மேலும் அறிய

மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!

அமைச்சர் மூர்த்தியின் ஆதரவு பெண் மண்டலத்தலைவர் மட்டும் முதலில் ராஜினாமா கடிதம் கொடுக்காத சூழலில், 7 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் ஐந்து மண்டல தலைவர்கள் மற்றும் 2 நிலைக்குழு தலைவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

வரி விதிப்பில் முறைகேடு

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100-வார்டு பகுதிகளில் 3-லட்சத்திற்கு மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான கட்டடங்கள் உள்ளன. இதற்கான வரி வசூல் பணிகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டடங்களுக்கும் அதன் பகுதிகளுக்கு ஏற்ப வரிவிதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டும். நீதிமன்றத்தின் மூலமாகவோ அல்லது மாநகராட்சி கூட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய தீர்மானத்தின் மூலமாக முடிவெடுக்கப்படும். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக மண்டலம் 2, 3, 4, 5 ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு வரிவிதிப்பு குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 150 கோடி முதல் 200 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த விடயம் முன்னாள் ஆணையாளர் தினேஷ்குமார் விசாரணையில் வெளியே தெரியவந்தது.

அழிக்கப்பட்ட ஆவணங்கள்

முறைகேடுகள் சில மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து முறைகேடுகளை செய்துள்ளதும் தெரியவந்தது. இதற்காக வரிவிதிப்புக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதும் தெரிவித்துள்ளது. முந்தைய ஆணையாளரால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. சைபர் கிரைம் காவல் துறையினர் வரி குறைப்பு தொடர்பான அழிக்கப்பட்ட ஆவணங்கள், குறித்து தீவிர விசாரணையை நடத்தியதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டது.

8 பேர் கைது

தொடர்ந்து தற்போதைய ஆணையர் உத்தரவின் ஒப்புதலுடன் விசாரணை வேகமெடுத்தது. இது தொடர்பாக பில் கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் என 8 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரி விதிப்பு குழு தலைவர் விஜெயலெட்சுமி மற்றும் ஐந்து மண்டல தலைவர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் முதல்வர் உத்தரவின் பெயரில் அமைச்சர் நேருவும் விசாரணை நடத்தினார். இதில் நிலைக்குழு தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்களிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில் மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

ராஜினாமா கடிதம் ஏற்பு

ஆனால் நேற்றுவரை முதல்வரின் உத்தரவு நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்த சூழலில் தங்களை பவரை பயன்படுத்த முயற்சித்த மண்டல தலைவர்கள் சில அமைச்சர்களிடம் முட்டியுள்ளனர். ஆனால் சம்மந்தப்பட்ட அமைச்சர்களோ, இது மேல் இடத்து உத்தரவு இதில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை என கைவிரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 5 மண்டல தலைவர்கள் மற்றும் விஜயலெட்சுமி, மூவேந்திரம் ஆகிய 2 மாநகராட்சி நிலைக்குழு தலைவர்களின், ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

7 பேர் பதவி காலி

அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளரும், மண்டலம் எண் 1 தலைவருமான வாசுகி சசிக்குமார் கடிதம் அளிக்கவில்லை. கட்சி தலைமை அறிவுறுத்தியதால் நேற்று அவரும் கடிதம் அளித்துள்ளார். இந்நிலையில் அனைத்து கடிதங்களையும் மேயர் இந்திராணி ஏற்றதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 7 பேரின் பதவி நேற்று முதல்காலியானது. அவர்களின் கவுன்சிலர் பதவி தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget