மேலும் அறிய

EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்

எங்களுக்கு எம்.பி சீட் கொடுத்தே ஆக வேண்டும் என்றும் அதிமுக சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுள்ளார். அவர் என்ன சொன்னார்.? முழு விவரம் இதோ.

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்களுக்கு ஒரு எம்.பி சீட்டை அதிமுக வழங்கியே ஆக வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல்

தமிழ்நாட்டில் காலியாகவிருக்கும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல், ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது எம்.பி-க்களாக உள்ள அன்புமணி ராமதாஸ், சண்முகம், சந்திரசேகரன், எம்.எம். அப்துல்லா, பி. விலசன், வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், ஜூன் 19-ம் தேதி, தமிழகத்திலிருந்து மீண்டும் 6 எம்.பி-க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தேமுதிக-விற்கு வாய்மொழி உத்தரவாதம் அளித்த அதிமுக

அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளின் உதவியோடு 2 இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின்போது, தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா தேர்தல் வாய்ப்பு தருவதாக வாய்மொழி உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதனால், தற்போது தங்களுக்கு சீட் கிடைக்கும் என தேமுதிக எதிர்பார்ப்பில் உள்ளது. ஆனால், அப்படி எந்த உத்தரவாதமும் தரவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு சீட் கொடுத்தே ஆக வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியது என்ன.?

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் இது குறித்து பேசியுள்ளார். தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை என்றும், அதிமுக உடனான கூட்டணியில் மாநிலங்களவை இடத்தை பெறுவது தேமுதிகவின் உரிமை என்றும் பிரேமலதா கூறியுள்ளார். கடந்த 2024 மக்களவைத் தேர்தல் பேச்சுவார்த்தையின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். அந்த சமயத்தில், 5 இடங்களுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக அதிமுக உறுதி அளித்ததாகவும் பிரேமலதா கூறினார்.

“சொன்ன வார்த்தையை காப்பாற்றுங்கள்“

தொடர்ந்து பேசிய பிரேமலதா, அரசியலில் நம்பிக்கை மற்றும் வார்த்தைகள் முக்கியம் என்றும் சொன்ன வார்த்தைகளை காப்பாற்றினால் தான் மக்கள் உங்களை(அதிமுக) நம்புவார்கள் என்றும் கூறினார். ஏற்கெனவே இரண்டு முறை தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி கிடைக்க வேண்டியது தவறி விட்டது என்று தெரிவித்த பிரேமலதா, ஒரு முறை அன்புமணியும், இன்னொரு முறை ஜி.கே. வாசனும் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். அவர்களுக்கு அடுத்தபடியாக எங்களுக்கு கொடுப்பதாக உறுதியளித்தார்கள், அதனால் இது எங்களின் முறை, எங்களுக்குத் தர வேண்டியது அவர்களின் கடமை என்றும் பிரேமலதா திட்டவட்டமாக தெரிவித்தார்.

“திமுக செய்ததுபோல் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்“

திமுக சார்பில், கமல்ஹாசனுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி தற்போது சீட் கொடுத்து நம்பிக்கையை காப்பாற்றியுள்ளதாகவும், அதேபோல், எடப்பாடி பழனிசாமியும் கொடுத்த வாக்கை காப்பாற்றி நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரேமலதா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் மூலம், எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைத்துள்ளார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். அதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் என்ன பதிலளிக்கப் போகிறார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.

 

தலைப்பு செய்திகள்

CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
TVK VCK: திமுக-வுடன் உறவு கொண்டாடும் திருமா..! பாமக-வுடன் கூட்டு சேருகிறதா தவெக?
TVK VCK: திமுக-வுடன் உறவு கொண்டாடும் திருமா..! பாமக-வுடன் கூட்டு சேருகிறதா தவெக?
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
"தமிழ்நாட்டுல காலே வைக்க முடியல, இதுல 2031-ல ஆட்சியா?" - அண்ணாமலையை வாரிச் சுருட்டிய எம்பி சுதா!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Embed widget