மேலும் அறிய

பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16¼ பவுன் நகை, ரூ.1½ லட்சம் கொள்ளை

பெரம்பலூர் மாவட்டத்தில் என்ஜினீயர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 16¼ பவுன் நகை-ரூ.1½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம்,  கவுல்பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48). தச்சு தொழிலாளி. இவருக்கு கனகவள்ளி (42) என்ற மனைவியும், பிரவீன்குமார் (28), பிரேம்குமார் (27) என 2 மகன்களும் உள்ளனர். பிரவீன்குமார், பிரேம்குமார் ஆகியோர் என்ஜினீயர்கள் ஆவார்கள். இதில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரவீன்குமார், அங்கு தனது மனைவியுடன் வசித்து வருகிறார். பிரேம்குமாரும் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ரவிச்சந்திரன், கனகவள்ளியுடன் புதுக்கோட்டையில் உள்ள தனது உறவினரான டாக்டர் சுப்ரமணியத்தின் மகன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார். அப்போது அருகில் வசிக்கும் அவரது உறவினரான ராஜசேகர்-சாந்தியிடம் மாலையில் வீட்டில் மின் விளக்கை எரியவிடுமாறு ரவிச்சந்திரன் கூறியுள்ளார். இதன்படி நேற்று முன்தினம் மாலை ராஜசேகரின் மருமகள் மெஹராஜ்பீவி (34), ரவிச்சந்திரனின் வீட்டிற்கு சென்று மின்விளக்குகளை எரியவிட்டு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து இரவு 7.45 மணியளவில் ரவிச்சந்திரனின் வீட்டில் மின் விளக்குகள் அணைந்தன. மேலும் அவரது வீட்டில் சத்தம் கேட்டதால், ராஜசேகரும், மெஹராஜ்பீவியும், அவரது வீட்டிற்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் உள்ளே சுமார் 20 வயது மதிக்கத்தக்க 2 மர்ம நபர்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்களை வீட்டின் உள்ளே வைத்து கதவை பூட்ட ராஜசேகர் முயற்சி செய்துள்ளார்.


பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16¼ பவுன் நகை, ரூ.1½ லட்சம் கொள்ளை

இந்நிலையில் சுதாரித்துக்கொண்ட அந்த நபர்கள், கதவை வலுக்கட்டாயமாக திறந்து கொண்டு வெளியே வந்தனர். அவர்களை பிடிக்க முயன்ற ராஜசேகரை கம்பியால் முதுகில் தாக்கிவிட்டு, கத்தியை காட்டி கொன்று விடுவதாக மிரட்டிவிட்டு தப்பித்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து, அந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அந்த வீட்டில் ரவிச்சந்திரன் பீரோவில் வைத்திருந்த தங்கச்சங்கிலிகள், கைச்சங்கிலி, மோதிரங்கள் உள்ளிட்ட 16¼ பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget