மேலும் அறிய

Afghanistan Ambassador: இந்தியாவிற்கு புதிய தூதரை நியமித்துள்ளதா ஆப்கானிஸ்தான்..? உண்மை நிலவரம் என்ன?

தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்கும் முயற்சியில் சில நாடுகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அவர்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் ஏராளமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.   

அமெரிக்க ஆதரவு அரசு அமைவதற்கு முன்பு தலிபான்கள் ஆட்சி செய்தபோது இருந்த கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியது. இதன் காரணமாக, தலிபான் அரசாங்கத்திற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அங்கீகாரம் வழங்காமல் உள்ளது.

தலிபான் ஆட்சியை அங்கீகரிக்காத உலக நாடுகள்:

ஆனால், தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்கும் முயற்சியில் சில நாடுகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பாகிஸ்தான், சீனா, ரஷியா ஆகிய நாடுகள், தலிபான் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியா, கவனமான செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கு புதிய தூதரை தலிபான் அரசு நியமித்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தூதராக நியமிக்கப்பட்டவர் என சொல்லப்படுபவர் தூதரக அதிகாரிகளுக்கு எதிராக தவறான தகவல்கள் மற்றும் ஆதாரமற்ற பிரச்சாரம் மேற்கொள்வதாக இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவுக்கு புதிய தூதரா?

இதுகுறித்து இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஃபரித் மம்ஜாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலிபான்களின் உத்தரவின் பேரில் புதிய தூதராக பொறுப்பேற்றுக் கொண்டதாகக் கூறும் ஒரு நபரின் கூற்றுக்களை ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகம் திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

ஆப்கானிஸ்தான் மக்களின் நலன்களை ஆதரிப்பதற்காக இந்திய அரசாங்கத்தின் நிலையான நிலைப்பாட்டை தூதரகம் பாராட்டுகிறது. அதே நேரத்தில் காபூலில் உள்ள தலிபான் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை. இதையே உலகெங்கிலும் உள்ள ஜனநாயக அரசாங்கங்களும் கடைபிடிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள் அதன் தற்போதைய வர்த்தக ஆலோசகரான காதர் ஷாவை இந்தியாவுக்கான தூதராக நியமித்துள்ளதாக பல ஊடகங்களில் செய்தி வெளியானது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் ஏராளமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

மோசமான கட்டுப்பாடுகள்:

விதிக்கப்பட்டு வரும் பிற்போக்கான விதிகள் காரணமாக அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் மோசமான கட்டுப்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளுர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களில் பெண்களை பணியில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என தலிபான் அரசு கட்டுப்பாடு விதித்தது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது -  சீமான் சர்ச்சை பேச்சு.!
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது - சீமான் சர்ச்சை பேச்சு.!
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெக கொடிக்கு மீண்டும் சிக்கலா?
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெகவுக்கு மீண்டும் சிக்கலா?
"நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது" ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி!
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Madurai | Su Venkatesan vs Minister | MP சு.வெ vs அமைச்சர் மூர்த்திமுற்றும் வார்த்தைப்போர்!பற்றி எரியும் மதுரைUdhayanidhi on Tamilisai | ”அக்கா..கிரிவலம் நான் போனேனா?”தமிழிசைக்கு உதயநிதி பதிலடிRN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது -  சீமான் சர்ச்சை பேச்சு.!
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது - சீமான் சர்ச்சை பேச்சு.!
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெக கொடிக்கு மீண்டும் சிக்கலா?
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெகவுக்கு மீண்டும் சிக்கலா?
"நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது" ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி!
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
Breaking News LIVE 19th OCT 2024: “எங்க இருக்காங்களோ அங்க கொண்டாடிக்கட்டும்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Breaking News LIVE 19th OCT 2024: “எங்க இருக்காங்களோ அங்க கொண்டாடிக்கட்டும்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நெருங்கும் அமெரிக்க தேர்தல்: விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் எப்படி வாக்களிப்பார் தெரியுமா ?
நெருங்கும் அமெரிக்க தேர்தல்: விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் எப்படி வாக்களிப்பார் தெரியுமா ?
W T20 Final: இதுவரை எட்டாத உலகக்கோப்பை! ஜோக்கர்ஸ் பட்டத்தை தூக்கி எறியுமா தென்னாப்பிரிக்கா?
W T20 Final: இதுவரை எட்டாத உலகக்கோப்பை! ஜோக்கர்ஸ் பட்டத்தை தூக்கி எறியுமா தென்னாப்பிரிக்கா?
மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்.. சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்.. பதற்றம்!
மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்.. சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்.. பதற்றம்!
Embed widget