"தமிழ்நாடு வெறும் பெயர் மட்டும் இல்ல.. அதுதான் எங்க அடையாளம்" கொதிக்கும் முதல்வர் ஸ்டாலின்!
வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலை மெட்ராஸ் பார் கவுன்சில் என பெயர் மாற்றுவது "தமிழ்" மீதான பாஜகவின் வெறுப்பை காட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத் தொழிலின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதல் என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்த மசோதா மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலை மெட்ராஸ் பார் கவுன்சில் என பெயர் மாற்றுவது "தமிழ்" மீதான பாஜகவின் வெறுப்பை காட்டுகிறது என அவர் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல, அது தங்களின் அடையாளம் என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்:
எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், ""சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு" – பேரறிஞர் அண்ணா!
வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத் துறையின் சுயாட்சி மீதான நேரடித் தாக்குதலாகும். கடந்த 2014ஆம் ஆண்டு முதல், பாஜக அரசாங்கம் நீதித்துறையின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தி வருகிறது. முதலில் NJAC மூலம் நீதித்துறை நியமனங்களைக் கடத்த முயற்சிப்பதன் மூலமும், பின்னர் நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களுக்கான கொலீஜியத்தின் பரிந்துரைகளைப் புறக்கணிப்பதன் மூலமும்.
"தமிழ் மீதான பாஜகவின் வெறுப்பு"
இப்போது, பார் கவுன்சில்களை கட்டுப்படுத்துவதன் மூலம், சட்டத் துறையின் சுயாட்சியை அரிப்பதன் மூலம் நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலை மெட்ராஸ் பார் கவுன்சில் என்று பெயர் மாற்றுவது, "தமிழ்" மீதான பாஜகவின் வெறுப்பு இந்த மசோதாவில் தெளிவாகத் தெரிகிறது.
"சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு" – பேரறிஞர் அண்ணா!
— M.K.Stalin (@mkstalin) February 23, 2025
The Advocates Amendment Bill 2025 is a direct assault on the autonomy of the legal profession.
Since 2014, the BJP government has been systematically undermining the independence of the Judiciary—first by…
தமிழ்நாடு என்பது வெறும் பெயரல்ல; அது எங்கள் அடையாளம்! வரைவு மசோதாவிற்கு ஏற்பட்ட தன்னிச்சையான போராட்டங்களும் கடுமையான எதிர்ப்பும் மத்திய அரசை அதை திரும்பப் பெற கட்டாயப்படுத்தினாலும், அது மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் செயல்படுத்தப்படும் என்ற கூற்று கண்டிக்கத்தக்கது.
இந்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக கோருகிறது. மேலும் சட்டத் தொழிலின் சுயாட்சியை மதிக்க மத்திய அரசிடம் முறையிடுகிறது" என பதிவிட்டுள்ளார்.

