மேலும் அறிய

அரசு வேலை கன்ஃபார்ம் - ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த ஆயுதப்படை காவலர் - சிக்கியது எப்படி?

விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஆயுதப்படை காவலர் கைது.

விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடி செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். தனக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலருடன் நன்கு பழக்கம் இருப்பதாகவும், உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகவும் கூறியதோடு சில அரசு பணி நியமன உத்தரவுகளை காண்பித்துள்ளார்.

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடி

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சம்பத். இவருக்கும் கடலூர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் விழுப்புரம் வழுதரெட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (வயது 42) என்பவருக்கும் கடந்த 2018-ல் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது சம்பத்திடம், பாண்டியன் தனக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலருடன் நன்கு பழக்கம் இருப்பதாகவும், உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகவும் கூறியதோடு சில அரசு பணி நியமன உத்தரவுகளை காண்பித்துள்ளார்.

ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பணம் மோசடி

இதை நம்பிய சம்பத், பாண்டியனிடம் சென்று தனது மகன் ஞானவேல் பி.இ. படித்து முடித்துள்ளதாகவும் அவருக்கு அரசு வேலை வாங்கித் தரும்படியும் கூறியுள்ளார். அப்படியானால் அரசு வேலை வாங்கித் தருவதற்கு பணம் செலவாகும் என்று பாண்டியன் கூறியுள்ளார். அதற்கு சம்பத், பாண்டியனின் வங்கிக் கணக்கிற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தையும் மற்றும் நேரடியாக ரூ.2 லட்சத்தையும் ஆக மொத்தம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்ற பாண்டியன், ஞானவேலுக்கு அரசு வேலை ஏதும் வாங்கித்தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால் சம்பத், பாண்டியனிடம் சென்று தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தரும்படியும், இல்லையெனில் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தரும்படியும் கேட்டுள்ளார். பலமுறை பணத்தை திருப்பித் தரும்படி கேட்டும் பணத்தை கொடுக்காமலும், ஞானவேலுக்கு அரசு வேலை வாங்கித்தராமலும் ஏமாற்றி மோசடி செய்து விட்டார்.

ஆயுதப்படை காவலர் கைது

இதுகுறித்து சம்பத், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பாண்டியன் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை பாண்டியனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வேலியே பயிரை மேய்ந்தாற்போல் பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய போலீஸ்காரரே, பணம் மோசடி செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி யாரேனும் பணம் கேட்டால் தர வேண்டாம், அவ்வாறு பணம் தந்து அரசு வேலை வாங்க வேண்டும் என்று நினைத்தால், இது போன்ற நிலை தான் ஏற்படும் எனவும் அரசு வேலை என்பது படித்து அரசு நடத்தும் தேர்வு மூலமாக தேர்ச்சி பெற்று வந்தால் மட்டுமே அரசு வேலையில் சேர முடியும். இது போன்ற குறுக்கு வழியில் அரசு வேலைக்கு வர நினைப்பது முற்றிலும் தவறானது அது நடக்காத ஒன்று எனவும் தெரிவித்தார். பணம் கொடுத்துவிட்டு பின்னர் பணம் கிடைக்கவில்லை என பலர் புகார் அளிப்பதை பார்த்து வருகிறோம். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ”அராஜகப் போக்கு! மனசாட்சி இருக்கா” தூய்மை பணியாளர்கள் கைது... சாட்டையை சுழற்றிய விஜய்
TVK Vijay: ”அராஜகப் போக்கு! மனசாட்சி இருக்கா” தூய்மை பணியாளர்கள் கைது... சாட்டையை சுழற்றிய விஜய்
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
மீண்டும் கூட்டணியில் OPS?  நிராகரித்த பி.எல். சந்தோஷ்!  தூது போன அண்ணாமலை!
மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Top 10 News Headlines: தூய்மைப் பணியாளர்கள் கைது, விமான கட்டண உயர்வு- ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை-11 மணி செய்திகள்
Top 10 News Headlines: தூய்மைப் பணியாளர்கள் கைது, விமான கட்டண உயர்வு- ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை-11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ”அராஜகப் போக்கு! மனசாட்சி இருக்கா” தூய்மை பணியாளர்கள் கைது... சாட்டையை சுழற்றிய விஜய்
TVK Vijay: ”அராஜகப் போக்கு! மனசாட்சி இருக்கா” தூய்மை பணியாளர்கள் கைது... சாட்டையை சுழற்றிய விஜய்
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
மீண்டும் கூட்டணியில் OPS?  நிராகரித்த பி.எல். சந்தோஷ்!  தூது போன அண்ணாமலை!
மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Top 10 News Headlines: தூய்மைப் பணியாளர்கள் கைது, விமான கட்டண உயர்வு- ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை-11 மணி செய்திகள்
Top 10 News Headlines: தூய்மைப் பணியாளர்கள் கைது, விமான கட்டண உயர்வு- ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை-11 மணி செய்திகள்
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025 Wishes: ஜெய் ஹிந்த்.. ஜெய்ஹிந்த்! சுதந்திர தினத்தை போற்றும் இந்த வாழ்த்துகளை ஷேர் பண்ணுங்க..!
Independence Day 2025 Wishes: ஜெய் ஹிந்த்.. ஜெய்ஹிந்த்! சுதந்திர தினத்தை போற்றும் இந்த வாழ்த்துகளை ஷேர் பண்ணுங்க..!
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Embed widget