மேலும் அறிய

98% கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி அரியலூர் மாவட்டம் சாதனை...!

’’கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரியலூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. இதுவரை மாவட்டட்தில் உள்ள 7,190 கர்ப்பிணி பெண்களில் 7,023 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது’’

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளில் கடந்த 16ஆம் தேதி வரை 2 கோடியே 49 லட்சத்து 88 ஆயிரத்து 350 தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 2 கோடியே 49 லட்சத்து 33 ஆயிரத்து 196 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 8.76 லட்சம் சுகாதார பணியாளர்கள், 11.59 லட்சம் முன்கள பணியாளர்கள், 18 முதல் 44 வயது வரை உள்ள 1.06 கோடி பேர், 45 முதல் 60 வயது வரை உள்ள 80.68 லட்சம் பேர், 60 வயதுக்கு மேற்பட்ட 42.12 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதன்படி வழங்கப்பட்ட தடுப்பூசியில் 100 சதவீத தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது.

மத்திய மாவட்டங்களில் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 

இதில் திருச்சி மாவட்டத்தில் 9,32,769 பேருக்கும், புதுக்கோட்டைத்தில் 2,92,428 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் 3,49,522 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 2,25,982 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 2,01,096 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 7,20,788 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 3,84,604 பேருக்கும், நாகை மாவட்டத்தில் 2,28,003 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,34,241 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொடுப்பட்ட  தடுப்பூசிகளை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் திருச்சி 4வது இடத்தில் உள்ளது.


98% கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி அரியலூர் மாவட்டம் சாதனை...!

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரியலூர் மாவட்டம் சாதனை 

இதைத்தவிர்த்து கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் அரியலூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 7,190 கர்ப்பிணி பெண்களில் 7,023 கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி 98 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தி அரியலூர் சாதனை படைத்துள்ளது. மேலும் முதல் 10 இடங்களில் மத்திய மண்டலத்தில் உள்ள 5 சுகாதார மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 6993 கர்ப்பிணி பெண்களில் 4628 பேருக்கும், அறந்தாங்கியில் 7682 பேரில் 4792 பேருக்கும், புதுக்கோட்டையில் 10,156 பேரில் 5551 பேருக்கும், நாகையில் 6233 பேரில் 3176 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் திருச்சி 5 வது இடத்தில் உள்ளது.


98% கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி அரியலூர் மாவட்டம் சாதனை...!

பாலுட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் பின்னடைவு

இதைத்தவிர்த்து பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் மத்திய மண்டத்தில் உள்ள மாவட்டங்கள் மிகவும் பின்தங்கி உள்ளது. இதன்படி கரூரில் 5798, தஞ்சாவூரில் 5448, புதுக்கோட்டையில் 3268, திருவாரூரில் 2873, பெரம்பலூரில் 2798, அரியலூரில் 2416, மயிலாடுதுறையில் 2009, நாகையில் 1756, திருச்சியில் 1721 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால் மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து  வருகிறார்கள். மேலும் இனி வரும் காலங்களில் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், முக கவசம், சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும், மேலும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா 3 அலையில் இருந்து நம்மை நாம் பாதுக்காத்து கொள்ள முடியும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Kashmir: காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; பஹல்காம் தாக்குதலில் தொடர்பா என விசாரணை
Kashmir: காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; பஹல்காம் தாக்குதலில் தொடர்பா என விசாரணை
Jobs: வேலைவாய்ப்பு; அதிர்ச்சி அளித்த TCS; மகிழ்ச்சி அளித்த Apple - என்ன விஷயம்னு தெரியுமா.?
வேலைவாய்ப்பு; அதிர்ச்சி அளித்த TCS; மகிழ்ச்சி அளித்த Apple - என்ன விஷயம்னு தெரியுமா.?
EPS-PM Modi : ’பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
’பிரதமருடன் EPS சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
Seeman Vijay: ”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு
Seeman Vijay: ”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP
Madhampatty Rangaraj |  2வது மனைவியுடனும் சண்டை? PHOTOS-ஐ லீக் செய்த ஜாய் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்
பொண்டாட்டி இருக்கும்போதே மாதம்பட்டி 2 வது திருமணம் கல்யாணத்துக்கு முன்பே கர்பம்.. | Joy Crizildaa | Shruti Rangaraj
ஹன்சிகாவுக்கு விவாகரத்து?உண்மையை உடைத்த கணவர் இதுதான் காரணம்? | Sohael Khaturiya | Hansika Motwani Marriage | Tamil Cinema

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kashmir: காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; பஹல்காம் தாக்குதலில் தொடர்பா என விசாரணை
Kashmir: காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; பஹல்காம் தாக்குதலில் தொடர்பா என விசாரணை
Jobs: வேலைவாய்ப்பு; அதிர்ச்சி அளித்த TCS; மகிழ்ச்சி அளித்த Apple - என்ன விஷயம்னு தெரியுமா.?
வேலைவாய்ப்பு; அதிர்ச்சி அளித்த TCS; மகிழ்ச்சி அளித்த Apple - என்ன விஷயம்னு தெரியுமா.?
EPS-PM Modi : ’பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
’பிரதமருடன் EPS சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
Seeman Vijay: ”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு
Seeman Vijay: ”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு
America on Aug.,1 Tariffs: போச்சு.!! 1-ம் தேதில இருந்து எல்லாரும் கப்பம் கட்டித்தான் ஆகணும்; உறுதி செய்த அமெரிக்கா - ஆனா...
போச்சு.!! 1-ம் தேதில இருந்து எல்லாரும் கப்பம் கட்டித்தான் ஆகணும்; உறுதி செய்த அமெரிக்கா - ஆனா...
Safest Cars: சேஃப்டிக்காக நிரம்பி வழியும் கேஜட்ஸ்..! நம்மூரில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்கள் - நாலா பக்கமும் பாதுகாப்பு
Safest Cars: சேஃப்டிக்காக நிரம்பி வழியும் கேஜட்ஸ்..! நம்மூரில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்கள் - நாலா பக்கமும் பாதுகாப்பு
Parliament Op Sindoor: இன்னைக்கு இருக்கு.. எதிர்க்கட்சிகளின் மும்முனை தாக்குதல்? சமாளிக்குமா பாஜக? திருப்பி விடுமா?
Parliament Op Sindoor: இன்னைக்கு இருக்கு.. எதிர்க்கட்சிகளின் மும்முனை தாக்குதல்? சமாளிக்குமா பாஜக? திருப்பி விடுமா?
Top 10 News Headlines: வீடுகளை சூழ்ந்த காவிரி வெள்ளம், ஆபரேஷன் சிந்தூர்-இன்று விவாதம், புதிய சாதனை படைத்த சுப்மன் கில் - 11 மணி செய்திகள்
வீடுகளை சூழ்ந்த காவிரி வெள்ளம், ஆபரேஷன் சிந்தூர்-இன்று விவாதம், புதிய சாதனை படைத்த சுப்மன் கில் - 11 மணி செய்திகள்
Embed widget