மேலும் அறிய

திருவண்ணாமலையில் ஜெயம் ரவி தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சி

திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கைப் பயண புகைப்படக் கண்காட்சியை நடிகர் ஜெயம் ரவி ரிப்பன் வெட்டி துவங்கி வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது பொது வாழ்வு அவருடைய வாழ்க்கை வரலாறு பயண புகைப்பட கண்காட்சி சென்னையில் சென்ற மாதம் முதல் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் திறப்பு விழாவாக நடத்தப்பட்டு பல பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரது பார்வைக்கும் வைக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில் திருவண்ணாமலை காந்தி நகர் நெடுஞ்சாலையில் மைதானத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அரங்கத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.இந்த புகைப்பட கண்காட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்க்கையில் அவர் சந்தித்த சவால்கள், மொழி, இனம், மக்கள் நலன் காக்க அவர் மேற்கொண்ட போராட்டங்கள், சிறை வாழ்க்கை துயரங்கள் ஆகியவற்றை இளம் தலை முறையினர் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் 200-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சி படுத்தப்பட்டு இருந்தது. 


திருவண்ணாமலையில் ஜெயம் ரவி  தொடங்கி வைத்த முதலமைச்சர்  ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சி

 

மேலும், இயல்பான காட்சி வடிவங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த புகைப்பட க்கண்காட்சி வருகிற 17-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் நடைபெற உள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ., தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எ.வ.வே.கம்பன், இரா.ஸ்ரீதரன், பா.கார்த்திவேல்மாறன், பிாியா விஜயரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ஜெயம் ரவி கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். திருவண்ணாமலைக்கு நான் பலமுறை வந்துள்ளேன். இந்த புகைப்பட கண்காட்சி சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது.

 


திருவண்ணாமலையில் ஜெயம் ரவி  தொடங்கி வைத்த முதலமைச்சர்  ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சி

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜெயம் ரவி, இது போன்ற புகைப்பட கண்காட்சியை சிறப்பாக கொண்டு வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இது போன்ற புகைப்பட கண்காட்சியை எங்கும் பார்த்ததில்லை என்றும், சினிமாவில் இருப்பது போன்று இங்கு பெரிய சகாப்தத்தை கண் முன் நிறுத்தியதாக ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழக முதலமைச்சரின் சாதனைகளையும், உழைப்பையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதாக உணர்வதாகவும், தமிழக முதலமைச்சர் எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் அனைவருடனும் எப்படி பழகுகிறாரோ, அதேபோன்று இந்த புகைப்பட கண்காட்சி அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த புகைப்பட கண்காட்சியில் தான் கலந்து கொண்டது மிகவும் பெருமையாக உள்ளதாகவும், இந்த தூய்மையான மண் திருவண்ணாமலை மண். அந்த மண்ணில் தான் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது என்றும் கூறினார்.


திருவண்ணாமலையில் ஜெயம் ரவி  தொடங்கி வைத்த முதலமைச்சர்  ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சி

அதனைத் தொடர்ந்து தமிழ், தமிழ்நாடு, திராவிடம் என்ற கொள்கையை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, இது அனைத்தும் ஒற்றுமை, நாமே நமக்குள் உள்ள ஒற்றுமையை நாம் வெளிக்காட்டுகிறோம் என்றார். பின் முதல்வரின் சிறப்பு பற்றி கேள்வி எழுப்பியதற்கு தமிழக முதலமைச்சருடைய சிறப்பு அனைவரும் அறிந்ததே என்றும், மக்கள் போற்றுகின்ற அளவிற்கு அவர் தற்போது மாற்றத்தை செய்துள்ளார், இன்னும் பல மாற்றங்களை செய்வார் என்று நானும் பொதுமக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என பேசினார். இதனைத் தொடர்ந்து, சிறுபான்மை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழ்நாடு முதல் அமைச்சரின் புகைப்பட கண்காட்சியை கண்டு ரசித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget