Gold Rate Today: 4 நாளில் 1000 ரூபாய் சரிவு.. தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்னும் குறைஞ்சா நல்லாருக்கும்
gold rate today: தமிழ்நாட்டில் தொடர்ந்து உச்சத்திற்கு சென்ற தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூபாய் 1000 வரை குறைந்துள்ளது.

Gold Rate Today Chennai: இந்தியாவில் கோடீஸ்வர மற்றும் உயர்மட்ட மக்களின் ஆபரணமாக தங்கம் இருந்தாலும், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் அத்தியாவசிய மற்றும் ஆபத்பாந்தவனாக இருப்பது தங்கம், உலகிலேயே அதிகளவு தங்கம் பயன்பாட்டில் உள்ள நாடாகவும் தங்கம் உள்ளது.
தங்கம் விலை:
இந்திய மக்களின் தேவை காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்ட வருகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை உயர்வு என்பது மக்களை அச்சுறுத்தி வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், காசா - இஸ்ரேல் போருக்குப் பின் ஐரோப்பிய நாடுகளின் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தில் முதலீடு செய்வதால் அதன் விலை உச்சத்திற்கு ஏறியது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது.
4 நாட்களில் 1000 ரூபாய் சரிவு:
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை உச்சத்தில் உயர்ந்து கொண்டே இருந்தது. கடந்த 25ம் தேதி வரலாற்றிேல இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு கிராம் தங்கம் விலை ரூபாய் 8 ஆயிரத்து 075க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 64 ஆயிரத்து 600க்கு விற்கப்பட்டது.
இந்த சூழலில், தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களாக சரிந்து வருகிறது. மக்களை மகிழ்விக்கும் அளவிற்கு பெரியளவு சரியாவிட்டாலும் படிப்படியாக குறைந்துள்ளது. சென்னையில் கடந்த 25ம் தேதி ரூபாய் 8 ஆயிரத்து 75க்கு விற்கப்பட்ட சவரன் தங்கம் மார்ச் 1ம் தேதியான இன்று ரூபாய் 7 ஆயிரத்து 940க்கு விற்கப்படுகிறது. கடந்த மார்ச் 25ம் தேதி ரூபாய் 64 ஆயிரத்து 600க்கு விற்கப்பட்ட தங்கம் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூபாய் 1000த்திற்கு குறைந்து ரூபாய் 63 ஆயிரத்து 520க்கு இன்று விற்கப்படுகிறது.
இன்னும் எட்டாக்கனி:
இந்த விலை என்பதே சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இதனால், தங்கம் விலை மேலும் குறையாதா? என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர். கடந்தாண்டு மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்த காரணத்தால் தங்கத்தின் விலை சரிந்தது. அதன்பின்பு, மீண்டும் தங்கத்தின் விலை உச்சத்திற்குச் சென்றது.
இதனால், இந்தாண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் மத்திய அரசு அதுபோன்ற அறிவிப்பை வெளியிடுமாறு? என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதுபோன்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், தற்போது வரை உச்சத்தில் உள்ள தங்கத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

