மேலும் அறிய

கர்ப்பிணிக்காக நடத்தப்பட்ட விசேஷம்.. விருந்துக்குப்பின் ஏற்பட்ட வாந்தி, மயக்கம்.. உயிரிழந்த உறவினர்.. தீவிர விசாரணை..

திருவாரூரில் நிகழ்ச்சி ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று அதிகாலை உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் 29 வயதான விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள். அவருக்கு வயது 26. இவர் ஐந்து மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் இவருக்கு ஐந்துக்கு மருந்து கொடுக்கும் நிகழ்வு விக்னேஷ் இல்லத்தில் நேற்று மதியம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில், விக்னேஷ் மற்றும் மாரியம்மாளின் உறவினர்கள் நண்பர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின்பு அவர்களுக்கு தயிர்சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், கருவேப்பிலை சாதம் ஆகியவற்றுடன் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது. 


கர்ப்பிணிக்காக நடத்தப்பட்ட விசேஷம்.. விருந்துக்குப்பின் ஏற்பட்ட வாந்தி, மயக்கம்.. உயிரிழந்த உறவினர்.. தீவிர விசாரணை..

இதனையடுத்து உணவருந்திய சிறிது நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அதில் 12 பேர் உடல்நலம் குணமானதைத் தொடர்ந்து  வீட்டிற்கு திரும்பி விட்டனர். இந்த நிலையில் மீதமுள்ள வேளுக்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் (வயது 24) சந்துரு (வயது 10) இளரா (வயது 62) செல்வகணபதி (வயது 25) பாலாஜி (வயது 22) யஷ்வந்த் (வயது 4) ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

இதில் கர்ப்பிணி பெண்ணான மாரியம்மாள் திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கர்ப்பிணி பெண்ணின் தந்தையான அடியக்கமங்கலத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 60) என்பவர் அடியக்கமங்கலம் தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். 


கர்ப்பிணிக்காக நடத்தப்பட்ட விசேஷம்.. விருந்துக்குப்பின் ஏற்பட்ட வாந்தி, மயக்கம்.. உயிரிழந்த உறவினர்.. தீவிர விசாரணை..

இந்தநிலையில் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளுக்குடியை சேர்ந்த செல்வமுருகன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவர் திருவாரூர் மாவட்ட பி. எஸ். என். எல் அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிகழ்வில் பரிமாறப்பட்ட ஐந்து வகை சாதங்கள் கர்ப்பிணி பெண்ணான மாரியம்மாள் தாய் வீட்டிலிருந்து தயார் செய்து எடுத்து வரப்பட்டது. மேலும் விக்னேஷ் வீட்டின் தரப்பில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணி புலிவலத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்திலும், திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட வாழ வாய்க்காலில் உள்ள ஒரு உணவகத்திலும் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget