மேலும் அறிய

Book Fair: தஞ்சையில் இன்று தொடங்கிய புத்தகத் திருவிழா; வரும் 24ம் தேதி வரை நடக்கிறது

தஞ்சையில் புத்தகத்திருவிழா காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சையில் புத்தகத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வரும் 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களை பஸ் மற்றும் ஆட்டோக்களில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஒட்டினார். இந்த புத்தகத் திருவிழாவில் உணவுகளின் அணிவகுப்பும் நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத்திருவிழா 6-வது ஆண்டாக தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வரும் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. விழாவிற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார்.

புத்தக திருவிழாவை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த புத்தக திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு முன்னணி பதிப்பகத்தின் நூல்கள் இடம் பெறுகின்றன.


Book Fair: தஞ்சையில் இன்று தொடங்கிய புத்தகத் திருவிழா; வரும் 24ம் தேதி வரை நடக்கிறது

புத்தகத்திருவிழா காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. திருவிழாவில் காலை 10.30 மணிக்கு இலக்கிய அரங்கமும், 11 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான போட்டிகளும் நடைபெறுகின்றன. மாலை 4.30 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், 5 மணிக்கு கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

மாலை 6.30 மணிக்கு நகைச்சுவை சிந்தனை அரங்கம் நடைபெறுகின்றன. இதில் பட்டிமன்ற நடுவர்கள், பேச்சாளர்களான மோகனசுந்தரம், மதுக்கூர் ராமலிங்கம், பாரதி பாஸ்கர், சிவகுமார், ராஜாராம், சேஷாத்திரி, ராஜா, ராஜ்மோகன், ராமகிருஷ்ணன், ஈரோடு மகேஷ், ராமச்சந்திரன், சாந்தாமணி, சண்மகவடிவேலு, கவிதாஜவகர், ஞானசம்பந்தம், திரைப்பட நடிகை ரோகிணி, ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் இறையன்பு, சுந்தரஆவுடையப்பன், சுகி.சிவம், சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

மேலும் சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பகுதி உணவுகளின் அணிவகுப்பும் (உணவுத்திருவிழா) நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவையாட்டி விழிப்புணர்வு போஸ்டர் ஓட்டும் நிகழ்ச்சி மற்றும் துண்டு பிரசுரம் வினியோகம் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் தீபக் ஜேக்கப் கலந்து கொண்டு விழிப்புணர்வு போஸ்டரை பஸ் மற்றும் ஆட்டோக்களில் ஒட்டினர்.

பின்னர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள், கல்லூரி மாணவ, மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், கோட்டாட்சியர் பழனிவேல், தாசில்தார் சக்திவேல், வட்டார போக்குவத்து அலுவலர் முருகன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ரெட்கிராஸ் துணைத்தலைவர் முத்துக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
குடும்பத்துடன் முற்றுகையா? வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை பல்கலை. ஊழிர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! 
குடும்பத்துடன் முற்றுகையா? வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை பல்கலை. ஊழிர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! 
Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
Embed widget