பயங்கரவாத நாட்டில்கூட இல்லை, ஸ்டாலின் ஆட்சியில் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை: வாய்சவடால் போதுமா: இபிஎஸ் காட்டம்.!
EPS - Stalin: தமிழ்நாட்டில், நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலினை குற்றம் சாட்டியுள்ளார்.

சங்க காலம் முதலே பெண் இனத்தை போற்றிப் பாதுகாத்து வந்த தமிழக வரலாற்றில், இது போன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது மிகவும் வருத்தத்திற்கும் , கண்டனத்திற்கும் உரியதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
12 பாலியல் வன்கொடுமை:
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதாவது, “ தமிழ்நாட்டில், நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது முதலமைச்சர் ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம்.
சங்க காலம் முதலே பெண் இனத்தை போற்றிப் பாதுகாத்து வந்த தமிழக வரலாற்றில், இது போன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது மிகவும் வருத்தத்திற்கும் , கண்டனத்திற்கும் உரியதாகும் .
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில்
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) February 19, 2025
12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது @mkstalin மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம்.
சங்க காலம் முதலே பெண் இனத்தை போற்றிப் பாதுகாத்து வந்த தமிழக வரலாற்றில், இது போன்ற கருப்பு… pic.twitter.com/0QDncB6XT5
பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என எண்ணும் அளவு, ஸ்டாலின் மாடல் ஆட்சி நடந்து வருகிறது.
பாதுகாப்பை உறுதி செய்க:
இந்த அரசு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்களை உரிய முறையில் தடுக்காமல் ,பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால் , இத்தகைய கொடூரங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன.
இந்த ஆட்சியில் தமிழ்நாடு இப்படி சிக்கிச் சீரழிந்து வருவது குறித்து எந்தக் கவலையுமில்லாத ஸ்டாலின், ‘பெண்களுக்கு பாதுகாப்பு’ என வாய்சவடால் மட்டும் பேசினால் போதுமா?
திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்கிறது, இனியாவது முதலமைச்சர் ஸ்டாலின் மாடல் அரசு விழித்து கொண்டு , பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Also Read: கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து: ஏரியாவை சுற்றி பிளாக் செய்த காவல்துறை, எரிந்து சாம்பலான பைக்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

