மேலும் அறிய

வீரளூர் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர்

மயானத்திற்கு இரண்டு வழிகளில் சடலங்களை எடுத்து செல்லும் முறையை ரத்து செய்து ஒரே வழியில் சடலங்களை செல்ல 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்று  மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி மாலை சுடுகாட்டு பாதை இல்லாத காரணத்தினால் பொது வழியில் எடுத்து செல்லப்பட்ட சடலத்தால்  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்களின் வீடுகளின் மீது ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கடலாடி காவல்நிலைய காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்து ஆதிக்க ஜாதியைச் சார்ந்த 21 நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் 250க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீரளூர் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர்

இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பார்வையிடவும், தாழ்த்தப்பட்ட மக்களிடம் நேரடியாக விசாரணை நடத்தவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை ஆணையர் அருண் ஹால்டர் சம்பவ இடத்தில் ஆதிக்க சமூகத்தை சாந்தவர்களால்  சேதப்படுத்திய வாகனங்கள் மற்றும் வீடுகளை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவகத்தில் பாதிக்கப்பட்ட 81 நபர்களிடம் தனி அறையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை ஆணையர் தனிதனியாக விசாரணை மேற்கொண்டு மனுக்களை பெற்றார். மேலும் மாவட்ட ஆட்சியரிடமும் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணை 2 மணிநேரத்திற்கு மேல் விசாரணை நடைப்பெற்றது. 

வீரளூர் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர்


தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை ஆணையர் அருண் ஹால்டர் செய்தியாளர்களை சந்திக்கையில், 21 நூற்றாண்டில் சடலங்களை கொண்டு செல்ல இரு சாலை முறை என்பது ஏற்க முடியவில்லை. இதற்கான காரணம் என்ன ஏன் இவ்வாறு செய்தார்கள் என அரசு அதிகாரிகளுடன் பேசி இதுகுறித்து ஆலோசனைகளை வழங்கி உள்ளோம். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 307 கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும், ஒரு சிலர் கைது செய்யப்படாமல் உள்ளனர் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும்  கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கலவரம் நடைப்பெற்ற  5 நாட்களுக்குள் பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், கலவரத்தால் பாதிக்கப்பட்டு விடுபட்ட நபர்கள் கொடுக்கும் புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும், என தெரிவித்தார். மயானத்திற்கு இரண்டு வழிகளில் சடலங்களை எடுத்து செல்லும் முறையை ரத்து செய்து ஒரே வழியில் அனைத்து தரப்பினரின் சடலங்களும் செல்ல 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்று  மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். 

வீரளூர் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர்

இதில் தமிழக கூடுதல் காவல்துறை இயக்குனர் செந்தாமரை கண்ணன் (சட்ட ஒழுங்கு), வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் சந்தோஷ் குமார், காவல்துறை துணை தலைவர் ஆனி விஜயா, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்,காவல்துறை கண்காணிப்பாளர்கள் ராஜேஷ் கண்ணா, பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ்நாடு வெறும் பெயர் மட்டும் இல்ல.. அதுதான் எங்க அடையாளம்" கொதிக்கும் முதல்வர் ஸ்டாலின்!
IND vs PAK: டாஸில் வென்றது பாகிஸ்தான்! மேட்ச்சில் வெல்லுமா இந்தியா? அணியில் யார்? யார்? தெரியுமா?
IND vs PAK: டாஸில் வென்றது பாகிஸ்தான்! மேட்ச்சில் வெல்லுமா இந்தியா? அணியில் யார்? யார்? தெரியுமா?
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
IND vs PAK: காயத்தால் கஷ்டம்! மோசமான சாதனை படைத்த முகமது ஷமி - இப்படியா நடக்கனும்?
IND vs PAK: காயத்தால் கஷ்டம்! மோசமான சாதனை படைத்த முகமது ஷமி - இப்படியா நடக்கனும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ்நாடு வெறும் பெயர் மட்டும் இல்ல.. அதுதான் எங்க அடையாளம்" கொதிக்கும் முதல்வர் ஸ்டாலின்!
IND vs PAK: டாஸில் வென்றது பாகிஸ்தான்! மேட்ச்சில் வெல்லுமா இந்தியா? அணியில் யார்? யார்? தெரியுமா?
IND vs PAK: டாஸில் வென்றது பாகிஸ்தான்! மேட்ச்சில் வெல்லுமா இந்தியா? அணியில் யார்? யார்? தெரியுமா?
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
IND vs PAK: காயத்தால் கஷ்டம்! மோசமான சாதனை படைத்த முகமது ஷமி - இப்படியா நடக்கனும்?
IND vs PAK: காயத்தால் கஷ்டம்! மோசமான சாதனை படைத்த முகமது ஷமி - இப்படியா நடக்கனும்?
"எங்க மேல சேத்தை வாரி இறைக்கிறாங்க" மோடிக்காக பேசிய இத்தாலி பிரதமர் மெலோனி!
TN Govt SC: ஆளுநர் சும்மாவே இருக்கட்டும், உச்சநீதிமன்றம் சொன்னா போதும் - தமிழ்நாடு அரசின் புது ரூட்..!
TN Govt SC: ஆளுநர் சும்மாவே இருக்கட்டும், உச்சநீதிமன்றம் சொன்னா போதும் - தமிழ்நாடு அரசின் புது ரூட்..!
ஓநாயும் வெள்ளாடும் ஒன்னா இருக்க முடியுமா? ஓபிஎஸ், டிடிவி மீது இபிஎஸ் அட்டாக்!
ஓநாயும் வெள்ளாடும் ஒன்னா இருக்க முடியுமா? ஓபிஎஸ், டிடிவி மீது இபிஎஸ் அட்டாக்!
Pope Francis: உலகளாவிய கிறிஸ்துவர்கள் பெரும் சோகம் - போப் ஃப்ரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம், என்ன ஆச்சு?
Pope Francis: உலகளாவிய கிறிஸ்துவர்கள் பெரும் சோகம் - போப் ஃப்ரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம், என்ன ஆச்சு?
Embed widget