மேலும் அறிய

’78 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்த போலீஸ்’ எங்கே ? ஏன் தெரியுமா..?

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 47 பேரும் நடப்பாண்டில் 31 பேர் என 78 பேரை தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்து எஸ்.பி அதிரடி காட்டி வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் மூவரை, பொதுமக்களுக்கும், சமூக அமைதிக்கும் அச்சுறுத்தலாக விளங்கியதால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பட்டபகலில் நடைபெற்ற கொலை சம்பவம்

கடந்த 24.06.2025 அன்று மதியம் 2.20 மணியளவில், நீடூர், மாதா கோயில் தெருவைச் சேர்ந்த 34 வயதான முகமது ஹாலீக் என்பவர் தனது இரு நண்பர்களுடன் நீடூர் JMH நிக்காஹ் மஹால் எதிரில் உள்ள மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களில் ஒருவர், தான் கொண்டு வந்த அரிவாளால் முகமது ஹாலீக்கை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த முகமது ஹாலீக் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காவல்துறையினர் விசாரணை 

இந்நிலையில் இதுதொடர்பாக முகமது ஹாலீக்கின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, மயிலாடுதுறை காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார், வழக்கின் புலன் விசாரணையை மேற்கொண்டார். இந்த சூழலில், படுகாயமடைந்த முகமது ஹாலீக் 25.06.2025 அன்று அதிகாலை மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

குற்றவாளிகள் கைது 

வழக்கின் விசாரணையில், இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் இதில் தொடர்புடைய நபர்களாக 

 

  • சரண்ராஜ் (28), த/பெ. செல்வம், தோப்பு தெரு, மேமாத்தூர், செம்பனார்கோயில்

 

  • குண்டு விஜய் (எ) விஜய் (28), த/பெ. ரமேஷ், ஆறுபாதி, செம்பனார்கோயில்

 

  • விஜயகாந்த் (எ) வடிவேலன், த/பெ. வரதராஜன், நாகப்பன் நகர், தில்லையாடி

 

  • விக்னேஷ் (25), த/பெ. விஜேந்திரன், தோப்பு தெரு, நீடூர்

 

ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தடுப்பு காவல் சட்டம் 

கைது செய்யப்பட்ட நபர்களான சரண்ராஜ், விஜய், மற்றும் விக்னேஷ் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களின் தொடர் குற்றச் செயல்களைக் கருத்தில் கொண்டு, இவர்களை தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் சரண்ராஜ், விஜய், மற்றும் விக்னேஷ் ஆகிய மூவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவை அடுத்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல் ஆளிநர்கள் மேற்கண்ட மூவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறையில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில், பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கும் பங்கம் விளைவித்த 17 நபர்கள், திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 03 நபர்கள், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 08 நபர்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 01 நபர் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 02 நபர்கள் என மொத்தம் 31 நபர்கள் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 47 நபர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை, குற்றவாளிகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளதுடன், மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் காவல்துறையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget