மேலும் அறிய

யார் இந்த தாமோதரன் - மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவிக்க காரணம் என்ன?

’’35 ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் உள்ள தனது கல்லூரியின் NSS பிரிவில் உறுப்பினராக இருந்தபோது, ​​மக்களுக்கு தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லாதது பெரிய கவலையை ஏற்படுத்தியது’’

தமிழ் நாட்டில் கழிப்பிட வசதி குறித்த விழிப்புணர்வு பல வருடங்களுக்கு முன்னதாகவே தோன்றியிருந்தாலும், இன்னும் நிறைய கிராம பகுதிகளில் அந்த வசதி இல்லாமல் மக்கள் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர். பலர் அந்த வசதியை சரிவர பின்பற்றுகிறார்களா என்றால் அது சந்தேகம் தான். இன்னும் கூட, பல கிராமங்களில் மக்கள் கழிப்பறையைப் பயன்படுத்துவதை விட, வயல்வெளிகள், புதர்கள், காடுகள், நீர்நிலைகள் அல்லது வேறு ஏதேனும் திறந்தவெளிகளில் தங்கள் கழிவுகளை விடுவித்து வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது என்றும் நிபுணர்கள் பலர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மக்களிடையே கழிப்பிட வசதிகளை பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு அவர்களுக்காக லட்ச கணக்கில் கழிவறைகளை கட்டிக்கொடுத்த சிறந்த மனிதர் சாயி தாமோதரன் ஆவார். இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள தனது கல்லூரியின் தேசிய சேவைத் திட்டத்தின் (NSS) பிரிவில் உறுப்பினராக இருந்தபோது, ​​மக்களுக்கு துப்புரவு வசதிகள் மற்றும் சுகாதாரம் மற்றும் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லாதது பெரிய கவலையை ஏற்படுத்தியது. ஆகையால்  அருகில் உள்ள கிராம பகுதிகளை பார்வையிட்ட அவர், திறந்த வெளியில் மலம் கழிப்பதைக் கண்டு வருத்தமடைந்ததோடு, இந்த பிரச்சனைக்கு ஒரு நடவடிக்கையை எடுக்க முடிவு செய்தார்.


யார் இந்த தாமோதரன் - மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவிக்க காரணம் என்ன?

இதையடுத்து, கடந்த 1987 ஆம் ஆண்டு கிராமாலயா என்ற அரசு சாரா நிறுவனத்தை (NGO) தாமோதரன் நிறுவினார். அன்றில் இருந்து இன்று வரை, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்களில் உள்ள 1,000 கிராமங்கள் மற்றும் பல நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு WASH (Water, Sanitation and Hygiene) தொடர்பான அணுகலை வழங்குவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். தாமோதரன் மற்றும் அவரது தன்னார்வ தொண்டர்கள் கடந்த முப்பதாண்டுகளில் சுமார் 6 லட்சம் தனிநபர் இல்லக் கழிப்பறைகளையும் 500 பள்ளிக் கழிப்பறைகளையும் கட்டிக்கொடுத்து உள்ளனர்.

கிராமாலயா மூலம் கட்டப்பட்ட சுகாதார வசதிகள் தென் மாநிலங்களில் உள்ள 30 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் தூய்மைப் பழக்கத்தை மாற்றியுள்ளதாக பெருமையுடன் தெரிவித்தார். திருச்சி நகர முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட கல்மந்தை, கடந்த 2002 இல் இந்தியாவின் முதல் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) சேரியாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, 2003ம் ஆண்டில் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 62 வீடுகளைக் கொண்ட தாண்டவம்பட்டி என்ற கிராமம், இந்தியாவின் முதல் ODF குடிசை கிராமமாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு மைக்கல்லும் தாமோதரனின் தொண்டு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக இருந்தது.


யார் இந்த தாமோதரன் - மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவிக்க காரணம் என்ன?

தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடிசை பகுதிகளையும், 300க்கும் மேற்பட்ட கிராமங்களையும் பல ஆண்டுகளாக திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத பகுதியாக மாற்ற கிராமாலயா தொண்டு நிறுவனம் உதவியுள்ளது. இதையடுத்து, கடந்த 2013ஆம் ஆண்டு தென்னிந்திய மாநிலங்களில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தண்ணீர் மற்றும் சுகாதாரம் குறித்த பயிற்சி அளிப்பதற்கான தேசிய முக்கிய ஆதார மையங்களில் ஒன்றாக கிராமாலயாவை குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. அதேபோல, எஸ் தாமோதரன்  குறைந்த விலை கழிப்பறை மாதிரிகள் மற்றும் கழிப்பறை தொழில்நுட்பம் மற்றும் பயிற்சிக்கான மையத்தையும் உருவாக்கியுள்ளார். இதனால் கிராமப்புற ஏழைகள், நகர்ப்புற ஏழைகள், கடலோரப் பகுதிகள், பழங்குடியினர் மற்றும் நகரப் பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுக் கழிப்பறை வசதிகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே தாமோதரன் தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்.

இவர் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சர்வதேச நன்கொடையாளர் அமைப்புகளுடன் மிக நெருக்கமாக பணியாற்றியுள்ளார். 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட CRSP, 1990 களில் TSC, 2000 களில் NBA மற்றும் 2014 இல் தொடங்கப்பட்ட ஸ்வச் பாரத் மிஷன் திட்டம் போன்ற சுகாதாரத் திட்டங்களிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடத்த 2017ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி அன்று, தாமோதரனுக்கு ‘டாய்லெட் டைட்டன் விருதினை’ துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு வழங்கி கௌரவித்தார். மேலும் இவரின் சேவையை பாரட்டும் விதமாக மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினை அறிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரை புறக்கணித்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரை புறக்கணித்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
Toyota Taisor: டெய்சருக்கு அப்க்ரேட் கொடுத்த டொயோட்டா.. 2 மேஜர் அப்டேட்கள், என்னென்ன தெரியுமா?
Toyota Taisor: டெய்சருக்கு அப்க்ரேட் கொடுத்த டொயோட்டா.. 2 மேஜர் அப்டேட்கள், என்னென்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்
Poompuhar Vanniyar Womens Conference | ராமதாஸ் பின்னணியில் திமுக? பூம்புகாரில் பலப்பரீட்சை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரை புறக்கணித்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரை புறக்கணித்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
Toyota Taisor: டெய்சருக்கு அப்க்ரேட் கொடுத்த டொயோட்டா.. 2 மேஜர் அப்டேட்கள், என்னென்ன தெரியுமா?
Toyota Taisor: டெய்சருக்கு அப்க்ரேட் கொடுத்த டொயோட்டா.. 2 மேஜர் அப்டேட்கள், என்னென்ன தெரியுமா?
திமுக-வில் இணைந்தார் மைத்ரேயன்.. அதிமுக-வுக்கு குட்பை.. காலியாகும் முன்னாள் எம்பிக்கள்!
திமுக-வில் இணைந்தார் மைத்ரேயன்.. அதிமுக-வுக்கு குட்பை.. காலியாகும் முன்னாள் எம்பிக்கள்!
’’இது எங்க அறிக்கையே இல்ல’’ என்னதான் நடந்தது மாநில கல்விக் கொள்கையில்? குமுறும் கல்வியாளர்கள்!
’’இது எங்க அறிக்கையே இல்ல’’ என்னதான் நடந்தது மாநில கல்விக் கொள்கையில்? குமுறும் கல்வியாளர்கள்!
ஓணம் தள்ளுபடி.. 6 லட்சத்துக்கும் கம்மியான விலை.. 5 சீட்டில் அருமையான டாடா ஆல்ட்ரோஸ்!
ஓணம் தள்ளுபடி.. 6 லட்சத்துக்கும் கம்மியான விலை.. 5 சீட்டில் அருமையான டாடா ஆல்ட்ரோஸ்!
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: மேயர் கணவர் கைது செய்யப்பட்டநிலையில்.. மருத்துவமனையில் அனுமதி !
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: மேயர் கணவர் கைது செய்யப்பட்டநிலையில்.. மருத்துவமனையில் அனுமதி !
Embed widget