மேலும் அறிய

HC on MRKP's Case: அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல.. அடுத்ததாக சிக்கலில் MRK பன்னீர்செல்வம்...

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்ஆர்கே பன்னிர்செல்வத்திற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அது என்ன உத்தரவு என்று பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் தற்போது அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு, அமைச்சர்கள் வரிசைகட்டி சிக்கலில் சிக்கி வருகின்றனர். அந்த வரிசையில் அடுத்ததாக இணைந்துள்ளவர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

கடந்த 2006 - 2011-ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த MRK. பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. MRK. பன்னீர்செல்வம் அவரது மனைவி மற்றும் மகன் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை ஆகியவற்றை மேற்கோள் காட்டி லஞ்ச ஒழிப்புத்துறை வாதங்களை முன்வைத்தது.

MRK. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் இணைத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளார்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி என்றும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறையின் மறு ஆய்வு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

தொடர்ந்து, இன்று அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், அமைச்சர் MRK. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து, 6 மாதங்களில் விசாரணையை முடிக்கும்படி, கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், அமைச்சர் MRK. பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் அமைச்சர்கள்

அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை என்று கூறும் அளவிற்கு, அடுத்தடுத்து அமைச்சர்கள் சிக்கலில் சிக்கி வருகின்றனர். ஏற்கனவே, செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி பறிபோய், சிறை வரை சென்று திரும்பி, மீண்டும் அமைச்சரான நிலையில், தற்போது மீண்டும் அமைச்சர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம், மேடைகளில் தாறுமாக பேசி மக்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட அமைச்சர் பொன்முடிக்கு, கட்சிப் பதவி பறிபோன நிலையில், அமைச்சர் பதவியும் கேள்விக் குறியில் உள்ளது. அதுபோக, அவர் மீது வழக்குகளும் தொடுக்கப்பட்டு, உயர்நீதிமன்றம் அவரை வெளுத்து வாங்கியுள்ளது. அதோடு, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இதேபோல், அமைச்சர் துரைமுருகனுக்கும் சில சிக்கல்கள் உள்ளன. அமைச்சர் பொன்முடியின் மேடைப் பேச்சு சர்ச்சையாகி கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்த நிலையில், தனது பேச்சு ஒன்றிற்கு தாமாக முன்வந்து மன்னிப்பு கோரினார் துரைமுருகன். இது ஒருபக்கம் என்றால், அவரது மகன் கதிர் ஆனந்தின் வழக்கு மறுபுறம் அவருக்கு சிக்கலாக அமைந்துள்ளது.

இப்போது, அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படி, அமைச்சர்கள் வரிசைகட்டி சிக்கலில் சிக்கி வருவது, திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வருடம் தேர்தல் வரும் வேளையில், இன்னும் இந்த பட்டியலில் எந்தெந்த அமைச்சர்கள் உள்ளனரோ என்று திமுகவினர் புலம்பி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget