மேலும் அறிய

அபார்ட்மெண்ட்ல வீடு வாங்க போறீங்களா? நற்செய்தி - பத்திரப்பதிவில் டிச.1 முதல் புதிய நடைமுறை!

TN Govt Flats: அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்வதில் டிசம்பர் 1 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

TN Govt Flats: அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அமலுக்கு வருவதாக,  வணிக வரி  மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு அறிவிப்பு:

இதுதொடர்பான அறிக்கையில், தற்போது தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு வருகையில் இரண்டு ஆவணங்களாக பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது அடிநிலம் பொருத்து பிரிபடாத பாகத்திற்கு கிரையமாக ஓர் ஆவணமாகவும், கட்டடப் பகுதியைப் பொருத்து கட்டுமான உடன்படிக்கையாக ஓர் ஆவணமாகவும் என இரண்டு ஆவணங்களாக பதிவு செய்யப்படுகின்றன.

பழைய கட்டணம்:

அடுக்குமாடி குடியிருப்புகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்போது அடிநிலம் மற்றும் கட்டடம் சேர்ந்த பகுதிக்கு என ஒரே விலையே நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கட்டடங்களை விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யாமல் கட்டுமான உடன்படிக்கை ஆவணமாகப் பதிவு செய்யும் வழக்கமும் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பரிவர்த்தனை இரண்டு வெவ்வேறு ஆவணங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. விற்பனை ஆவணத்திற்கு 7% முத்திரைத் தீர்வை மற்றும் 2% பதிவுக் கட்டணமும் கட்டுமான உடன்படிக்கை ஆவணங்களைப் பொருத்து 1% முத்திரைத் தீர்வை மற்றும் 3% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டைத் தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொருத்து கட்டடம் மற்றும் அடிநிலம் சேர்ந்த ஒரு கூட்டுமதிப்பு நிர்ணயிக்கப்பட்டு இம்மதிப்பானது மொத்த கட்டட பரப்பைப் பொருத்து கணக்கிடப்பட்டு அதனடிப்படையில் விற்பனை ஆவணமாகவே பதிவு செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களில் நிலவும் இம்முறையை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம் என முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இது குறித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தலைமையில் 27.07.2023. 07.09.2023 12.09.2023 ஆகிய தேதிகளில் இப்பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இதில் பங்கேற்ற ரியல் எஸ்டேட் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டு மதிப்பு அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை ஆவணமாகப் பதிவு செய்ய தங்களின் இசைவினைத் தெரிவித்தனர். ஆனால் இவ்வகை ஆவணத்திற்கான முத்திரைத் தீர்வை குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக பதிவுத்துறை தலைவரால் அனுப்பப்பட்ட முன்மொழிவு அரசால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகளைப் பதியும்போது இனி பிரிபடாத பாக நிலத்திற்கு ஒரு தனி ஆவணம் கட்டடத்திற்கு ஒரு தனி ஆவணம் என இரு ஆவணங்களாகப் பதியப்படும் நிலையை மாற்றி கட்டடம் மற்றும் அடிநிலம் சேர்ந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்தவும் குறிப்பிட்ட மதிப்பு வரையிலான புதிய குடியிருப்புகள் பதிவிற்கான முத்திரைத் தீர்வையைக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

மதிப்பு ரூ.50 லட்சம் வரையுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை தற்போது உள்ள 7% லிருந்து 4% ஆக குறைக்கலாம் என்றும், ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை 7% லிருந்து 5% ஆக குறைக்கலாம் என்றும் அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரூ.50 லட்சம் வரையிலான மதிப்புடைய புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் விற்பனைக் கிரைய ஆவணம் பதியும்போது முத்திரைத் தீர்வை 4% மற்றும் பதிவுக் கட்டணம் 2% ஆக மொத்தம் 6% செலுத்தினால் போதுமானது. ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான மதிப்புடைய அடுக்குமாடி குடியிருப்புகளை வளங்குவோர் முத்திரைத் தீர்வை 5% மற்றும் பதிவுக் கட்டணம் 2% ஆக மொத்தம் 7% செலுத்தினால் போதுமானது.

புதிய கட்டணம்:

இந்த சலுகையானது பிரிபடாத பாக மனையுடன் பதியப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனைக்கு மட்டுமே இது பொருந்தும். மறு விற்பனைக்கு பொருந்தாது. இனிமேல் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் கட்டுமான ஒப்பந்த ஆவணமாக இல்லாமல் விற்பனை கிரைய ஆவணமாகப் பதிந்து தங்கள் குடியிருப்பை உடைமையாக்கிக் கொள்ளலாம்.

அடுக்குமாடி குடியிருப்புகளை அடிநிலம் சேர்ந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட முத்திரைத் தீர்வை சலுகையுடன் பதியும் இப்புதிய நடைமுறை எதிர்வரும் 01.12.2023 முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கெனவே கட்டுமான ஒப்பந்த ஆவணமாகப் பதியப்பட்டிருக்கும் குடியிருப்புகளை மறு விற்பனை செய்வது தற்போது பதிவுத்துறையால் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அனுமதியானது, 01.12.2023க்குப் பின்னர் பதியப்படும் கட்டுமான ஒப்பந்த ஆவணங்களைப் பொருத்து விலக்கிக் கொள்ளப்படும்.

கூட்டு மதிப்பின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை சலுகை வழங்கும் அரசின் இந்த நடவடிக்கையால் வங்கியில் கடன் பெற்று புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் நடுத்தர மக்கள் மிகவும் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது” என வணிகவரி மற்றும் பதிவுத்துற செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Apple's Shift: ஆஹா.. இது செம்ம மேட்டரா இருக்கே.. இந்தியாவுக்கு வரும் ஆப்பிள்.. இத படிங்க முதல்ல...
ஆஹா.. இது செம்ம மேட்டரா இருக்கே.. இந்தியாவுக்கு வரும் ஆப்பிள்.. இத படிங்க முதல்ல...
இப்போ இல்ல; 30 வருஷமாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
இப்போ இல்ல; 30 வருஷமாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
GK Mani : “சகுனி வேலை பார்த்த ஜி.கே.மணி?” கொதிப்பில் பா.ம.க இளைஞர்கள்..!
GK Mani : “சகுனி வேலை பார்த்த ஜி.கே.மணி?” கொதிப்பில் பா.ம.க இளைஞர்கள்..!
HC on MRKP's Case: அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல.. அடுத்ததாக சிக்கலில் MRK பன்னீர்செல்வம்...
அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல.. அடுத்ததாக சிக்கலில் MRK பன்னீர்செல்வம்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy  | PM ModiSengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!Sengottaiyan: ”EPS இல்லனா அதிமுக இல்ல” செங்கோட்டையன் 360 டிகிரி பல்டி! நள்ளிரவில் முடிந்த DEAL!Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Apple's Shift: ஆஹா.. இது செம்ம மேட்டரா இருக்கே.. இந்தியாவுக்கு வரும் ஆப்பிள்.. இத படிங்க முதல்ல...
ஆஹா.. இது செம்ம மேட்டரா இருக்கே.. இந்தியாவுக்கு வரும் ஆப்பிள்.. இத படிங்க முதல்ல...
இப்போ இல்ல; 30 வருஷமாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
இப்போ இல்ல; 30 வருஷமாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
GK Mani : “சகுனி வேலை பார்த்த ஜி.கே.மணி?” கொதிப்பில் பா.ம.க இளைஞர்கள்..!
GK Mani : “சகுனி வேலை பார்த்த ஜி.கே.மணி?” கொதிப்பில் பா.ம.க இளைஞர்கள்..!
HC on MRKP's Case: அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல.. அடுத்ததாக சிக்கலில் MRK பன்னீர்செல்வம்...
அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல.. அடுத்ததாக சிக்கலில் MRK பன்னீர்செல்வம்...
பள்ளி வாகனங்கள் ஆய்வில் அலட்சியம்; துணியால் கட்டப்பட்ட சைடு மிரர்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பள்ளி வாகனங்கள் ஆய்வில் அலட்சியம்; துணியால் கட்டப்பட்ட சைடு மிரர்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்
Magalir Urimai Thogai: விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை  - சூப்பர் அப்டேட் கொடுத்த முதலமைச்சர்
Magalir Urimai Thogai: விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை  - சூப்பர் அப்டேட் கொடுத்த முதலமைச்சர்
Governor RN Ravi: நடுராத்திரியில் கதவை தட்டிய போலீஸ்; அலறிய துணை வேந்தர்கள்- ஆளுநர் போட்ட குண்டு!
Governor RN Ravi: நடுராத்திரியில் கதவை தட்டிய போலீஸ்; அலறிய துணை வேந்தர்கள்- ஆளுநர் போட்ட குண்டு!
11th Exam Grace Mark: மாணவர்கள் காட்டில் மழை... பொதுத்தேர்வில் 2 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவு- எதற்கு?
11th Exam Grace Mark: மாணவர்கள் காட்டில் மழை... பொதுத்தேர்வில் 2 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவு- எதற்கு?
Embed widget