸ்ரேயாஸ் அய்யர் மிடில் ஆர்டரை வலுப்படுத்த, நேஹல் வதேரா மற்றும் ஸ்டோய்னிஸ் அசாதாரணமான ஃபார்மில் இருப்பது அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது.
பஞ்சாப் அணிக்கு நிகராக பெங்களூருவின் தொடக்க வீரர்களான சால்ட் - கோலி ஜோடி அதிரடியாக ரன் சேர்த்து வருகிறது. படிதாரின் காயம் பிரச்னையாக இருந்தாலும், ஜிதேஷ் சர்மா மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிக்கிறார்.




















