மேலும் அறிய

”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

காங்கிரஸை ஓரங்கட்டி வந்த மம்தா பானர்ஜி, தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பையும் புறக்கணித்து தொகுதி மறுவரையறை கூட்டத்திற்கு வராமல் நழுவியுள்ளது இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 3 முக்கிய கட்சிகளும் வராததன் பின்னணியில் சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. 

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எம்.பி தொகுதிகள் குறையும் என்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றிய தென் மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் இந்த விவகாரத்தில் மற்ற மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். 

சென்னையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு 29 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 24 கட்சிகள் கலந்து கொண்டனர். முதலமைச்சரின் அழைப்பை ஏற்று கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஒரே இடத்தில் குவிந்தனர்.

ஆனால் ஆந்திராவில் இருந்து ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சி சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த கூட்டத்தை முழுமையாக புறக்கணித்துள்ளார். ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் சார்பில் அக்கட்சியின் எம்.பி உதய் ஸ்ரீனிவாஸ் சென்னை வந்து பவன் கல்யாண் கொடுத்த கடிதத்தை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சேர்த்துள்ளார். ஆனால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளார். இந்த 2 கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் தொகுதி மறுவரையறை கூட்டத்திற்கு வரவில்லை.

அதேபோல் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி கூட்டத்தை புறக்கணித்துள்ளார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஒத்த கருத்துடன் இருந்தாலும் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது விவாதமாக மாறியுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி ஆரம்பம் முதலே பாஜக மீது வலுவான விமர்சனங்களை வைப்பதில்லை என்ற பேச்சு இருக்கிறது. அதனால் அவர் கூட்டத்தை புறக்கணித்திருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றனர்.

இதில் மிக முக்கியமாக இந்தியா கூட்டணியில் இருக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளார். ஏற்கனவே மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் முற்றி வருகிறது. கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸுக்கு எதிரான அரசியலை தீவிரமாக எடுத்து களமாடி வருகிறார் மம்தா பானர்ஜி. இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பையும் புறக்கணித்து கூட்டத்திற்கு வராமல் நழுவியுள்ளார் மம்தா பானர்ஜி. கூட்டணியில் இருந்து கொண்டும் அவர் வராதது இந்தியா கூட்டணிக்குள் புகைச்சலை கிளப்பியுள்ளது. இதுமட்டுமல்லாமல் தொகுதி மறுவரையறையால் மேற்கு வங்கத்திற்கு பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காததால் அவர் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளதாகவும் சொல்கின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயத்தால் பாஜக காலடியில் எடப்பாடி! – மதுரவாயலில் கனிமொழி எம்.பி. அனல் பறக்கும் பேச்சு!
பயத்தால் பாஜக காலடியில் எடப்பாடி! – மதுரவாயலில் கனிமொழி எம்.பி. அனல் பறக்கும் பேச்சு!
மனுத்தாக்கல் செய்யச் சென்ற இடத்தில் எம்பி-க்கு நேர்ந்த சங்கடம்: மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?
மனுத்தாக்கல் செய்யச் சென்ற இடத்தில் எம்பி-க்கு நேர்ந்த சங்கடம்: மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
TN Election 2026 ; மன்னிப்பு கேட்ட பாமக வேட்பாளர் திலகபாமா !! ஏன் தெரியுமா ?
TN Election 2026 ; மன்னிப்பு கேட்ட பாமக வேட்பாளர் திலகபாமா !! ஏன் தெரியுமா ?
ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
Embed widget