மேலும் அறிய

Apple's Shift: ஆஹா.. இது செம்ம மேட்டரா இருக்கே.. இந்தியாவுக்கு மாறும் ஆப்பிள்.. இத படிங்க முதல்ல...

இந்தியாவிற்கு ஒரு அற்புத செய்தியை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. வர்த்தகப் போரின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட் இது என்றே கூறலாம். என்ன விஷயம் தெரியுமா.?

ட்ரம்ப் ஆரம்பித்து வைத்த வர்த்தகப் போரால், இந்தியாவிற்கு ஒரு நன்மை விளைந்துள்ளது. ஆம், ஆப்பிள் நிறுவனம் மூலம் அந்த ஜாக்பாட் இந்தியாவுக்கு அடித்துள்ளது. முழு விவரம் என்ன.? தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்...

ஏற்கனவே ஐ ஃபோன் உற்பத்தியில் கலக்கிவரும் ஆப்பிளின் இந்திய தொழிற்சாலை

செல்ஃபோன் என்றாலே முதன்மையாக இருப்பது ஐ ஃபோன் தான். தரத்திலும் சரி, விலையிலும் சரி, டாப் அது தான். உலக அளவில் மக்களிடம் அதிக மவுசு கொண்டது ஐ ஃபோன் என்றே கூறலாம். ஒரு முறை ஐ ஃபோனை பயன்படுத்தும் வாடிக்கையாளர், அதன் பிறகு வேறு ஃபேன்களுக்கு மாறுவதில்லை. இந்த அளவிற்கு மக்களை கவர்ந்துள்ள ஐ ஃபோனை தயாரித்துவரும் ஆப்பிள் நிறுவனம், தனது பெரும்பாலான உற்பத்திக்கு சீனாவையே நம்பியுள்ளது.

ஆனாலும், இந்தியாவில் ஐ ஃபோன்களை தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பெங்களூரு தொழிற்சாலை, விரைவில் செயல்படத் தொடங்கும் என்றும், அதிகபட்சமாக சுமார் 2 கோடி ஐ ஃபோன்களை தயாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சுமார் 70 சதவீத ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐ ஃபோன் விநியோகச் சங்கிலிதான் பங்களிப்பை கொடுத்துவருகிறது. இது ஒட்டுமொத்த வெளிநாட்டு ஏற்றுமதியில் 50 சதவீதத்திற்கு நெருக்கமாக உள்ளது.

கடந்த ஆண்டின் இதே நேரத்தில், ஃபாக்ஸ்கான் நிறுவனத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஐ ஃபோன்களின் எண்ணிக்கையை விட, இந்த ஆண்டு அதே நேரத்தில் 40 சதவீதம் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்தியாவில் கடந்த ஆண்டில், இதுவரை இல்லாத அளவாக, 22 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஐ ஃபோன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உலக அளவில், மொத்த ஐ ஃபோன் உற்பத்தியில், இந்தியா 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருகிறது. அதே நேரம், இந்திய சந்தைகளிலும ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி ஸ்திரமாக வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியாவிலிருந்து சாதனை அளவாக, 30 லட்சத்திற்கும் அதிகமான ஐ ஃபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த உற்பத்தியை இந்தியாவுக்கு கொண்டுவரும் ஆப்பிள் நிறுவனம்

இப்படி, ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் ஆதரவை இந்தியா வழங்கி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியையும் இந்தியாவிற்கு கொண்டுவர, ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம், அதன் பெரும்பாலான உற்பத்திக்கு தற்போது சீனாவையே நம்பியுள்ளது. இந்நேரத்தில், அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் முற்றியுள்ள நிலையில், உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றுமாறு ஆப்பிள் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

அதனால், சீனாவை நம்பியிருப்பதை குறைக்கும் வகையில், இந்தியாவிலேயே மொத்த ஐ ஃபோன் உற்பத்தியையும் மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியா அதற்கு எந்த அளவிற்கு தயாராகிறது, சீனாவுடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை எப்படி முடிகிறது என்பதை பொறுத்துதான், இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்தியாவில் மொத்த ஐ ஃபோனும் உற்பத்தி செய்யப்பட்டால், அது இந்தியாவிற்கு ஜாக்பாட் அடித்த மாதிரிதான். ஐ ஃபோன்களின் விலை குறைவதுடன், ஏராளமான வேலை வாய்ப்புகளும் உருவாகும். இதெல்லாம் நடக்குமா.? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
Embed widget